08 அக்டோபர் 2020

வாழ்க்கை

 



மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம். 


விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம்.


அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும்.


அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது. 


கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான்.


சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான்.


நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம். 


அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும்.


நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!


திறமை

 



மற்றவர்களைப் போல எனக்கு அபாரத் திறமை இல்லையே என நம் மனது வருந்தலாம். 


விசாலமான அறிவும், பழுத்த அனுபவமும் இல்லையே என மனது ஏங்கலாம்.


அவையெல்லாம் நமக்கு நிச்சயம் தேவைதான். அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் எப்போதும் முயல வேண்டும்.


அதேவேளை, நமது அறிவு, ஆற்றல் எந்தளவு இருக்கிறது என்பதை விட, அவற்றால் மனித குலத்துக்கு எவ்வளவு பயன் கொடுத்திருக்கிறோம் என்பது அதை விட முக்கியமானது. 


கற்றுத் தேர்ந்த அறிவால் பிறருக்குப் பயனில்லை எனில், வியக்க வைக்கும் ஆற்றல்களால் உலகு நன்மையடையவில்லையெனில் அவை இருந்தும் இல்லாதது போலத்தான்.


சிலபோது அந்த அறிவும் ஆற்றலும் அற்புதமாக வெளிக்காட்டப்படும் ஆனால் அதன் மூலம் மனித குலம் எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளாது என்றால் அதுவும் அப்படித்தான்.


நம்மிடம் இருக்கும் அறிவும் ஆற்றலும் மிகக் குறைந்ததாக இருந்தாலும், அவற்றால் மனித குல நலனுக்காக, நிம்மதியான வாழ்வுக்காக முடிந்த பங்களிப்பை வழங்குவோம். 


அதன் வடிவங்கள் வேறுபடலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் மற்றவர்கள் பயன் பெறுவதாக இருக்க வேண்டும்.


நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பெறுமதி வாய்ந்தவனே!