இடுகைகள்

அக்டோபர் 20, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சோகம்

  எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான். கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது. இதற்கு தான் சொல்வார்கள் ...

அவமானம்

  *சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!* *என்னை* *நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்* *ஓர் ஆயுதம் தான் அவமானம்.* **இது உண்மை என்பது போல்,* *அனைவரின் வாழ்விலும்* *ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.* *நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,* *செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.* *அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.* *அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,* *பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!* *நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?* *மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,