பலஸ்தீன் 01
சூ ழ் ச் சி களுக்கு பலியான பாலஸ்தீன் நிரந்தர அமைதி பெறுமா? ப்குதி 01. 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அக்டோபர் 8, 2025 கையெழுத்தாகி உள்ளது. முதல் கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ்- இஸ்ரேல் இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதை காண நான் இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு வருகிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் அடுத்த 72 மணி நேரத்தில் ஹமாஸ் வசமுள்ள 20 பணய கைதிகள் விடுவிக்கப்படுவர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 2000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதி வரைக்கும் திரும்பப்பெறும். நிரந்தர அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் காஸா மக்களும், இஸ்ரேலியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்த நிகழ்வு ஈர்த்துள்ளது. அக்டோபர் 7, 2023 பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந...
கருத்துகள்