03 அக்டோபர் 2020

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!*



தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!*


*கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!*


*பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!*


*ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!*


*வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!*


*தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!*


*மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...*


*உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுங்கள்..*


*உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!வாழ்க_வளமுடன்.

கருத்துகள் இல்லை: