இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கணிணி வன் பொருள் மென்பொருள்

படம்
                                                                                     கணிணி வன் பொருள் மென்பொருள்                  Bios (Basic input &output system) Bios ஆனது ஒரு கணிணியின்  device  களின்  தொழிற்பாட்டினை  முழுமையாக   இயக்குகின்ற  செயன்முறை      மெண்பொருளாகும். Advance Cpu configuration,                                                                                                              ...

கவிக்கோ வரிகள்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான் வெளுப்பது உனது விடியலில்லை முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு முடிதல் என்பது எதற்குமில்லை மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும் மாலை சூட்டலும் மணமில்லை இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல் இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ கொண்ட அழுக்கோ போகவில்லை அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ அளித்த தெதுவும் உனதல்ல உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும் உடலுக் கணிவது உடையல்ல விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய் தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத் தின்னும் பசிகளுக் கிரையாவாய் வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும் வெற்றியிலே தான் தோற்கின்றார் ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன் அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய் கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக் கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய் ‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய் ‘ஏன்’ ? என்பாய் இது கேள்வி...

மு; மேத்தா

படம்
                                 கண்ணீர்ப் பூக்கள்    எந்த தேவதையாலும் அவன்  ஆசிர்வதிக்கப்படவில்லை  ஆனால்  எல்லாச் சாத்தான்களாலும்  இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்! எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை  ஆனால்  எல்லாப் புயல்களோடும் அவன்  போராடியிருக்கிறான்! மகிழ்ச்சி மலர்களை அவனால்  பறிக்க முடியவில்லை  அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம்  கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன. என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை  சோகச் சிலுவைகளை நெஞ்சில்  சுமந்து கொண்டு  அவன் நடக்கிறான்  அழுகைக்குப் பிறகும் ஓர்  அணிவகுப்பு நடத்துகிறான்! சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது  கவிப்பயணம் காலசைக்கிறது  துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன! பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன ! என் வாழ்க்கை நாடகத்தில்  எத்தனையோ காட்சிகள்  எத்தனையோ காட்சிகளில்  எழமுடியா வீழ்ச்சிகள்! மண் வாழ்க்கை மேடையில் நான்  மாபெரிய காவியம்  மாபெ...

மொஹிதீன் பெக்

படம்
                                                                  மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி: என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள் பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள் காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு, இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும் வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும் திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்ப...