*வாழ்க்கையில்*
*ஆயிரம் வலிகளும்,*
*வேதனைகளும்,*
*துன்பங்களும்*
*இருக்கத் தான் செய்யும்.*
*வாழ்க்கையை*
*ரசித்து வாழ வேண்டும்*
*எல்லாம் கடந்தால் தான்*
*சிகரங்களை அடைய முடியும்.*
*வலிகளை*
*ஏற்றுக் கொள்ளாத*
*வரையில்*
*வாழ்க்கையில்*
*வளங்களைக்*
*காண முடியாது.*
*பெரும்பாலான*
*வெற்றியாளர்களின்*
*சாதனைகளை*
*உரம் போட்டு வளர்ப்பதே*
*அவர்களின்*
*பெருந்தோல்விகளும்*,
*பொறுக்க முடியாத*
*வலிகளும் தான்.*
*வலி வந்த போது*
*தான் நாம் இந்த*
*பூமிக்கு வருகிறோம்.*
*வலியோடு தான்*
*நம் தாய் நம்மைப்*
*பிரசவிக்கிறாள்.*
*வலிகளால்*
*நிரப்பப்பட்டது தான்*
*இந்த வாழ்க்கை.*
*உடற்பயிற்சி செய்யும்*
*போது ஏற்படும்*
*வலிகளை பொறுத்து*
*கொண்டு மீண்டும் மீண்டும்*
*பயிற்சி செய்யும் போது தான்*
*அழகான உடற்கட்டை*
*பெற முடிகிறது.*
*இப்படித் தான்*
*இந்த வாழ்க்கையிலும்*
*வலிகளை ஏற்றுக் கொள்ளும்*
*போது தான் வளமான*
*வாழ்க்கை வாழ முடியும்.*