14 டிசம்பர் 2020

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!!
*இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!*
*தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!*
*வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!*
*மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!*
*உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!*
*மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!*
*பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!*
*அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.*
*எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்.. அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக போவதே..*
*அமைதியாக போவதை வைத்து, கோழை என்று நினைத்து விடாதீர்கள்..*
*வார்த்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு.. நிறைய மன உறுதியும், பக்குவமும் தேவை..!!*


கருத்துகள் இல்லை: