இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!* *பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!* *புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!* *சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!* *உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!* *உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!* *எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!* *நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!* *சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..* *சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.* *சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*...

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!! *இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!* *தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!* *வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!* *மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!* *உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!* *மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!* *பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!* *அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.* *எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்....

வாழ்வை வாழ்வோம்

  வாழ்வைப் புதுப்பிப்போம். *கவலையை போக்கும்*  *இராஜதிரவமே புன்னகை.* *புன்னகை..!* *முகத்திற்கு மனதிற்கும்* *அழகு ஊட்டுகிறது.* *புன்னகை..!* *புத்துணர்ச்சி ஊட்டும்*  *மாமருந்து.* *நகைச்சுவை உணர்வு*  *நம்மை உயர்த்துவதோடு,* *சோகத்தை தடுக்கிறது.* *மனிதன் சிரிக்கத்*  *தெரிந்த விலங்கு.* *சிரிப்பு...!* *மனிதன் என்கிற* *அறிமுகத்தைத் தருகிறது.* *நகைச்சுவை துன்பத்தின்* *சுமையை எளிதாக்குகிறது.* *பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.* *சோகங்களிலிருந்து* *மீட்டெடுக்கிறது.* *இடுக்கண்*  *வரும்போதும் நகுவோம்.* *இல்லறம் சிறக்க*  *சிரித்து மகிழ்வோம்.* *நாம் சிரித்து*  *வாழவேண்டும் தவறில்லை.* *பிறரைத்தாக்கி, கிண்டலடித்து* *மகிழக் கூடாது.* *தமிழர் வழியுமல்ல.* *நாகரிகமும் அல்ல.* *”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”* *என வள்ளுவம் கூறுவதை*  *மனதில் ஆழப் பதிய* *வைத்துக்கொள்ள வேண்டும்.* *வீட்டில் அனைவரும்*  *மகிழ்ச்சியாக கூடி* *அமர்ந்து பேசிச்*  *சிரித்து மகிழ்வது*  *நல்ல குடும்பத்திற்கான*  *நாகரிக அடையாளம்.* *நாம் மகிழ்ச்சியில்*  *நமது உடலில் ...

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.. எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு. *ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.* *ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன்.அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.* *அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது.* *இரண்டாவது ...

அமைதியான மனம் பெற

                                        1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்.. பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2.மறக்கவும்... மன்னிக்கவும்... இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. பாராட்டு...

குரங்கும் மனித வாழ்வும்

  குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.* *காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.* *அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.* *அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.* *இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.*  *ஆனால்,* *மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?* *மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?* *மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.* *இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.*  *இதில் புரிந்து கொள்வ...

நாம் தனியாக இல்லை

 *வானத்தைப்பாருங்கள் நாம் தனித்து இல்லை . இந்த பிரபஞ்சம் முழவதும் நம்மிடம் நட்பாக உள்ளது . கனவு காண்பவர்களுக்கும் , உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.* ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு *அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்தி பயணித்தால் ....* *அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம் மனிதனை கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது நிதர்சனம்..!!!!* *உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்....* *எடுத்த எடுப்பிலேயே என்னால் இது முடியுமா என்று எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்...* *தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது....* *போட்டியில் தோற்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானாவன்.* *முயன்றால் உங்களால் முடியும்...* *அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல...* *விடா முயற்சியினால் தான்...!!!!*   *#வாழ்க_வளமுடன்.*

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்*  *சில இழப்புகள்.* *வெளிப்படுத்த*  *முடியாமல் சில* *உண்மைகள்.* *நம்ப முடியாமல்*  *சில துன்பங்கள்.*  *அனுபவிக்க*  *முடியாமல் சில*  *சந்தோஷங்கள்.* *இவை அனைத்தும்*  *நிறைந்ததுதான்*  *வாழ்க்கை...* *வாழ்க்கை*  *எல்லோருக்கும் சீராக* *சென்று விடுவதில்லை..* *ஏற்ற இறக்கம்*  *யாராலும் தவிர்க்க*  *முடியாது..* *தவறி விழும் நிலையிலும்*  *உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..* *ஏனெனில்,* *உங்கள் வேதனையை*  *கொண்டாட.. இங்கு*  *ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!* *உங்களை*  *நீங்களே செதுக்கி*  *கொண்டே இருங்கள்..* *வெற்றி பெற்றால்* *சிலை..!* *தோல்வி அடைந்தால்*  *சிற்பி..!!* *கடனாக இருந்தாலும் சரி..* *அன்பாக இருந்தாலும் சரி..* *திருப்பி செலுத்தினால்*  *தான் மதிப்பு..!!* *குறைகளை தன்னிடம்*  *தேடுபவன் தெளிவடைகிறான்..!* *குறைகளை பிறரிடம்*  *தேடுபவன் களங்கப்படுகிறான்..!!* *ஒருவர் எந்த காரியம்*  *செய்தாலும் அதில்*  *வெற்றி பெற முடியாமல்*  *போவதற்கு ஊக்கமின்மை*  *ஒரு பெரிய ...

மனமும் தன்னுணர்வும்

*மனம் ஒரு பிளவுபட்ட*  *கண்ணாடியைப் போன்றது ..!* *உணர்வுகள் பிளவுபட்டு*  *விடும்போது அவை*  *மனமாக மாறி விடுகிறது ..!* *நீங்கள் உள்ளே*  *பிளவு பட்டிருப்பதால்* *அவை வெளியே*  *வேறுபட்டு தெரிகின்றன ..!* *எதிர் நிலை இல்லாமல்*  *மனம் ஒரு பொருளைப்*  *புரிந்து கொள்வதில்லை ..!* *வேறுபாட்டின்* *வாயிலாகத்தான் எதையும்*  *மனம் பார்க்க பழகியுள்ளது ..* *இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்*  *புரிந்து கொள்ளமுடியாது ..!* *கவலையே இல்லையென்றால்*  *நம்மால் சந்தோஷத்தை*  *புரிந்து கொள்ள முடியாது ..!* *மனதிற்கு எதிர்மறை*  *தென்படும் போதுதான்*  *எதையும் புரிந்து கொள்ளும் ..!* *இருப்பு நிலைக்கு* *எதிர்மறை*  *எதுவும் கிடையாது ..!* *மனம் எதிர்மறையின்*  *வாயிலாகத்தான்*  *இயங்கும் ..!* *ஆனால் இருப்புநிலை*  *ஒன்றையே சார்ந்தது ..!* *மனம் இரட்டை நிலை*  *கொண்டது ...

வலிகள் தான்.வாழ்க்கை

*வாழ்க்கையில்* *ஆயிரம் வலிகளும்,* *வேதனைகளும்,* *துன்பங்களும்* *இருக்கத் தான் செய்யும்.* *வாழ்க்கையை* *ரசித்து வாழ வேண்டும்*   *எல்லாம் கடந்தால் தான்* *சிகரங்களை அடைய முடியும்.* *வலிகளை* *ஏற்றுக் கொள்ளாத*  *வரையில்*  *வாழ்க்கையில்* *வளங்களைக்*  *காண முடியாது.* *பெரும்பாலான*  *வெற்றியாளர்களின்*  *சாதனைகளை*  *உரம் போட்டு வளர்ப்பதே* *அவர்களின்*  *பெருந்தோல்விகளும்*,  *பொறுக்க முடியாத* *வலிகளும் தான்.* *வலி வந்த போது* *தான் நாம் இந்த*  *பூமிக்கு வருகிறோம்.* *வலியோடு தான்* *நம் தாய் நம்மைப்* *பிரசவிக்கிறாள்.* *வலிகளால்* *நிரப்பப்பட்டது தான்* *இந்த வாழ்க்கை.* *உடற்பயிற்சி செய்யும்* *போது ஏற்படும்* *வலிகளை பொறுத்து* *கொண்டு மீண்டும் மீண்டும்* *பயிற்சி செய்யும் போது தான்*  *அழகான உடற்கட்டை*   *பெற முடிகிறது.* *இப்படித் தான்*  *இந்த வாழ்க்கையிலும்*  *வலிகளை ஏற்றுக் கொள்ளும்*  *போது தான் வளமான*  *வாழ்க்கை வாழ முடியும்.*

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

  ''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது! உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம். *''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''* ''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது. துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலு...

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை.... சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும் புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்

சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு

  விழித்துக்கொள் மனிதனே.. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்..! ஆம்...! மனிதமில்லா உலகில் சொத்துக்களுக்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின் சோகங்களுக்கு இருப்பதில்லை..! காசு பணத்திற்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின்  கண்ணீர்  துளிகளுக்கு இருப்பதில்லை..! அடாவடி  மனிதர்களுக்கு  இருக்கும்  மதிப்பு கூட  அன்பானவர்களுக்கு இருப்பதில்லை..! விழித்துக்கொள் மனிதனே..! சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு அதை அன்றன்றே செலவு செய்துவிடு..! கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல யாருக்கு வேண்டுமானாலும்  சிந்தி கொண்டிருக்க..! அன்பு ஒன்றும் அனாதையல்ல தகுதியற்றவரிடத்திலும்  காட்டி ஏமாந்து விட..! விழித்துக்கொள் மனிதனே..! இயந்திர  உலகிற்கு ஏற்ப இசைந்து வாழ  கற்றுக் கொள்..! மனிதாபிமானமற்ற உலகில் மனிதத்தை தேடி காலத்தை கடத்தாதே..! கடத்தினால்...! காலவிரயத்தோடு தொலைவதென்னவோ உன் வாழ்வியலே...!!

வாழ்க்கை

  வாழ்க்கை எப்போது அழகாகிறது உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா? மகிழ்ச்சியாக இருப்பதா? பணம் புகழைத்தேடி தலை தெறிக்க ஓடுவதா? தோல்விகளில் கற்றுக் கொள்வதா? வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா? தன்னலமற்ற அர்ப்பணிப்பா? தத்துவங்களின் அணிவகுப்பா?  இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம். தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை....

மறக்காதீர்கள்

 வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது *நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்*. *ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர்  மதிக்கிறார்னு அர்த்தம்* *நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்*. *பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு*. *ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல...

சோகம்

  எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான். கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது. இதற்கு தான் சொல்வார்கள் ...

அவமானம்

  *சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!* *என்னை* *நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்* *ஓர் ஆயுதம் தான் அவமானம்.* **இது உண்மை என்பது போல்,* *அனைவரின் வாழ்விலும்* *ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.* *நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,* *செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.* *அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.* *அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,* *பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!* *நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?* *மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,

கவலை

 கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.     கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.     கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்த...

பயம், பதற்றம்.தவிர்ப்பது எப்படி?

  சிலர் எப்போதாவது பதற்றமடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் உள்ளன. பயத்தையும் பதற்றத்தையும் பற்றி மருத்துவ ரீதியாக தெரிந்து கொண்டால், அதனைக் கடப்பது சுலபமாகும் அல்லவா?! இங்கே தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்! பயமான அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, நாம் எல்லோருமே பதற்றம் (Anxiety) அடைந்து இருப்போம். இது இயற்கை. அதே சூழ்நிலைகள் நமக்குப் பழகும் போதோ, மாறும் போதோ அல்லது அதிலிருந்து விலகும் போதோ பதற்றமும், பயமும் நம்மை விட்டுப் போய் விடுகிறது. கஷ்டமான சூழ்நிலையிலிருந்து விலகிய பின்னும் பதற்றம் தொடர்ந்து நீடித்தாலோ, திடீரென காரணமில்லாமல் ஏற்பட்டாலோ அல்லது அதன் வீரியம் அதிகரித்தாலோ, அது அன்றாட வாழ்க்கை முறையில் பெருமளவில் பாதித்து உடல், மன நலக் கேடுகளை விளைவிக்கிறது. பலருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பினும், பெரும்பாலானோர் உதவி பெறுவதில்லை. பதற்றம் உடலுக்குக் கெடுதலா? ஓரளவு பதற்றம் நல்லது. அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமானதும் கூட! இது எதிர்பாராத ஆப...

நிதானம்

  உலகத்துலேயே நாம விரும்பாத ஒன்னு, நமக்கு இலவசமா கிடைக்குது'னா அது அட்வைஸ் ஒன்னு தான். நம்மை பிடிக்காத உறவினர்களிடம் பேசும் போது நாம் எப்படி வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசினாலும், இறுதியில் அதை அப்படியே திசை திருப்பி விடுகிறார்கள். இன்றைய மனிதர்களிடம் படிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் பண்பாடு குறைவாக இருக்கிறது. இது தான் இன்றைய நெருக்கடிகளுக்கு எல்லாம் மூலக் காரணம். படிப்பதோடு பண்பாட்டையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க முயற்சி செய்வோம். கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை. கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமிருந்து எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், நிதானமாக பிரச்சினைகளை அணுகி வெற்றி காண்பவர்களே சிறந்த மனிதர்கள்.

பெறுமதி

  கருத்ததரங்கொன்றில் பேச எழுந்த பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றைத் தூக்கிப் பிடித்துச் சபையோருக்குக் காட்டினார். "இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?" என அவர் அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின. பின்னர் அவர் மெழுகுவர்த்தியொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார். சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது. "இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார். சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர். "நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர், தனது கையிலிருந்த மோதிரத்தைக் கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார். பின்னர் அதனை உயர்த்திப் பிடித்து, "இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா?" எனக் கேட்டார். அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் தம் கைகளை உயர்த்தினர். "சரி, இப்போது நான...

சமயோசிதம்

 ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு, வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து ஒரு புகார் வந்துகொண்டே இருந்தது. புகார் என்னவென்றால், சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் கவர் மட்டுமே உள்ளது என்பதுதான். கம்பெனி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காண முடிவுக்கு வந்து, நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒரு அறையில் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். நிர்வாகத்தின் முதல்வர், "சில சமயம் சோப்புகள் இல்லாமல் வெறும் காகிதம் மட்டும் இயந்திரத்தால் கவர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கூறுங்கள்" என்று அங்குள்ள பொறுப்பாளர்களிடம் கூறினார். அதில் ஒருவர், "நாம் ஒவ்வொரு இயந்திரத்தின் பக்கத்திலும் ஒரு வேலையாளை நிறுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சோப்பாக பரிசோதித்து, பின் சோப்பு இல்லாமல் வரும் வெறும் காகிதத்தை தனியாக நீக்கிவிட வேண்டும்" என்று ஆலோசனைக் கூறினார். மற்றொருவர்,"நாம் அவர்களுக்கு அதற்காகவே தனி சம்பளம் கொடுக்க வேண்டியது இருக்கும். இது வேலைக்காகாது. வேண்டுமென்றால் இவ்வாறு செய்யலாம், சோப்பின் எடையைக் கணக்கிடும் ஒரு இயந்திரத்தை, நம் இயந்திரங்களோடு இணைத்து ...

யாரை நம்புவது....??

  1.உங்களுக்குள் இல்லாதது என்ன? 2.சொல்புத்தி சுயபுத்தி இரண்டுமே நமக்கு உண்டு 3.உங்களுக்குள் திறமை உண்டு என்பதை  யார் நிருபித்தது?? 4.பிறக்கும்போதே பணக்காரன் வெற்றியாளன் என்று யாரும் நிர்ணயிக்கவில்லை 5.அனைவரையும் பணக்காரனாக கடவுள் படைக்கவுமில்லை 6.எப்படி சாத்தியம் இது?? 7.தனக்காக ஒரு துறையை தேர்ந்தெடுத்து  அதில் முயற்சியும் பயற்சியும் செய்தவர்கள் தான் இன்று வெற்றியாளர்கள் 8.உங்களுக்கு நீங்கள்தான் நண்பன் 9.ஆறுதலுக்கும் அறிவுரைக்கும் பக்குவத்திற்கும் நீங்களே போதுமானவர்கள் 10.அறிவுரையை கேட்டு திருந்துபவரும் உண்டு திரும்பவும் தவறு செய்பவர்களும் உண்டு 11.உங்கள் மனசாட்சி அவனே உங்கள் உற்ற தோழன் 12.இதுவரை நடந்த தவறுகளை நினைத்துப்பாருங்கள் 13.நடந்த தவறுகளுக்கு 99%நாம்தாம் பொறுப்பாளி 14.ஒப்புக்கொள்ள முடியுமா??? முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் 15.தன்நிலை இது நான்தான் என்று எப்போது உணர்கிறோமோ அன்றுதான்  நாம் முழுமனிதனாகிறோம் 16.உங்களை நம்புங்கள் அதுதான் உங்களின்  முதல் வெற்றி??

வாழ்க்கை

  மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம்.  விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம். அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும். அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது.  கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான். சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான். நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.  அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும். நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!

திறமை

  மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம்.  விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம். அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும். அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது.  கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான். சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான். நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.  அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும். நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!

கால நேரம் என்பது

                                "காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழ மொழிகள் நாம் அறிந்ததே.  வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள்.  அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால் உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள். காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனை யாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொதுவானது.  கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது.  "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டும்  என்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப் படுகிறது.  உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொ...

தன்னம்பிக்கை பதிவு.

*நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்.* *வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி.* *ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடை பிடிக்க வேண்டி உள்ளது.*  *இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது.*  *ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை.*  *காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இது வரை இல்லை என்பது தான் சத்தியம்.*  *நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக் கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பது தான்.*  *மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக் கூடியது அன்று.*  *நமக்காக நாமே உருவாக்கிக் கொள்வதே நிலைய...

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂ *சிக்கல் இல்லாத*  *மனிதன்*  *உலகில் இல்லை.* *சிக்கலை கண்டு*  *மிரளாமல்,* *சிக்கலின் காரணத்* *தன்மை, ஆராய்.* *திறக்க முடியாத*  *பூட்டே கிடையாது.*  *சரியான சாவியைக்*  *கண்டுபிடிக்காதவர்கள்* *தான் அதிகம் உண்டு.* *தீர்க்க முடியாத துன்பம்* *எதுவும் கிடையாது.*  *தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.* *இன்று கவலையாகத்* *தெரியாவது,*  *நாளை மகிழ்வாய்* *மாறும், மலரும்.* *எந்தக் கவலையையும்*  *ஆராய்ந்து சரியான* *தீர்வைக் காண்பதே* *வாழ்வின் உன்னதம்.* 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️        *.*
 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன் *"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று, 🍁அறிஞர் சொன்னார்,* *உன் அறையை செக் பண்ணு, என்று 🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது மேற் கூரை சொன்னது* உன் எண்ணங்களை உயர்வாக வை என்று 🍃காத்தாடி சொன்னது,* என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று *🍃கடிகாரம் சொன்னது,  நேரத்தை மதிக்கனும் என்று *🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள்  என்று. 🍃மணிபர்ஸ் சொன்னது ,* வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று 🍃கண்ணாடி சொன்னது,* உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று . 🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று  என்று *🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று தரை சொன்னது,* எப்பவும் கீழே பணிவாக இரு என்று 🍃படிக்கட்டு சொன்னது,* வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை  என்று *இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*

விவேகம்

*அறிவான வேகம்* *விவேகம்.* *எண்ணித் துணிவதும்..!* *சிந்தித்துத் தெளிவதும்..!* *முனைப்பாய் செய்வதும்..!* *விவேகம்.* *வெற்றியோ தோல்வியோ*  *இறுதி வரை போராடிச்* *செயல் ஆற்றுவதும்* *விவேகம்* *துணிந்த பிறகு மீண்டும்,* *பின் வாங்குவதையோ,* *இழுக்கு என்று மனதுக்குள்*  *நினைப்பதும்.* *விவேகம்* *விவேகம் உள்ளவர்கள்* *விவேகி.* *செயலிலே வேகம்,*  *சிந்தையிலே விவேகம்.* *சீரிய கட்டுப்பாட்டிற்குள்* *செயல்படுவார்கள்.* *விவேகி* *விவேகியிடம்* *பகுத்தறிவு, புத்திக் கூர்மை,* *மதிநுட்பம், ஞானம்* *அறிவு, சாமர்த்தியம்,* *ஒருசேர இருக்கும்* *வாழ்வில் விவேகம்*  *தீமையைக் குறைத்து* *நன்மையை நாடுவது.* *கடலின் ஆழத்தில்*  *முத்தைக் கண்டு பிடிப்பது* *பிரச்சனைகளின்* *ஆழத்தில் முடிவின்* *தீர்வைக் கண்டு பிடிப்பது* *விவேகம்.* *விவேகம்* *ஏட்டுச் சுரைக்காய் அல்ல.* *வாழ்வில் பல* *நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து* *வந்தவர்களே* *விவேகிகள்.* *ஆம்.,* *இருள் தடுமாறச்* *செய்கிறது.*  *விவேக வெளிச்சம்* *உற்சாகம் தருகிறது.* *அபரிதமான*  *நம்பிக்கையைத்* *தருவதும்* *விடியலைக்* *காண்பதும்* *வி...

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!* தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!* *கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!* *பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!* *ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!* *வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!* *தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!* *மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...* *உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உய...

முக்கியமானவன்

☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்? ☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம். ☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும் வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது. ☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம். ☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். ☮☮☮☮☮☮☮☮☮☮☮   நல்லதே நடக்கும்

நாம்

 🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞 🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது. 🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும். 🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது. 🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். 🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.