இடுகைகள்

அக்டோபர் 20, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எமது உடன்பிறப்புகளே

  1.1 மில்லியன் மக்களை, வடக்கு காஸாவிலிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல். அதற்கு வெறும் 24மணி நேர அவகாசமே கொடுத்திருக்கிறார்கள். மூர்க்கமான வான்வழித் தாக்குதலை அது இன்னும் நிறுத்தவில்லை. காஸா எல்லாத் திசைகளிலும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. 'மனிதாபிமான வழிப்பாடு' ஒன்றைத் திறந்து விடுமாறு கோரியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. அகப்பட்ட வாகனங்களிலும் கார்களிலும் கழுதை வண்டிகளிலும் கால்நடையாக நடந்தும், பல்லாயிரக் கணக்கானோர் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என்று எல்லோருமே அடக்கம். எங்கே போகிறோம் என்று தெரியாமல், போக்கிடமின்றிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மேலும் பல்லாயிரக் கணக்கானோர், தத்தமது வீடுகளை விட்டு வெளியேறாமல், வருவது வரட்டும் என்றிருக்கிறார்கள். காஸா ஏற்கனவே சன அடர்த்தி மிக்க பிரதேசம். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை. தெற்கு காஸாவில் போதியளவு உட்கட்டுமானங்கள் கூட இல்லை. அங்கே போய் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இலட்சக் கணக்கானோரை அகதி முகாம்களில்...