27 ஜூலை 2021

கணிணி வன் பொருள் மென்பொருள்


                                           

                                         கணிணி வன் பொருள் மென்பொருள்                 

Bios (Basic input &output system)

Bios ஆனது ஒரு கணிணியின்  device  களின்  தொழிற்பாட்டினை  முழுமையாக   இயக்குகின்ற 

செயன்முறை      மெண்பொருளாகும்.


Advance

Cpu configuration,                                                                                                                                                                      CPU   (central prosessering unit)

இது ஒரு கணிணியின் தொழில்பாட்டு மையமான  Cpu இன் தொழிற்படுகின்ற சகல அமைப்பினையும் இது கொண்டிருக்கிறது.

Chipset Configuration,

                                              இதானது video card, Audio card, video  cip or audio chip, Ram card  ஏனைய அணைத்து Cip களையும் அவைகளின் அணைத்து  செட்டின்ஸ்களையும்    இச்  cip  Set Configuration கொண்டுள்ளது.


IDe Configuration

                                      இதானது ஒரு கணிணியின்  Hard drive,CD rom ஆகியவற்றின்  தொழில் பாட்டினை   கண்பிக்கக்கூடியது, இவை   IDE/SATA  ஆகிய இரு தொழிற்பாட்டினை உள்ளடக்கி இருக்கும்  இதில் எமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ல முடியும்.


Configure Super IO  Chipset.

                                                     இதனது ஒரு       mother bord இன்    சகல  PORT களின்      power supply யுடன் ஏனைய அமைப்புகளை கொண்டிருக்கிறது.


USB  Configuration

                                  இதானது USB Divaice களின் தொழிற்பாட்டினை காட்டக் கூடியது   இவற்றில்  எமக்குத் தேவையானவறு      settings change களை ஏற்படுத்திக் கொள்ல முடியும்.


Hardware health event monitoring

                                         கணிணியின்     mother board இன் உஷ்ன அளவையும்  அதனை ஒரு நிலையில் பேணக்கூடிய  கணிணி  ஃபேன்,வேகம் ஆகியவற்றிணையும்  mother bord  

இன்  மின்சார   தொழிற்பாட்டினையும்  காட்டக்கூடியது.




23 ஜூலை 2021

கவிக்கோ வரிகள்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’ ? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?


கவிக்கோ வரிகள்

22 ஜூலை 2021

மு; மேத்தா


 



                               கண்ணீர்ப் பூக்கள்  

எந்த தேவதையாலும் அவன் 

ஆசிர்வதிக்கப்படவில்லை 

ஆனால் 

எல்லாச் சாத்தான்களாலும் 

இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!


எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 

ஆனால் 

எல்லாப் புயல்களோடும் அவன் 

போராடியிருக்கிறான்!


மகிழ்ச்சி மலர்களை அவனால் 

பறிக்க முடியவில்லை 

அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 

கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.


என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 


சோகச் சிலுவைகளை நெஞ்சில் 

சுமந்து கொண்டு 

அவன் நடக்கிறான் 

அழுகைக்குப் பிறகும் ஓர் 

அணிவகுப்பு நடத்துகிறான்!


சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 

கவிப்பயணம் காலசைக்கிறது 

துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!

பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழமுடியா வீழ்ச்சிகள்!


மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!


ஆடுகின்ற பேய்மனதில் 

ஆயிரமாம் ஆசைகள் 

ஆயிரமாம் ஆசைகட்கு

அனுதினமும் பூசைகள் !


சூடுகின்ற மாலைகளோ 

தோள்வலிக்கும் தோல்விகள் 

தோள்வலிக்கும் தோல்விகள் நான் 

தொடங்கிவைத்த வேள்விகள்!


காலமெனும் தாளிலொரு 

கதையெழுத வந்தவன் 

கதையெழுத வந்ததனால் 

கனவுகளில் வெந்தவன்!


ஓலமிடும் சிந்தனையால் 

உறங்குவதை விட்டவன் 

உறங்குவதை விட்டதனால் 

உடல் சிதைந்து கெட்டவன்!


மன்னவரின் சபைகள்தமை 

மயங்க வைத்த பாவலன் 

மயங்கவைத்த வேளையிலும் 

மயங்கிவைத்த கோவலன்!


மின்னும் விழிப் பொற்குளத்தில் 

மீன்பிடிக்கப் போனவன் 

மீன்பிடிக்கப் போனதனால் 

வேதனைக்குள் ளானவன் !


ஈரவிழிக் காவியங்கள் 

எழுதி வெளி யிட்டவன் 

எழுதி வெளி யிட்டதனால்  

இதயங்களைத் தொட்டவன்!


ஓரவிழிப் பார்வைகளின் 

ஊர்வலத்தில் சென்றவன் 

ஊர்வலங்கள் சென்றபோது 

ஒதுங்கிவந்து நின்றவன்!


பாயும் நதி மீதிலொரு 

படகினை நான் ஓட்டினேன் 

படகை நன்கு ஓட்டியதால் 

பரிசுகளை ஈட்டினேன்!


ஆய பல சுமைப் பரிசை 

அப்படகில் ஏற்றினேன் 

அப்படகு கவிழ்ந்ததனால் 

அலைநடுவே மாட்டினேன்!



வரங்கொடுக்கும் தேவதைகள் 

வந்தபோது தூங்கினேன் 

வந்தபோது தூங்கிவிட்டு 

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!


கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 

கைகழுவி வீசினேன் 

கைகழுவி வீசிவிட்டுக் 

காலமெல்லாம் பேசினேன்!


புல்லர்களின் மனக்குகையில் 

புனித விதை விதைத்தவன் 

புனித விதை விதைத்தபோது 

புதை மணலை மிதித்தவன்!


செல்லரித்த மானுடத்தைச் 

சீர்திருத்தப் பாடினேன் 

சீர்திருத்தப் பாடியதால் 

பேரெதிர்ப்பைத் தேடினேன்!



அற்பர்களின் சந்தையிலே 

அன்பு மலர் விற்றவன் 

அன்பு மலர் விற்றதற்குத் 

துன்ப விலை பெற்றவன்!


முட்புதரில் நட்பு மலர் 

முளைக்குமென்று நம்பினேன் 

முளைத்து வந்த பாம்புகளே 

வளைத்த போது  வெம்பினேன்!


நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 

நெருப்பினில் கை விட்டவன் 

நெருப்பினில் கை விட்டதனால் 

நினைவுகளைச் சுட்டவன்!


வஞ்சி மலர் ஊமை மன 

மாளிகையின் அதிபதி!

மாளிகையின் அதிபதிக்கு 

மனதில் இல்லை நிம்மதி!



சோலைவழி வீதிகளில் 

சுகமளிக்கும் பார்வைகள் 

சுகமளிக்கும் பார்வைகள் என் 

சுதந்திரத்தின் போர்வைகள்!


பாலைவன மணல் வெளியில் 

பாடகனின் யாத்திரை 

பாடகனின் யாத்திரையே 

பசித்தவர்க்கு மாத்திரை!


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!

                   

18 ஜூலை 2021

மொஹிதீன் பெக்


                                                                 

மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி:

என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள்

பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள்

காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு,

இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும்

வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும்

திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக

பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்பது  வேரு கதை,)  இப் பாடலை பாட

முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  பெக்  பின்பு இது புத்தரின் மகிமைபறறிய பாடல் என்பதால்

ஒரு முஸ்லிம்  பாடுவதில் குழுவில்  சிலருக்கு  பிடிக்காததால்  வேரு பாடகர் இந்தியாவிற்கு

அழைத்து செல்லப்பட்டுள்ளார் (அப்போது ஒலிப்பதிவு கூடங்கள் இலங்கையில் இல்லாத காலம்)

பாடலுக்கு அந்தப்பாடகரின்  குரல் பொருந்தாத காரணத்தால் மீண்டும் மொகிதீன் பெக்

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு  பாட வைக்கப்பட்டுள்லார். அந்தப்பாடலே

இன்ரும் என்ரும்  மொகிதீன் பெக்  என்ற பெயர் நிலைக்க காரணமானது, அது மட்டுமல்ல

அவரின்  அதிகமான பாடல்கள்    இன்னும் தலைமுறை தாண்டியும் ரசிக்கப்படுகிறது   உதாரணமாக    ;கோடுகேலி சொயாலா, படுகன்னை விகுனன்னை பொலடை யன்னே:

போன்ற  நூற்றுக்கணக்கான பாடல்களைச்சொல்லலாம்,மொகிதீன் பெக்  தமிழ் இஸ்லாமியப் படல்கலும்,உருதுப்பாடல்கலும் பாடியுள்லார்.

                                                                   கொலம்பியா இசைதட்டில் இவர் பாடிய  முதற்பாடல்

;கருணா முகுதே; 1936, சிங்கள   மொழியில் வெளியாகிய  இரண்டாம் திரைப்படமன  ;அசோகமாலா; இப்படத்தில்  நாங்கு  பாடல்கள்  பாடியதுடன் ,ஒரு  பாடல் காட்ச்சியில் இவரே நடித்துமுள்ளார்,1947.   பின்பு 1950 கலிள்  பிரபலமான சிங்களத் திரைப்பட

பின்னனிப் பாடகராகத்திகழ்ந்தார் 1953  ஆம் ஆண்டில் சுஜாதா திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து  பாடினார்,1955 ஆம் ஆண்டு; செட சுலங்க; படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார், இலங்கை வானொலியில் நாங்கு மொழிப் பாடகராக

இவர்  திகழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது, இன்னும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட

ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் பின்னனிபாடியுல்ளார்,

                                                                        இலங்கையின் முதலாவது சுதந்திர தின வைபவம்,1974 பொதுநலவாய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார், இவரது  முக்கியத்துவம் காரணமாக 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர்  எஸ்.டப்லிவ்,ஆர்.டீ,பண்டாரநாயக  இலங்கை குடியுரிமை வழங்கி கவுரவித்தார்.

50 வருடங்கலுக்கும் மேற்பட்ட அவரது இசை பயணத்தில்  அதிகமான இஸ்லாமிய பாடல்க்லும்

பாடியுள்ளார் அவற்றில் ;தீனெனும் இஸ்லாம் நெறிதனை தாங்கி;/ ; இறையோணின் சுடரான நபி

நாதரே; போன்ற இன்னும் அதிகமான பாடல்கலும் பாடியுள்ளார், அரை நூற்றாண்டுகால இசை வாழ்வில்  450 சிங்கள மொழிப் படங்களிலும் 9500க்கும் மேற்பட்ட பாடல்களூம் பாடியுள்ளார்

அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களுக்கு இலங்கை அரசு அதன் உயரிய விருதான   ; கலா சூரி;

என்ற விருதையும் தந்து கௌரவித்தது 1983,1987.

                                                                    இவ்வளவு திறமைகளையும் பெருமைகளையும் கொண்ட அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களின் பெற்றோர்,இந்தியாவில்  உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட, காவல் துறையில் அதிகாரியாக  பணிபுறிந்த கரீம் பெக்,பீஜான் பீவி, இவருடைய உடன் பிறப்புக்கள் 13பேர்  இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு விபத்தில் கொழும்பில் மரணமான போது 

தம் பெற்றொருடன்  இலங்கை வந்த இவர்  இங்கே தங்கிவிடுகிறார்  தனது 18 வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து தொழில் புறிந்த இவரை  பிரபல இசை கலைஞர் 

கௌஸ் மாஸ்ட்டர்  அவர்கள் இனம் கண்டு உற்சாகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார்,

இவரது மனைவியின் பெயர் சகீனா பெக்  இவருக்கு 3 பிள்ளைகள் அவர்களும் பிரபலமான பாடகர்கள்.

                                                தனது 13 வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது72வது வயதில்       1991 நவம்பர் 4ம் திகதி  மரணமடைந்தார்.

அவருடைய வசனங்கள்;

         [  ;நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன் நான் புத்தர் பற்றிய பாடல்களை பாடுவதையே

             விரும்புகிறேன், எந்த மதமானாலும் நாமெல்லோரும் சகோதரர்கள், இந்த நாட்டு        மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக   

கருதுகிறேன்;]

                 இந்த நாடு அவருக்கு என்ன செய்தது ஒரு தபால் தலை வெளியீட்டை தவிற

              


17 மே 2021

கோவிட் மக்கள் தொகை குறைப்பா?

 


உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத்  தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். 


மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில்  அது அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கு முதலில் தோன்றியதோ அங்கிருந்து பரவி அண்டை நாடுகளுக்குப் பரவி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு  நாட்டில் உருவாகி உலகு முழுவதும் பரவுவது என்பது இதுவரை நாம் கண்டிராதது. எனவே இது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்கள். 


மனித எதிரிகள் இந்த வைரஸைத் தோற்றுவித்த காரணம், மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து, அதன்மூலம் மக்கள்தொகை குறைய வேண்டும் என்பதுதான். அது இன்று கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த கொரோனா வைரஸ் என்பதைக் காரணம் காட்டி, தடுப்பூசி என்ற பெயரில் மக்களை மலடாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதன்மூலம்  இனி குழந்தைப் பிறப்பையே தடுத்து நிறுத்திவிட வேண்டும். இதனால் மக்கள் தொகை வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும் என்பது அந்தச் சதிகாரர்களின் திட்டம் என்று உலக அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  


 

அந்தத் தடுப்பூசி சிலருக்குத் துரித மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலருக்குத் தாமதமாக மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலர் மலடாகலாம். மலட்டுத்தன்மை என்பது இரு பாலருக்கும் உண்டு. ஆண்களின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து, பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் செயலிழந்துவிடும். அல்லது ஆணின் உயிரணுவை ஏற்றுக்கொள்கிற வகையில் பெண்ணின் சினைப்பை செயல்படாமல் போகலாம். அந்தக் குறைபாடு இன்று இந்தியாவிலுள்ள பத்து சதவிகிதத்திற்கு மேலான ஆண்-பெண்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தம்பதியருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் பரவலாகலாம். இதனால் பல்வேறு தம்பதியரின் குழந்தைப்பேறு கனவாகவே முடிந்துவிடும். 


அதையும் மீறிக் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கு நிறையப் பணம் செலவாகும். ஆம். செயற்கைக் கருவளர்ச்சி மையத்தைத்தான் தம்பதியர் நாட வேண்டும். அங்கு சென்றால் பல இலட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். இதுவெல்லாம் மனித எதிரிகளான சதிகாரர்களின் சதித்திட்டம் என்பதை மனிதநேயமுள்ள மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.


 

கொரோனா என்பதைச் சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு சளிநோய்; அதை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதைப் பயத்தோடும் பயங்கரமாகவும் பார்த்தால் இது ஓர் உயிர்க்கொல்லி நோய். முதலில் காய்ச்சல் வரும்; பிறகு மூச்சுத் திணறல் வரும்; அதன் பிறகு மரணம். சாதாரண சளி நோயைப் பூதாகரமாக ஆக்குவது ஏன்? 


கொரோனாவுக்குப் பல்வேறு மருந்துகள், ஊசிகள் என வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்  உண்மையிலேயே சரியான மருந்து எது, சரியான தடுப்பூசி எது என்று இதுவரை மருத்துவர்கள் உறுதியாகக் கூறவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் கொரோனா வராதா என்ற கேள்விக்கு உறுதியான பதிலில்லை.  அதேநேரத்தில் மீண்டும் மற்றொரு தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்கள். இந்த ஊசி போட்ட பிறகு எதிர்விளைவுகளோ பக்கவிளைவுகளோ ஏற்பட்டால் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) உண்டா என்றால், அதெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.


கொரோனாவை உண்மையிலேயே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் சென்ற ஆண்டு செயல்படுத்திய சிகிச்சை முறையை மேற்கொண்டு மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாமே? அதாவது சென்ற ஆண்டு மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை (குருதிநீர்) எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்கள். அதனடிப்படையில் நிறையப் பேர் வரிசையில் நின்று பிளாஸ்மா வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு அது பற்றிய பேச்சே இல்லையே ஏன்? 


 

கொரோனாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் மக்களைப் பயமுறுத்திச் சம்பாதிக்கிறார்கள்; இதை  ஒரு சாதாரண நோயாகப் பார்ப்பவர்கள் எளிய சிகிச்சை முறைகளை வெளியிடுகின்றார்கள்; அச்சப்பட வேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள். அவற்றுள் மிக முக்கியமான ஆலோசனை நீராவி சிகிச்சையாகும். அதாவது நாம் நீரைச் சூடுபடுத்தி அதிலிருந்து ஆவி பிடித்தால் நம் மூக்கினுள் நுழைந்துள்ள கிருமிகள் இறந்துவிடும். இது ஓர் எளிய சிகிச்சை முறை. இதை ஒரு வாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எல்லோரும் பின்பற்றத்தக்க ஓர் எளிய சிகிச்சையாகும்.


மிக எளிய முறையில் குணமாகிவிடும் ஒரு சளி நோய்க்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏன்? ஊடகங்கள் ஏன் மக்களை இந்த அளவிற்கு அச்சுறுத்துகின்றன? ஏன் மக்களின் வியாபாரத் தலங்களெல்லாம் முடக்கப்படுகின்றன? ஏன் வழிபாட்டுத் தலங்களெல்லாம் பூட்டப்படுகின்றன? இதன் பின்னணி என்ன? இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் செய்யப்பட்டு அவர்கள் மக்கள் உடல்களில் திணிக்க முயல்வது எதை? தடுப்பூசியைத்தானே? பணத்திற்கோ இலவசமாகவோ அதைச் செலுத்தத் துடிக்கின்றார்கள்; கட்டாயப்படுத்துகிறார்கள். அதைச் செலுத்தவில்லையானால் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இதையெல்லாம் குறித்து மருத்துவ அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.


இந்தக் கொரோனா பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்று மனிதநேயமிக்க மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ள ஏராளமானோர் ஆஸ்துமா, நீரிழிவு, கேன்சர், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள். அவர்கள்தாம் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோகிறார்கள். மேலும் இந்த நோய் குறித்த பயத்தாலும் பலர் இறந்துபோகின்றார்கள். இது தவிர, கொரோனாவால் இறப்போர் மிக மிகக் குறைவே என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக, கொரோனா இல்லாத காலங்களில் இறந்தோரின் எண்ணிக்கையையும் கொரோனா வந்தபின் இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் இது ஊடகங்களால் பூதாகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 


   

இந்த கொரோனா வைரஸின் முக்கிய வேலை நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள ஈரப்பதத்தைச் சளியாக மாற்றிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் மனிதன் திணறுகிறான். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டுச் செயற்கையாகச் சுவாசிக்கச் செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்ஸிஜன் வாயு உருளை குறித்த பேச்சு சென்ற ஆண்டு எழவில்லையே ஏன்? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சு சென்ற ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எழவில்லை. இந்த ஆண்டு மட்டும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற பேச்சு பரவலாகக் காணப்படுவதேன்?


நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் செய்து, 14 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, பெருமுதலாளிகள் இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.


     

இதையே மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஆக்ஸிஜன் வாயு உருளையைப் போதிய அளவு நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும்  அரசு மேற்கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மாண்டு கொண்டிருக்கிறார்கள். மக்களின் உயிர்கள்மீது அக்கறை உள்ள அரசு அதற்கான முன்னேற்பாட்டையல்லவா செய்திருக்க வேண்டும் இத்தகைய கல்நெஞ்சினர் ஒருவர்தாம் நமக்குத் தேவை என்று முடிவெடுத்த மனித எதிரிகளின் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டவர்தாம் இந்த (_____)அதனால் அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பாரே தவிர மக்கள் சாகின்றார்களே என்று அழுதுகொண்டிருக்க மாட்டார். 


மக்கள்மீது எந்த அக்கறையும் இல்லாத அரசு, கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தபோனதைக்  குறித்துக் கவலைப்படாத அரசு, திடீரென மக்கள்மீது அக்கறை ஏற்பட்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஏன்? இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? 

ஆனால் அவர்களெல்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மனித எதிரிகள் எதிர்பார்த்த மரண எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். அந்த இலக்கு எண்ணிக்கையை அடைகின்ற வரை இந்த கொரோனா அலை மக்களை விட்டு அகலாது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்படவே செய்யும். ஆக கொரோனா எனும் வைரஸுக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் மர்மங்களும் மறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.  


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதக் கரங்கள் தேடிக் கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.... (30: 41)

---------------------


15 மே 2021

இஸ்ரேல் பலஸ்தீன்




 



இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் பிரச்னை!

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்துவரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. அரேபியர்கள் வாழ்கிற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்திவருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்திவந்தனர். பாலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்துவந்தன.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணைபோவதாகவும், இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டிவந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக்கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டன.


ஜெருசலம் பிரச்னை!

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

கிழக்கு ஜெருசலேமின் பழைமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்‌ஷா மசூதி. இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரை `டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இததைத் தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஜெருசலேமை புனித நகராகக் கருதிவருகின்றன.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கிவருகிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. இஸ்ரேலை எதிர்த்துப் போராடிவருகிறது இந்த அமைப்பு. இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துப் பலமுறை போர் செய்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. `ஹமாஸ் படை ஒரு தீவிரவாத அமைப்பு' என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டிவருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு

இப்போது என்ன பிரச்னை?

நெடும்காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த அணிவகுப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உண்டாகும். இந்த ஆண்டு அணிவகுப்பு நடப்பதற்கு முன்பாகவே மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரச்னை தொடங்கியது எப்போது?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதியன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) பாலஸ்தீனர்கள் அல் அக்‌ஷா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். `யூதர்கள் நடத்தவிருக்கும் பேரணியில் கற்கள் வீசுவதற்கு இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருப்பதாக' கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களைத் தாக்கியதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

அல் அக்‌ஷா மசூதி

அல் அக்‌ஷாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தத் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவிவருகிறது.

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவுக்கான ஐ.நா சபையின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி, ``இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது. காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு கண்டனங்களைப் பதிவுசெய்கிறோம். இரு தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ``பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வை நிறுவ வேண்டும். பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறது.

ஐ.நா

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், ``பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதோடு அவர்களுடைய மதத்தைக் கடைபிடிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும். அல் அக்‌ஷா மசூதியின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும், ``ஜெருசலேமில் அமைதி திரும்ப வேண்டும்'' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு ஏற்பட்டு, அங்கு அமைதி திரும்பும் என நம்புவோம்

06 மார்ச் 2021

என் சின்ன மகனின் பிறந்த நாள்


 காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற  என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற 

எல்லாம் வல்ல இறைவனை

போற்றி

 என் சின்னவனே கண்மணியே

உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம்  என்றும் உண்னுடன் கூடிவாழும் 

இணைபிரியா உடன் பிற்ப்புகள்

எல்லாம் கிடைத்து 

வல்லவன் அல்லாஹ் காட்டிய

வழியில் வாழ்ந்திட இரு கரம்

ஏந்தி பி ரா ர் த் தி க்கும்

அன்பு DADA

22 டிசம்பர் 2020

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!*


*பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!*


*புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!*


*சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!*


*உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!*


*உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!*


*எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!*


*நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!*


*சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..*


*சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.*


*சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*


*செம்மல்கள் எத்தனை தோன்றினாலும் இவனது , சேர்க்கைகள் மட்டும் குலைந்தே போகிறது.

 

*சோர்வு ,சோகம் ,சோம்பல் ,இவைகளை தள்ளி வையுங்கள்





14 டிசம்பர் 2020

பயம்

 பயந்தவனுக்கு "வலி" நிறைந்த வாழ்க்கை..!துணிந்தவனுக்கோ "வழி" நிறைந்த வாழ்க்கை..!!
*இல்லாத ஒன்றை தேடிக்கொண்டே... இருக்கும் ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம்..!!*
*தோல்வியெனும் உளியால் செதுக்க செதுக்க... வெற்றியெனும் சிலை கிடைக்கும்..!!*
*வாழ்க்கையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் 'பீல்' பண்றத விட... அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லையென 'டீல்' பண்றது நல்லது..!!*
*மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதீர்..! மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதீர்..!!*
*உங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதீர்..! நீங்கள் அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறீர்கள் என்று பெருமை படுங்கள்..!!*
*மனிதனை மனிதனாக்குபவை.. உதவிகளும், வசதிகளும் அல்ல..!இடையூறுகளும், துன்பங்களுமே..!!*
*பொய்கள் உருவாகும் இடத்தில் நம்பிக்கைகள் காலாவதியாகி விடுகின்றன...!*
*அடித்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்கை. ஒருவர் மேல் ஒருவர் கோவம் பழி வாங்குதல் அப்படி என்ன தான் சாதிக்க போகின்றோம்.. உணர்ந்து மனம் மாறுவோம் என்றும் மகிழ்வை விதைப்போம்.*
*எல்லாவிதமான தேவையற்ற கேள்விகளுக்கு சிறந்த பதில்.. அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக போவதே..*
*அமைதியாக போவதை வைத்து, கோழை என்று நினைத்து விடாதீர்கள்..*
*வார்த்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு.. நிறைய மன உறுதியும், பக்குவமும் தேவை..!!*


வாழ்வை வாழ்வோம்

 

வாழ்வைப் புதுப்பிப்போம்.
*கவலையை போக்கும்* 
*இராஜதிரவமே புன்னகை.*
*புன்னகை..!*
*முகத்திற்கு மனதிற்கும்*
*அழகு ஊட்டுகிறது.*
*புன்னகை..!*
*புத்துணர்ச்சி ஊட்டும்* 
*மாமருந்து.*
*நகைச்சுவை உணர்வு* 
*நம்மை உயர்த்துவதோடு,*
*சோகத்தை தடுக்கிறது.*
*மனிதன் சிரிக்கத்* 
*தெரிந்த விலங்கு.*
*சிரிப்பு...!*
*மனிதன் என்கிற*
*அறிமுகத்தைத் தருகிறது.*
*நகைச்சுவை துன்பத்தின்*
*சுமையை எளிதாக்குகிறது.*
*பரபரப்பான வாழ்க்கையை* *பரவசப்படுத்துகிறது.*
*சோகங்களிலிருந்து*
*மீட்டெடுக்கிறது.*
*இடுக்கண்* 
*வரும்போதும் நகுவோம்.*
*இல்லறம் சிறக்க* 
*சிரித்து மகிழ்வோம்.*
*நாம் சிரித்து* 
*வாழவேண்டும் தவறில்லை.*
*பிறரைத்தாக்கி, கிண்டலடித்து*
*மகிழக் கூடாது.*
*தமிழர் வழியுமல்ல.*
*நாகரிகமும் அல்ல.*
*”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி”*
*என வள்ளுவம் கூறுவதை* 
*மனதில் ஆழப் பதிய*
*வைத்துக்கொள்ள வேண்டும்.*
*வீட்டில் அனைவரும்* 
*மகிழ்ச்சியாக கூடி*
*அமர்ந்து பேசிச்* 
*சிரித்து மகிழ்வது* 
*நல்ல குடும்பத்திற்கான* 
*நாகரிக அடையாளம்.*
*நாம் மகிழ்ச்சியில்* 
*நமது உடலில் 86 தசைகள்* *இயங்குகின்றன*
*மூளைக்குத் தகவல்*
*அனுப்பும் நரம்புகள்* 
*நன்கு இயங்குவதோடு,*
*பெப்டைன் என்ற*
*ஒரு வித கார்மோன்* 
*சுரந்து இரத்த ஓட்டத்தை* *எளிமையாக்குகிறது.*
*உடலில் சுறுசுறுப்பு பிறக்கிறது.*
*உற்சாகம் ஊற்றெடுக்கிறது.*
*மனம் அமைதி அடைகிறது.*
*வாய்விட்டுச் சிரிக்கும் போது,*
*உடலின் உள் உறுப்புகள்*
*நன்கு இயங்குகின்றன.*
*சிரிப்பு தான் நம்*
*உள் உறுப்புகளுக்கான* 
*உடற்பயிற்சி* 
*நம் முன்னோர்கள் கூறியது*
*வாய்விட்டுச் சிரித்தால்* 
*நோய் விட்டுப் போகும்.*
*சிரிப்பு ஒரு மருத்துவ முறை* 
*நவீன அறிவியல் உலகம் பல* *முறைகளில் நிரூபித்துள்ளது.*
*வாழ்க்கை*
*இருட்டிலேயே கிடக்கிறது.*
*சிரிக்கும்போது மட்டுமே*
*வெளிச்சமடைகிறது’*
*புதுக்கவிதையின்* 
*உட்பொருள் ஆழமானது.*
*கோபப்படும்போது,* 
*உடலில் 32 தசைகள்* 
*மட்டுமே இயங்கும்.*
*தசைகளின் இயக்கத்தால்*
*இரத்த ஓட்டத்தில் தடையாய்கிறது.*
*இருக்கமான நிலையில்*
*உடல் தசைகள் இயங்கும்.*
*இதயத்திற்குச் செல்லும்*
*ரத்தமும் இதயத்திலிருந்து*
*வெளியேறும் ரத்தமும்*
*அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.*
*ஆகவேதான் அடிக்கடி* *கோபப்படுபவர்களுக்கு*
*இதயம் சார்ந்த நோய்கள்* 
*வர வாய்ப்புள்ளதது.*
*மகிழ்ச்சியாய் இருப்பதற்கும்*
*சில வரையறைகள் உள்ளன.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் மகிழ்ச்சி*
*அளிக்க வேண்டும்.* 
*பிறரைத் துன்பத்தில்* 
*ஆழ்த்திவிட்ட ஒருவன்* 
*மகிழ்ச்சி அடைவானேயானால்,* 
*அம்மகிழ்ச்சி துன்பத்தை விடக்* *கொடுமையானது.*
*பிறரை மகிழவைத்து மகிழ்வதே,* *மகிழ்ச்சியில் உயர்வானது.*
*நம்முடைய மகிழ்ச்சி*
*பிறருக்கும் எப்படி மகிழ்ச்சியாய்* 
*இருக்க வேண்டுமோ,*
*நமக்கும் உண்மையான
மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

06 டிசம்பர் 2020

எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு

 எது வந்த போதும் கலங்காதே மனிதா.. எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு.
*ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் பொறுப்பேற்றார்.அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதிய மேலாளர், அவரிடம் திறம்பட நிர்வாகம் செய்வது பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். உடனே அவர் புதிய மேலாளரிடம் மூன்று கவர்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னார், "உங்களுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொரு கவராக எடுத்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.*
*ஒரு மாதத்திலேயே புதிய மேலாளருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் கவரை எடுத்து திறந்து படித்தார். அதில்,"நான் புதிதாக வந்தவன்.அதனால் இங்குள்ள புரிந்து கொள்ள எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்" என்று எழுதியிருந்தது. அதேபோல அவரும், "நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால் தானே எதுவும் செய்ய முடியும். "என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர்.*
*அடுத்த ஓராண்டில் மறுபடியும் ஒரு பிரச்சினை வந்தது.* *இரண்டாவது கவரை திறந்து பார்த்தார்.* *அதில், "முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்" என்றிருந்தது. உடனே அவரும் சொன்னார், "பாருங்கள், நான் என்ன செய்வது?இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக உழைத்துக்கொண்டிரு கிறேன். ஆனால் இங்கு முன்பு பணிபுரிந்தவர்கள் என்ன தான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார். வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.*
*இப்போது அவர் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போது தொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர்கள் ஓர் பெரிய பிரச்சனையை கிளப்பினார்கள்.இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து விட்டது.உடனே மூன்றாவது கவரை எடுத்துப் படித்தார் அதில், "உனக்கு அடுத்து வரப்போகும் புது மேலாளருக்கு இதே போல் மூன்று கவர்களைத் தயார் செய்துவைக்கவும்" என்று எழுதப்பட்டிருந்தது.*
வாழ்க்கையில் எந்த சோதனை வந்தாலும் கலங்காதீர்கள். எல்லா சிக்கல்களுக்கும் கண்டிப்பாக தீர்வு இருக்கும்.


*பூட்டுகள் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. பூட்டை தயாரிக்கும் போதே அந்த பூட்டை திறப்பதற்கான சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.*
*#வெற்றி_நமதே.
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும் 
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்

                     
 

27 நவம்பர் 2020

அமைதியான மனம் பெற

 


    

    

    

    

    

   

    

   

1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்..


பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.


2.மறக்கவும்... மன்னிக்கவும்...


இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.


3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள்....


உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.


4. பொறாமைப்படாதீர்கள்...


நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல் பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.


5. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்..


தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைப்பீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.


6. தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்....


இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன உறுதியையும் பெறலாம்.


7. செய்ய முடிவதையே செய்யுங்கள்....


இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.


8.தினமும் தியானியுங்கள்...


தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்...

26 நவம்பர் 2020

குரங்கும் மனித வாழ்வும்

 



குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.*


*காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.*


*அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.*


*அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.*


*இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.* 


*ஆனால்,*


*மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?*


*மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?*


*மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.*


*இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.* 


*இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.*


*தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.*


*தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.*


*'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.*


*இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.* 


*அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,* 


*“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,*


*“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும்,*


*“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.* 


*மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...*


*"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;*


*“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.*


*“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.*


*“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.*


*“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.*


*"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.*


*"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.*


*"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.* 


*“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.*


*“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.*


*"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.* 


*“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.*


*“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.*


*"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "*


*என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.*


*இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.*


*தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..*


*தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, வேதாத்திரி  மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.*


*நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

                       *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*


 *#வாழ்க_வளமுடன்.*