05 அக்டோபர் 2020

குறுஞ் சிந்தனை

 🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂


*சிக்கல் இல்லாத* 

*மனிதன்* 

*உலகில் இல்லை.*


*சிக்கலை கண்டு* 

*மிரளாமல்,*

*சிக்கலின் காரணத்*

*தன்மை, ஆராய்.*


*திறக்க முடியாத* 

*பூட்டே கிடையாது.* 

*சரியான சாவியைக்* 

*கண்டுபிடிக்காதவர்கள்*

*தான் அதிகம் உண்டு.*


*தீர்க்க முடியாத துன்பம்*

*எதுவும் கிடையாது.* 

*தீர்க்கும் வழியை தீர்க்கமாக* *அறியாதவர்களே உண்டு.*


*இன்று கவலையாகத்*

*தெரியாவது,* 

*நாளை மகிழ்வாய்*

*மாறும், மலரும்.*


*எந்தக் கவலையையும்* 

*ஆராய்ந்து சரியான*

*தீர்வைக் காண்பதே*

*வாழ்வின் உன்னதம்.*


🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️🏃‍♀️🏃‍♂️

       *.*

 ஒரு அறிஞரிடம் நான் கேட்டேன்

*"என்னோட வாழ்க்கையை நான் எப்படி  வழி நடத்துவது என்று,


🍁அறிஞர் சொன்னார்,*

*உன் அறையை செக் பண்ணு, என்று


🍁என்னுடைய அறை என் கேள்விக்கு பதில் சொன்னது


மேற் கூரை சொன்னது*

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று


🍃காத்தாடி சொன்னது,*

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று


*🍃கடிகாரம் சொன்னது,

 நேரத்தை மதிக்கனும் என்று


*🍃நாட்காட்டி சொன்னது,* என்னை மாதிரி தினமும்  உன்னை புதுப்பித்துக்கொள் 

என்று.


🍃மணிபர்ஸ் சொன்னது ,*

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று


🍃கண்ணாடி சொன்னது,*

உன் மானத்தை என்னைப்போல் பாதுகாத்துக் கொள். உடைந்தால் ஒட்ட முடியாது  என்று .


🍃விளக்கு சொன்னது,* என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று 

என்று


*🍃ஜன்னல் சொன்னது* பரந்த மனப்பான்மையாக இரு என்று


தரை சொன்னது,*

எப்பவும் கீழே பணிவாக இரு என்று


🍃படிக்கட்டு சொன்னது,*

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும்  கவனமாக அடி எடுத்து வை 

என்று



*இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.*


03 அக்டோபர் 2020

விவேகம்


*அறிவான வேகம்*

*விவேகம்.*


*எண்ணித் துணிவதும்..!*

*சிந்தித்துத் தெளிவதும்..!*

*முனைப்பாய் செய்வதும்..!*

*விவேகம்.*


*வெற்றியோ தோல்வியோ* 

*இறுதி வரை போராடிச்*

*செயல் ஆற்றுவதும்*

*விவேகம்*


*துணிந்த பிறகு மீண்டும்,*

*பின் வாங்குவதையோ,*

*இழுக்கு என்று மனதுக்குள்* 

*நினைப்பதும்.*

*விவேகம்*


*விவேகம் உள்ளவர்கள்*

*விவேகி.*


*செயலிலே வேகம்,* 

*சிந்தையிலே விவேகம்.*

*சீரிய கட்டுப்பாட்டிற்குள்*

*செயல்படுவார்கள்.*

*விவேகி*


*விவேகியிடம்*

*பகுத்தறிவு, புத்திக் கூர்மை,*

*மதிநுட்பம், ஞானம்*

*அறிவு, சாமர்த்தியம்,*

*ஒருசேர இருக்கும்*


*வாழ்வில் விவேகம்* 

*தீமையைக் குறைத்து*

*நன்மையை நாடுவது.*


*கடலின் ஆழத்தில்* 

*முத்தைக் கண்டு பிடிப்பது*

*பிரச்சனைகளின்*

*ஆழத்தில் முடிவின்*

*தீர்வைக் கண்டு பிடிப்பது*

*விவேகம்.*


*விவேகம்*

*ஏட்டுச் சுரைக்காய் அல்ல.*

*வாழ்வில் பல*

*நெருக்கடிகளைச் சந்தித்து* *எதிர்கொண்டு கடந்து*

*வந்தவர்களே*

*விவேகிகள்.*


*ஆம்.,*


*இருள் தடுமாறச்*

*செய்கிறது.* 


*விவேக வெளிச்சம்*

*உற்சாகம் தருகிறது.*


*அபரிதமான* 

*நம்பிக்கையைத்*

*தருவதும்*


*விடியலைக்*

*காண்பதும்*

*விவேகம்.*

       *குறுஞ் சிந்தனை.*

வாழ்க_வளமுடன்.

 வயதை' வைத்து மட்டுமே அனுபவத்தை கணக்கிடாதீர்..!பண்படுத்திய 'வலிகளை' வைத்தும் அனுபவத்தை கணக்கிடுங்கள்..!!*



தோல்விகளும்,துரோகங்களும் கடைசியாக கற்றுக்கொடுப்பது...நாமும் சுயநலமாக இருந்திருக்கலாம் என்று..!!*


*கடினமான செயலின் சரியான பெயர் தான் 'சாதனை'..!சாதனையின் தவறான விளக்கம் தான் 'கடினம்'..!!*


*பலர் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பது, திறமை இல்லாமல் அல்ல... நேர்மையான எண்ணங்களும், நியாயமான வாழ்க்கை முறையும் காரணமாக இருக்கலாம்..!!*


*ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..!நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை.!!*


*வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை..!ஆனால், அவர்கள் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள்..!!*


*தெரிந்த ஒன்றை செய்து வெற்றி காண்பதை விட... தெரியாத ஒன்றை செய்து தோல்வி காண்பது... "நல்ல பாடம்"..!!*


*மற்றவர்களை கஷ்டப்படுத்தும் போது சுகமாக தான் இருக்கும்... ஆனால், நாம் கஷ்டப்படும் போது தான் தெரியும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என...*


*உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுங்கள்..*


*உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!வாழ்க_வளமுடன்.

முக்கியமானவன்


☮தான் மிக முக்கியமானவன்' என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்து விடும்?
☮பொய்யான மனிதர்களிடம் இருந்து தான் நாம் உண்மையான வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறோம்.
☮வெளி உலக விஷயங்களை மட்டுமே செல்பேசியால் தர இயலும்
வெளி உலக அனுபவங்களை ஒரு போதும் செல்பேசியால் தர இயலாது.
☮தவறு ஏதும் செய்யாமல் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதியாய் சிலர் முன் நாம் நிற்கிறோம்.
☮வருங்காலம் நிம்மதியாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பில் நிகழ் காலத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
☮☮☮☮☮☮☮☮☮☮☮
 
நல்லதே நடக்கும்

நாம்

 🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


🌌தெரியாது என்பதே எப்போதும் பிரச்சனை தராத ஆகச் சிறந்த பதிலாக இருக்கிறது.


🌌விழிக்கும் போதே அன்றைய நாளை திட்டமிடுங்கள். உங்களை நல்ல மனநிலையில் வைத்துக் கொள்ளவும் உங்களை சுற்றி இருப்பவர்களை மகழ்விக்கவும் உதவும்.


🌌நாம் உறவுக்குள் வெளிப் படையாக இருந்தால் உறவு முறிந்து விடுகிறது. உறவு இல்லாதவர்களிடம் வெளிப் படையாக இருந்தால் உறவு உருவாகி விடுகிறது.


🌌நூறு வருஷம் வாழறது முக்கியமில்லை. அதுல எத்தனை வருஷம் சந்தோஷமா வாழ்கிறோம் என்பது தான் முக்கியம்.


🌌பிறர் மனம் மகிழ நாம் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாக வாழ்கிறோம். அத்தகைய வாழ்க்கைப் பாதையை இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக் கூடாது.