15 ஆகஸ்ட் 2021

ஒரு கணிணியின் BOOT தொழிற்பாடு

                                                              BOOT 

Boot setting


                    Boot device priority                                                                                                                                        ஆனது  ஒரு கணிணியின்  BOOTதொழிற்பாட்டை 

                இயக்கக்கூடியது  இவற்றில் 

              Hard Device /CD Rom/USB Device/DVD/Pen ஆகியவை உள்ளடங்கும்

              இவற்றில் 

           1st Boot

            2nd Boot

             3rd Boot

             என்ற அமைப்பில் எமக்குத்  தேவையான வாறு  Boot Device                                களை தேற்வு    செய்யலாம்.

      குறிப்பு; ஒன்றுக்கு மேற்பட்ட  Hard drive ,CD rom கள் இறுப்பின் அவற்றையும்

                 1,2,என்றவாறு தெரிவு செய்யலாம்.


security;

                            Security ஆனது  BIO இற்கான    password  இனையும்  Hard drive                         இற்கான  super password         இனையும்   இவற்றின்    மூலம்    கொடுத்துக்கொள்ளலாம்,        தேவை ஏற்படின்  அவற்றை அழித்துக்கொள்ளவும் முடியும்.


Exit option;

Load  optimal Difault;

இதானது ஒரு BIOS
இன்  சகல நிலையையும்  ஆரம்ப நிலைக்கு கொண்டு வரக்கூடியது.


Discard Change;

இதானது  BIOS இல் நாம் செய்த ஒரு மாற்றத்தை  நாம் விரும்பாத போது அல்லது BIOS 

இற்க்கு உகந்தது அல்ல என்று கருதும்போது  எமக்கு Discard change மூலம் அதனை இரத்துச் 

செய்து கொள்ளவும் முடியும் பல கணிணிகளில்  Dis card Change  இற்கு  F9 key இனை 

உபயோகிக்கலாம்.

SAVE CHANGE AND EXIT;


இதில் Bios இல் நாம் செய்யும் மாற்றங்களை save  செய்து   BIOS இல் இருந்து வெளியேருவதற்கான ஒரு செயன்முறை ஆகும் இத்ற்க்கு  பல கணிணிகளில்

F10 key இனை உபயோகிக்கலாம்.


    

05 ஆகஸ்ட் 2021

RANDOM ACCESS MEMORY


 

RAM இன் பயன்பாடும்,தொழிற்பாடும்

ஒரு கணிணி அல்லது மொபைல் போண் பெருமதி மிக்கதாக அமைவது

RAM இன் கொள்லளவைக் கொண்டுதான். ஒரு கணிணியின் அதிவேகமான

இயக்கத்துக்கு RAM இன் கொள்லளவுதான் காரணமாகிரது (1GB 2GB.........)

RAM என்பதன் ஆங்கில விளக்கம் Random Access Memory.                                               RAM என்பது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு. பொதுவாக Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும். RAM என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல, கணினி அல்லது மொபைல் OFF  செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். ஆகையால் தான் RAM Volatile Storage என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஒரு கணினி அல்லது மொபைல் இயங்கும் போது அதற்க்கு தேவைப்படுகின்ற தரவுகளை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரியை கணிணியால் எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.  ஒரு கோப்பின் அளவு அதிகமாக

அதாவது (RAM இன் அளவைவிட) இருக்கும்போது கணிணி ஒழுங்காக

இயங்காது அதையே நாம் SLOW, HANG என்று கூருவோம்.

                 மறுபக்கம   Non Volatile Storage என அழைக்கப்படுகிறது. இதில் இதில் சேமித்துவைக்கப்படும் சிறிய கோப்புகள் கணிணி ஓஃப்

செய்யப்பட்டாலும் அழிவதில்லை                                                                RAM இரண்டுவகைப்படு

1.SRAM---StaticRam

2.DRAM---DynamicRam                

Static RAM (SRAM) – இதுவும் Volatile Storage தான். பொதுவாக இவை Cache அல்லது registers போன்றவற்றில் பயன்படும். இவை Dynamic RAM (DRAM) விட அதிவேகமாக செயல்படக்கூடியவை. மேலும் இவை Dynamic RAM (DRAM)  போன்று refresh ஆவது இல்லை.

 

Dynamic RAM (DRAM) – குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தன்னிடம் இருக்கின்ற தகவலை refresh செய்துகொண்டே இருக்கும்.

27 ஜூலை 2021

கணிணி வன் பொருள் மென்பொருள்


                                           

                                         கணிணி வன் பொருள் மென்பொருள்                 

Bios (Basic input &output system)

Bios ஆனது ஒரு கணிணியின்  device  களின்  தொழிற்பாட்டினை  முழுமையாக   இயக்குகின்ற 

செயன்முறை      மெண்பொருளாகும்.


Advance

Cpu configuration,                                                                                                                                                                      CPU   (central prosessering unit)

இது ஒரு கணிணியின் தொழில்பாட்டு மையமான  Cpu இன் தொழிற்படுகின்ற சகல அமைப்பினையும் இது கொண்டிருக்கிறது.

Chipset Configuration,

                                              இதானது video card, Audio card, video  cip or audio chip, Ram card  ஏனைய அணைத்து Cip களையும் அவைகளின் அணைத்து  செட்டின்ஸ்களையும்    இச்  cip  Set Configuration கொண்டுள்ளது.


IDe Configuration

                                      இதானது ஒரு கணிணியின்  Hard drive,CD rom ஆகியவற்றின்  தொழில் பாட்டினை   கண்பிக்கக்கூடியது, இவை   IDE/SATA  ஆகிய இரு தொழிற்பாட்டினை உள்ளடக்கி இருக்கும்  இதில் எமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ல முடியும்.


Configure Super IO  Chipset.

                                                     இதனது ஒரு       mother bord இன்    சகல  PORT களின்      power supply யுடன் ஏனைய அமைப்புகளை கொண்டிருக்கிறது.


USB  Configuration

                                  இதானது USB Divaice களின் தொழிற்பாட்டினை காட்டக் கூடியது   இவற்றில்  எமக்குத் தேவையானவறு      settings change களை ஏற்படுத்திக் கொள்ல முடியும்.


Hardware health event monitoring

                                         கணிணியின்     mother board இன் உஷ்ன அளவையும்  அதனை ஒரு நிலையில் பேணக்கூடிய  கணிணி  ஃபேன்,வேகம் ஆகியவற்றிணையும்  mother bord  

இன்  மின்சார   தொழிற்பாட்டினையும்  காட்டக்கூடியது.




23 ஜூலை 2021

கவிக்கோ வரிகள்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’ ? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?


கவிக்கோ வரிகள்

22 ஜூலை 2021

மு; மேத்தா


 



                               கண்ணீர்ப் பூக்கள்  

எந்த தேவதையாலும் அவன் 

ஆசிர்வதிக்கப்படவில்லை 

ஆனால் 

எல்லாச் சாத்தான்களாலும் 

இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!


எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 

ஆனால் 

எல்லாப் புயல்களோடும் அவன் 

போராடியிருக்கிறான்!


மகிழ்ச்சி மலர்களை அவனால் 

பறிக்க முடியவில்லை 

அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 

கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.


என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 


சோகச் சிலுவைகளை நெஞ்சில் 

சுமந்து கொண்டு 

அவன் நடக்கிறான் 

அழுகைக்குப் பிறகும் ஓர் 

அணிவகுப்பு நடத்துகிறான்!


சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 

கவிப்பயணம் காலசைக்கிறது 

துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!

பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழமுடியா வீழ்ச்சிகள்!


மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!


ஆடுகின்ற பேய்மனதில் 

ஆயிரமாம் ஆசைகள் 

ஆயிரமாம் ஆசைகட்கு

அனுதினமும் பூசைகள் !


சூடுகின்ற மாலைகளோ 

தோள்வலிக்கும் தோல்விகள் 

தோள்வலிக்கும் தோல்விகள் நான் 

தொடங்கிவைத்த வேள்விகள்!


காலமெனும் தாளிலொரு 

கதையெழுத வந்தவன் 

கதையெழுத வந்ததனால் 

கனவுகளில் வெந்தவன்!


ஓலமிடும் சிந்தனையால் 

உறங்குவதை விட்டவன் 

உறங்குவதை விட்டதனால் 

உடல் சிதைந்து கெட்டவன்!


மன்னவரின் சபைகள்தமை 

மயங்க வைத்த பாவலன் 

மயங்கவைத்த வேளையிலும் 

மயங்கிவைத்த கோவலன்!


மின்னும் விழிப் பொற்குளத்தில் 

மீன்பிடிக்கப் போனவன் 

மீன்பிடிக்கப் போனதனால் 

வேதனைக்குள் ளானவன் !


ஈரவிழிக் காவியங்கள் 

எழுதி வெளி யிட்டவன் 

எழுதி வெளி யிட்டதனால்  

இதயங்களைத் தொட்டவன்!


ஓரவிழிப் பார்வைகளின் 

ஊர்வலத்தில் சென்றவன் 

ஊர்வலங்கள் சென்றபோது 

ஒதுங்கிவந்து நின்றவன்!


பாயும் நதி மீதிலொரு 

படகினை நான் ஓட்டினேன் 

படகை நன்கு ஓட்டியதால் 

பரிசுகளை ஈட்டினேன்!


ஆய பல சுமைப் பரிசை 

அப்படகில் ஏற்றினேன் 

அப்படகு கவிழ்ந்ததனால் 

அலைநடுவே மாட்டினேன்!



வரங்கொடுக்கும் தேவதைகள் 

வந்தபோது தூங்கினேன் 

வந்தபோது தூங்கிவிட்டு 

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!


கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 

கைகழுவி வீசினேன் 

கைகழுவி வீசிவிட்டுக் 

காலமெல்லாம் பேசினேன்!


புல்லர்களின் மனக்குகையில் 

புனித விதை விதைத்தவன் 

புனித விதை விதைத்தபோது 

புதை மணலை மிதித்தவன்!


செல்லரித்த மானுடத்தைச் 

சீர்திருத்தப் பாடினேன் 

சீர்திருத்தப் பாடியதால் 

பேரெதிர்ப்பைத் தேடினேன்!



அற்பர்களின் சந்தையிலே 

அன்பு மலர் விற்றவன் 

அன்பு மலர் விற்றதற்குத் 

துன்ப விலை பெற்றவன்!


முட்புதரில் நட்பு மலர் 

முளைக்குமென்று நம்பினேன் 

முளைத்து வந்த பாம்புகளே 

வளைத்த போது  வெம்பினேன்!


நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 

நெருப்பினில் கை விட்டவன் 

நெருப்பினில் கை விட்டதனால் 

நினைவுகளைச் சுட்டவன்!


வஞ்சி மலர் ஊமை மன 

மாளிகையின் அதிபதி!

மாளிகையின் அதிபதிக்கு 

மனதில் இல்லை நிம்மதி!



சோலைவழி வீதிகளில் 

சுகமளிக்கும் பார்வைகள் 

சுகமளிக்கும் பார்வைகள் என் 

சுதந்திரத்தின் போர்வைகள்!


பாலைவன மணல் வெளியில் 

பாடகனின் யாத்திரை 

பாடகனின் யாத்திரையே 

பசித்தவர்க்கு மாத்திரை!


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!

                   

18 ஜூலை 2021

மொஹிதீன் பெக்


                                                                 

மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி:

என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள்

பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள்

காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு,

இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும்

வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும்

திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக

பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்பது  வேரு கதை,)  இப் பாடலை பாட

முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  பெக்  பின்பு இது புத்தரின் மகிமைபறறிய பாடல் என்பதால்

ஒரு முஸ்லிம்  பாடுவதில் குழுவில்  சிலருக்கு  பிடிக்காததால்  வேரு பாடகர் இந்தியாவிற்கு

அழைத்து செல்லப்பட்டுள்ளார் (அப்போது ஒலிப்பதிவு கூடங்கள் இலங்கையில் இல்லாத காலம்)

பாடலுக்கு அந்தப்பாடகரின்  குரல் பொருந்தாத காரணத்தால் மீண்டும் மொகிதீன் பெக்

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு  பாட வைக்கப்பட்டுள்லார். அந்தப்பாடலே

இன்ரும் என்ரும்  மொகிதீன் பெக்  என்ற பெயர் நிலைக்க காரணமானது, அது மட்டுமல்ல

அவரின்  அதிகமான பாடல்கள்    இன்னும் தலைமுறை தாண்டியும் ரசிக்கப்படுகிறது   உதாரணமாக    ;கோடுகேலி சொயாலா, படுகன்னை விகுனன்னை பொலடை யன்னே:

போன்ற  நூற்றுக்கணக்கான பாடல்களைச்சொல்லலாம்,மொகிதீன் பெக்  தமிழ் இஸ்லாமியப் படல்கலும்,உருதுப்பாடல்கலும் பாடியுள்லார்.

                                                                   கொலம்பியா இசைதட்டில் இவர் பாடிய  முதற்பாடல்

;கருணா முகுதே; 1936, சிங்கள   மொழியில் வெளியாகிய  இரண்டாம் திரைப்படமன  ;அசோகமாலா; இப்படத்தில்  நாங்கு  பாடல்கள்  பாடியதுடன் ,ஒரு  பாடல் காட்ச்சியில் இவரே நடித்துமுள்ளார்,1947.   பின்பு 1950 கலிள்  பிரபலமான சிங்களத் திரைப்பட

பின்னனிப் பாடகராகத்திகழ்ந்தார் 1953  ஆம் ஆண்டில் சுஜாதா திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து  பாடினார்,1955 ஆம் ஆண்டு; செட சுலங்க; படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார், இலங்கை வானொலியில் நாங்கு மொழிப் பாடகராக

இவர்  திகழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது, இன்னும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட

ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் பின்னனிபாடியுல்ளார்,

                                                                        இலங்கையின் முதலாவது சுதந்திர தின வைபவம்,1974 பொதுநலவாய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார், இவரது  முக்கியத்துவம் காரணமாக 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர்  எஸ்.டப்லிவ்,ஆர்.டீ,பண்டாரநாயக  இலங்கை குடியுரிமை வழங்கி கவுரவித்தார்.

50 வருடங்கலுக்கும் மேற்பட்ட அவரது இசை பயணத்தில்  அதிகமான இஸ்லாமிய பாடல்க்லும்

பாடியுள்ளார் அவற்றில் ;தீனெனும் இஸ்லாம் நெறிதனை தாங்கி;/ ; இறையோணின் சுடரான நபி

நாதரே; போன்ற இன்னும் அதிகமான பாடல்கலும் பாடியுள்ளார், அரை நூற்றாண்டுகால இசை வாழ்வில்  450 சிங்கள மொழிப் படங்களிலும் 9500க்கும் மேற்பட்ட பாடல்களூம் பாடியுள்ளார்

அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களுக்கு இலங்கை அரசு அதன் உயரிய விருதான   ; கலா சூரி;

என்ற விருதையும் தந்து கௌரவித்தது 1983,1987.

                                                                    இவ்வளவு திறமைகளையும் பெருமைகளையும் கொண்ட அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களின் பெற்றோர்,இந்தியாவில்  உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட, காவல் துறையில் அதிகாரியாக  பணிபுறிந்த கரீம் பெக்,பீஜான் பீவி, இவருடைய உடன் பிறப்புக்கள் 13பேர்  இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு விபத்தில் கொழும்பில் மரணமான போது 

தம் பெற்றொருடன்  இலங்கை வந்த இவர்  இங்கே தங்கிவிடுகிறார்  தனது 18 வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து தொழில் புறிந்த இவரை  பிரபல இசை கலைஞர் 

கௌஸ் மாஸ்ட்டர்  அவர்கள் இனம் கண்டு உற்சாகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார்,

இவரது மனைவியின் பெயர் சகீனா பெக்  இவருக்கு 3 பிள்ளைகள் அவர்களும் பிரபலமான பாடகர்கள்.

                                                தனது 13 வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது72வது வயதில்       1991 நவம்பர் 4ம் திகதி  மரணமடைந்தார்.

அவருடைய வசனங்கள்;

         [  ;நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன் நான் புத்தர் பற்றிய பாடல்களை பாடுவதையே

             விரும்புகிறேன், எந்த மதமானாலும் நாமெல்லோரும் சகோதரர்கள், இந்த நாட்டு        மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக   

கருதுகிறேன்;]

                 இந்த நாடு அவருக்கு என்ன செய்தது ஒரு தபால் தலை வெளியீட்டை தவிற

              


17 மே 2021

கோவிட் மக்கள் தொகை குறைப்பா?

 


உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத்  தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். 


மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில்  அது அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கு முதலில் தோன்றியதோ அங்கிருந்து பரவி அண்டை நாடுகளுக்குப் பரவி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு  நாட்டில் உருவாகி உலகு முழுவதும் பரவுவது என்பது இதுவரை நாம் கண்டிராதது. எனவே இது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்கள். 


மனித எதிரிகள் இந்த வைரஸைத் தோற்றுவித்த காரணம், மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து, அதன்மூலம் மக்கள்தொகை குறைய வேண்டும் என்பதுதான். அது இன்று கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த கொரோனா வைரஸ் என்பதைக் காரணம் காட்டி, தடுப்பூசி என்ற பெயரில் மக்களை மலடாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதன்மூலம்  இனி குழந்தைப் பிறப்பையே தடுத்து நிறுத்திவிட வேண்டும். இதனால் மக்கள் தொகை வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும் என்பது அந்தச் சதிகாரர்களின் திட்டம் என்று உலக அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  


 

அந்தத் தடுப்பூசி சிலருக்குத் துரித மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலருக்குத் தாமதமாக மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலர் மலடாகலாம். மலட்டுத்தன்மை என்பது இரு பாலருக்கும் உண்டு. ஆண்களின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து, பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் செயலிழந்துவிடும். அல்லது ஆணின் உயிரணுவை ஏற்றுக்கொள்கிற வகையில் பெண்ணின் சினைப்பை செயல்படாமல் போகலாம். அந்தக் குறைபாடு இன்று இந்தியாவிலுள்ள பத்து சதவிகிதத்திற்கு மேலான ஆண்-பெண்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தம்பதியருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் பரவலாகலாம். இதனால் பல்வேறு தம்பதியரின் குழந்தைப்பேறு கனவாகவே முடிந்துவிடும். 


அதையும் மீறிக் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கு நிறையப் பணம் செலவாகும். ஆம். செயற்கைக் கருவளர்ச்சி மையத்தைத்தான் தம்பதியர் நாட வேண்டும். அங்கு சென்றால் பல இலட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். இதுவெல்லாம் மனித எதிரிகளான சதிகாரர்களின் சதித்திட்டம் என்பதை மனிதநேயமுள்ள மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.


 

கொரோனா என்பதைச் சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு சளிநோய்; அதை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதைப் பயத்தோடும் பயங்கரமாகவும் பார்த்தால் இது ஓர் உயிர்க்கொல்லி நோய். முதலில் காய்ச்சல் வரும்; பிறகு மூச்சுத் திணறல் வரும்; அதன் பிறகு மரணம். சாதாரண சளி நோயைப் பூதாகரமாக ஆக்குவது ஏன்? 


கொரோனாவுக்குப் பல்வேறு மருந்துகள், ஊசிகள் என வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்  உண்மையிலேயே சரியான மருந்து எது, சரியான தடுப்பூசி எது என்று இதுவரை மருத்துவர்கள் உறுதியாகக் கூறவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் கொரோனா வராதா என்ற கேள்விக்கு உறுதியான பதிலில்லை.  அதேநேரத்தில் மீண்டும் மற்றொரு தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்கள். இந்த ஊசி போட்ட பிறகு எதிர்விளைவுகளோ பக்கவிளைவுகளோ ஏற்பட்டால் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) உண்டா என்றால், அதெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.


கொரோனாவை உண்மையிலேயே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் சென்ற ஆண்டு செயல்படுத்திய சிகிச்சை முறையை மேற்கொண்டு மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாமே? அதாவது சென்ற ஆண்டு மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை (குருதிநீர்) எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்கள். அதனடிப்படையில் நிறையப் பேர் வரிசையில் நின்று பிளாஸ்மா வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு அது பற்றிய பேச்சே இல்லையே ஏன்? 


 

கொரோனாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் மக்களைப் பயமுறுத்திச் சம்பாதிக்கிறார்கள்; இதை  ஒரு சாதாரண நோயாகப் பார்ப்பவர்கள் எளிய சிகிச்சை முறைகளை வெளியிடுகின்றார்கள்; அச்சப்பட வேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள். அவற்றுள் மிக முக்கியமான ஆலோசனை நீராவி சிகிச்சையாகும். அதாவது நாம் நீரைச் சூடுபடுத்தி அதிலிருந்து ஆவி பிடித்தால் நம் மூக்கினுள் நுழைந்துள்ள கிருமிகள் இறந்துவிடும். இது ஓர் எளிய சிகிச்சை முறை. இதை ஒரு வாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எல்லோரும் பின்பற்றத்தக்க ஓர் எளிய சிகிச்சையாகும்.


மிக எளிய முறையில் குணமாகிவிடும் ஒரு சளி நோய்க்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏன்? ஊடகங்கள் ஏன் மக்களை இந்த அளவிற்கு அச்சுறுத்துகின்றன? ஏன் மக்களின் வியாபாரத் தலங்களெல்லாம் முடக்கப்படுகின்றன? ஏன் வழிபாட்டுத் தலங்களெல்லாம் பூட்டப்படுகின்றன? இதன் பின்னணி என்ன? இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் செய்யப்பட்டு அவர்கள் மக்கள் உடல்களில் திணிக்க முயல்வது எதை? தடுப்பூசியைத்தானே? பணத்திற்கோ இலவசமாகவோ அதைச் செலுத்தத் துடிக்கின்றார்கள்; கட்டாயப்படுத்துகிறார்கள். அதைச் செலுத்தவில்லையானால் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இதையெல்லாம் குறித்து மருத்துவ அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.


இந்தக் கொரோனா பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்று மனிதநேயமிக்க மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ள ஏராளமானோர் ஆஸ்துமா, நீரிழிவு, கேன்சர், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள். அவர்கள்தாம் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோகிறார்கள். மேலும் இந்த நோய் குறித்த பயத்தாலும் பலர் இறந்துபோகின்றார்கள். இது தவிர, கொரோனாவால் இறப்போர் மிக மிகக் குறைவே என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக, கொரோனா இல்லாத காலங்களில் இறந்தோரின் எண்ணிக்கையையும் கொரோனா வந்தபின் இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் இது ஊடகங்களால் பூதாகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 


   

இந்த கொரோனா வைரஸின் முக்கிய வேலை நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள ஈரப்பதத்தைச் சளியாக மாற்றிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் மனிதன் திணறுகிறான். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டுச் செயற்கையாகச் சுவாசிக்கச் செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்ஸிஜன் வாயு உருளை குறித்த பேச்சு சென்ற ஆண்டு எழவில்லையே ஏன்? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சு சென்ற ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எழவில்லை. இந்த ஆண்டு மட்டும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற பேச்சு பரவலாகக் காணப்படுவதேன்?


நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் செய்து, 14 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, பெருமுதலாளிகள் இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.


     

இதையே மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஆக்ஸிஜன் வாயு உருளையைப் போதிய அளவு நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும்  அரசு மேற்கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மாண்டு கொண்டிருக்கிறார்கள். மக்களின் உயிர்கள்மீது அக்கறை உள்ள அரசு அதற்கான முன்னேற்பாட்டையல்லவா செய்திருக்க வேண்டும் இத்தகைய கல்நெஞ்சினர் ஒருவர்தாம் நமக்குத் தேவை என்று முடிவெடுத்த மனித எதிரிகளின் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டவர்தாம் இந்த (_____)அதனால் அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பாரே தவிர மக்கள் சாகின்றார்களே என்று அழுதுகொண்டிருக்க மாட்டார். 


மக்கள்மீது எந்த அக்கறையும் இல்லாத அரசு, கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தபோனதைக்  குறித்துக் கவலைப்படாத அரசு, திடீரென மக்கள்மீது அக்கறை ஏற்பட்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஏன்? இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? 

ஆனால் அவர்களெல்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மனித எதிரிகள் எதிர்பார்த்த மரண எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். அந்த இலக்கு எண்ணிக்கையை அடைகின்ற வரை இந்த கொரோனா அலை மக்களை விட்டு அகலாது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்படவே செய்யும். ஆக கொரோனா எனும் வைரஸுக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் மர்மங்களும் மறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.  


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதக் கரங்கள் தேடிக் கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.... (30: 41)

---------------------


15 மே 2021

இஸ்ரேல் பலஸ்தீன்




 



இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் பிரச்னை!

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்துவரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. அரேபியர்கள் வாழ்கிற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்திவருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்திவந்தனர். பாலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்துவந்தன.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணைபோவதாகவும், இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டிவந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக்கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டன.


ஜெருசலம் பிரச்னை!

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

கிழக்கு ஜெருசலேமின் பழைமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்‌ஷா மசூதி. இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரை `டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இததைத் தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஜெருசலேமை புனித நகராகக் கருதிவருகின்றன.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கிவருகிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. இஸ்ரேலை எதிர்த்துப் போராடிவருகிறது இந்த அமைப்பு. இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துப் பலமுறை போர் செய்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. `ஹமாஸ் படை ஒரு தீவிரவாத அமைப்பு' என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டிவருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு

இப்போது என்ன பிரச்னை?

நெடும்காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த அணிவகுப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உண்டாகும். இந்த ஆண்டு அணிவகுப்பு நடப்பதற்கு முன்பாகவே மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரச்னை தொடங்கியது எப்போது?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதியன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) பாலஸ்தீனர்கள் அல் அக்‌ஷா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். `யூதர்கள் நடத்தவிருக்கும் பேரணியில் கற்கள் வீசுவதற்கு இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருப்பதாக' கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களைத் தாக்கியதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

அல் அக்‌ஷா மசூதி

அல் அக்‌ஷாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தத் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவிவருகிறது.

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவுக்கான ஐ.நா சபையின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி, ``இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது. காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு கண்டனங்களைப் பதிவுசெய்கிறோம். இரு தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ``பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வை நிறுவ வேண்டும். பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறது.

ஐ.நா

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், ``பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதோடு அவர்களுடைய மதத்தைக் கடைபிடிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும். அல் அக்‌ஷா மசூதியின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும், ``ஜெருசலேமில் அமைதி திரும்ப வேண்டும்'' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு ஏற்பட்டு, அங்கு அமைதி திரும்பும் என நம்புவோம்

06 மார்ச் 2021

என் சின்ன மகனின் பிறந்த நாள்


 காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற  என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற 

எல்லாம் வல்ல இறைவனை

போற்றி

 என் சின்னவனே கண்மணியே

உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம்  என்றும் உண்னுடன் கூடிவாழும் 

இணைபிரியா உடன் பிற்ப்புகள்

எல்லாம் கிடைத்து 

வல்லவன் அல்லாஹ் காட்டிய

வழியில் வாழ்ந்திட இரு கரம்

ஏந்தி பி ரா ர் த் தி க்கும்

அன்பு DADA