17 நவம்பர் 2020

மனமும் தன்னுணர்வும்



*மனம் ஒரு பிளவுபட்ட* 

*கண்ணாடியைப் போன்றது ..!*


*உணர்வுகள் பிளவுபட்டு* 

*விடும்போது அவை* 

*மனமாக மாறி விடுகிறது ..!*


*நீங்கள் உள்ளே* 

*பிளவு பட்டிருப்பதால்*

*அவை வெளியே* 

*வேறுபட்டு தெரிகின்றன ..!*


*எதிர் நிலை இல்லாமல்* 

*மனம் ஒரு பொருளைப்* 

*புரிந்து கொள்வதில்லை ..!*


*வேறுபாட்டின்*

*வாயிலாகத்தான் எதையும்* 

*மனம் பார்க்க பழகியுள்ளது ..*


*இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்* 

*புரிந்து கொள்ளமுடியாது ..!*


*கவலையே இல்லையென்றால்* 

*நம்மால் சந்தோஷத்தை* 

*புரிந்து கொள்ள முடியாது ..!*


*மனதிற்கு எதிர்மறை* 

*தென்படும் போதுதான்* 

*எதையும் புரிந்து கொள்ளும் ..!*


*இருப்பு நிலைக்கு*

*எதிர்மறை* 

*எதுவும் கிடையாது ..!*


*மனம் எதிர்மறையின்* 

*வாயிலாகத்தான்* 

*இயங்கும் ..!*


*ஆனால் இருப்புநிலை* 

*ஒன்றையே சார்ந்தது ..!*


*மனம் இரட்டை நிலை* 

*கொண்டது ...