தவிர்க்க முடியாமல்*
*சில இழப்புகள்.*
*வெளிப்படுத்த*
*முடியாமல் சில*
*உண்மைகள்.*
*நம்ப முடியாமல்*
*சில துன்பங்கள்.*
*அனுபவிக்க*
*முடியாமல் சில*
*சந்தோஷங்கள்.*
*இவை அனைத்தும்*
*நிறைந்ததுதான்*
*வாழ்க்கை...*
*வாழ்க்கை*
*எல்லோருக்கும் சீராக*
*சென்று விடுவதில்லை..*
*ஏற்ற இறக்கம்*
*யாராலும் தவிர்க்க*
*முடியாது..*
*தவறி விழும் நிலையிலும்*
*உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..*
*ஏனெனில்,*
*உங்கள் வேதனையை*
*கொண்டாட.. இங்கு*
*ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!*
*உங்களை*
*நீங்களே செதுக்கி*
*கொண்டே இருங்கள்..*
*வெற்றி பெற்றால்*
*சிலை..!*
*தோல்வி அடைந்தால்*
*சிற்பி..!!*
*கடனாக இருந்தாலும் சரி..*
*அன்பாக இருந்தாலும் சரி..*
*திருப்பி செலுத்தினால்*
*தான் மதிப்பு..!!*
*குறைகளை தன்னிடம்*
*தேடுபவன் தெளிவடைகிறான்..!*
*குறைகளை பிறரிடம்*
*தேடுபவன் களங்கப்படுகிறான்..!!*
*ஒருவர் எந்த காரியம்*
*செய்தாலும் அதில்*
*வெற்றி பெற முடியாமல்*
*போவதற்கு ஊக்கமின்மை*
*ஒரு பெரிய காரணமாக* *கருதப்படுகின்றது.*
*ஊக்கம் இல்லாமல்*
*செய்யும் எந்த காரியமாக*
*இருந்தாலும்,*
*அது முழுமையும்*
*பெறுவதில்லை,*
*வெற்றியும்*
*பெறுவதில்லை.*
*நீங்கள்*
*சிறியதோ, பெரியதோ,*
*நிச்சயம் ஊக்கத்தோடு*
*ஒரு காரியத்தை செய்ய*
*முயலும் போது,*
*அதில் வெற்றியும்,*
*மகிழ்ச்சியும் உங்களைத்*
*தேடி வரும் என்பதில்*
*சந்தேகம் இல்லை.*