வலிகள் தான்.வாழ்க்கை
*வாழ்க்கையில்* *ஆயிரம் வலிகளும்,* *வேதனைகளும்,* *துன்பங்களும்* *இருக்கத் தான் செய்யும்.* *வாழ்க்கையை* *ரசித்து வாழ வேண்டும்* *எல்லாம் கடந்தால் தான்* *சிகரங்களை அடைய முடியும்.* *வலிகளை* *ஏற்றுக் கொள்ளாத* *வரையில்* *வாழ்க்கையில்* *வளங்களைக்* *காண முடியாது.* *பெரும்பாலான* *வெற்றியாளர்களின்* *சாதனைகளை* *உரம் போட்டு வளர்ப்பதே* *அவர்களின்* *பெருந்தோல்விகளும்*, *பொறுக்க முடியாத* *வலிகளும் தான்.* *வலி வந்த போது* *தான் நாம் இந்த* *பூமிக்கு வருகிறோம்.* *வலியோடு தான்* *நம் தாய் நம்மைப்* *பிரசவிக்கிறாள்.* *வலிகளால்* *நிரப்பப்பட்டது தான்* *இந்த வாழ்க்கை.* *உடற்பயிற்சி செய்யும்* *போது ஏற்படும்* *வலிகளை பொறுத்து* *கொண்டு மீண்டும் மீண்டும்* *பயிற்சி செய்யும் போது தான்* *அழகான உடற்கட்டை* *பெற முடிகிறது.* *இப்படித் தான்* *இந்த வாழ்க்கையிலும்* *வலிகளை ஏற்றுக் கொள்ளும்* *போது தான் வளமான* *வாழ்க்கை வாழ முடியும்.*