இடுகைகள்

செயற்கை தொழில்நூட்பம் Ai

  அறிவார்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) ஆகும். இது மனிதர்களைப் போல சிந்திக்கும், கற்கும் மற்றும் முடிவெடுக்கும் திறனை இயந்திரங்களுக்கு வழங்குகிறது. இன்று, AI நமது அன்றாட வாழ்வின் பல அம்சங்களில் ஒருங்கிணைந்து ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பம்: செயற்கை நுண்ணறிவின் தோற்றம் கருத்தாக்கம்: இயந்திரங்கள் சிந்திப்பது குறித்த கருத்து பண்டைய காலங்களிலேயே இருந்தாலும், நவீன AIக்கான அடித்தளம் 1940கள் மற்றும் 1950களில் போடப்பட்டது. பிரிட்டிஷ் கணிதவியலாளர் ஆலன் டூரிங் (Alan Turing), ஒரு இயந்திரம் மனிதனைப் போல சிந்திக்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்கான "டூரிங் டெஸ்ட்" (Turing Test) என்ற சோதனையை முன்வைத்தார்.   பிறப்பு: 1956 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டார்ட்மவுத் கல்லூரியில் நடந்த ஒரு பயிலரங்கில், "செயற்கை நுண்ணறிவு" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு AI ஒரு தனி கல்வித் துறையாக உருவாக வழிவகுத்தது. ஆரம்பத்தில், ஆராய்ச்சியில் அதிக நம்பிக்கை இருந்தது, ஆனால் தொழில்நுட்பக் குறைபாடுகள் ...

பலஸ்தீன் 01

   சூ ழ் ச் சி களுக்கு பலியான பாலஸ்தீன் நிரந்தர அமைதி பெறுமா? ப்குதி 01. 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் அக்டோபர் 8, 2025 கையெழுத்தாகி உள்ளது. முதல் கட்ட அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ்- இஸ்ரேல் இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதை காண நான் இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு வருகிறேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் அடுத்த 72 மணி நேரத்தில் ஹமாஸ் வசமுள்ள 20 பணய கைதிகள் விடுவிக்கப்படுவர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 2000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதி வரைக்கும் திரும்பப்பெறும். நிரந்தர அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் காஸா மக்களும், இஸ்ரேலியர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் இந்த நிகழ்வு ஈர்த்துள்ளது. அக்டோபர் 7, 2023 பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் தாக்குதல் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந...

ஃபாலஸ்தீன் 02

ஆனால் தனது அறிவிப்புக்கு மாற்றமாக ஒரு நாள் முன்னதாக பிரிட்டன் ராணுவம் வெளியேறியது இதை முற்கூட்டியே யூத ராணுவத்திடம் சொல்லிவிட்டது. என்ன ஏது என்று பாலஸ்தீனர்கள் சுதாரிப்பதற்குள் யூத ராணுவம் நேரடி நடவடிக்கைகளில் இறங்கியது பிரிட்டன் அமெரிக்க சதியும் யூத நாடு உருவாதலும். 1948 மே 14 அன்று இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாகி விட்டதாக ஜியோனிச சபையில் டேவிட் பென்குரியன் அறிவித்தார். அடுத்த வினாடியே அமெரிக்க அதிபர் ட்ரூமன் அந்நாட்டை அங்கீகரித்தார். 1948 மே 16 அன்று 6 அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. அன்று ஒரே நாளில் 13000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டு 530 ஊர்கள் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன. அன்று தொடங்கி ஜூலை முடிய 77 நாளில் 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு பேரழிவு என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. 1948 மே 16 அன்று ஆறு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. இதில் பாலஸ்தீனத்தின் 78 சதவீத இடங்களை இஸ்ரேல் தன் வசப்படுத்தியது. 1949 பிப்ரவரி 24 ல் எகிப்து இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது; காசா எகிப்து வசமானது. அப்போது எகிப்தை பாருக் மன்னர் ஆட்சி செய்தார். ஜோர்டான் ஒப்பந்தம் செய்...

தேரரும் முஸ்லிம்களும்

  ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனைக்கான எதிர்வினை, கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. அந்த ஊடக மாநாட்டையடுத்து இரு முஸ்லிம் அரசியல்வாதிகள்  குற்றப்  புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றியாக நோக்கப்படுகிறது. மேலும், தேர்தல்கள்  அண்மித்து வரும் நிர்ணயகரமான ஒரு கால கட்டத்தில் இன வெறியையும், மத வெறியையும் தூண்டும் விதத்தில் பேச முற்படும் நபர்களுக்கும் இத்தீர்ப்பின் மூலம் ஒரு 'கடுமையான செய்தி' அனுப்பி வைக்கப்பட்டிர...

ஃபலஸ்த்தீன்

  http:paripoorana.com இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.  பலஸ்தீன மண்ணை இஸ்‌ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்‌ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் போரைத் தூண்டும் ஒரு நடவடிக்கை என்ற அடிப்படையில் உலகம் அதனைச் சரி காணவில்லை.  ஆனால், அதற்குப் பதிலடியாக, இன்று வரை சியோனிஸ இஸ்‌ரேல் பலஸ்தீன முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற  அழிச்சாட்டியத்தை, அதே உலக மக்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றது. குறிப்பாக, குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் துண்டித்து, தொடர்ச்சியாக பொது மக்கள் மீது இஸ்‌ரேல் படைகள் நடத்துகின்ற ஈவிரக்கமற்ற குண்டு மழை இஸ்‌ரேலை...

எமது உடன்பிறப்புகளே

  1.1 மில்லியன் மக்களை, வடக்கு காஸாவிலிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது இஸ்ரேல். அதற்கு வெறும் 24மணி நேர அவகாசமே கொடுத்திருக்கிறார்கள். மூர்க்கமான வான்வழித் தாக்குதலை அது இன்னும் நிறுத்தவில்லை. காஸா எல்லாத் திசைகளிலும் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. 'மனிதாபிமான வழிப்பாடு' ஒன்றைத் திறந்து விடுமாறு கோரியும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. அகப்பட்ட வாகனங்களிலும் கார்களிலும் கழுதை வண்டிகளிலும் கால்நடையாக நடந்தும், பல்லாயிரக் கணக்கானோர் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என்று எல்லோருமே அடக்கம். எங்கே போகிறோம் என்று தெரியாமல், போக்கிடமின்றிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மேலும் பல்லாயிரக் கணக்கானோர், தத்தமது வீடுகளை விட்டு வெளியேறாமல், வருவது வரட்டும் என்றிருக்கிறார்கள். காஸா ஏற்கனவே சன அடர்த்தி மிக்க பிரதேசம். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை. தெற்கு காஸாவில் போதியளவு உட்கட்டுமானங்கள் கூட இல்லை. அங்கே போய் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு யாருக்குமே விடை தெரியவில்லை. இலட்சக் கணக்கானோரை அகதி முகாம்களில்...

ஒன்பதாம் திகதி

 ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் போல ரணில் விக்கிரமசிங்க மந்திரம்,பில்லிசூனியம்,எண்ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர் அல்ல. ஆனால் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு மந்திரம்,மாயம்,பில்லிசூனியம்,எண் ஜோதிடம் என்பவற்றில் நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலுக்குள் இருந்து வருகிறார்கள். அக்கூட்டு உளவியல் காரணமாகத்தான் மே மாதத்தில் இருந்து தொடங்கி ஜூலை மாதம் வரையிலுமான ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாட்களாக காணப்பட்டன.எனவே அந்த நம்பிக்கையை முறியடிக்க வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்தது. அவர் அதை வெற்றிகரமாக செய்திருக்கிறார்.கடந்த ஒன்பதாந் திகதி ரணில் அகற்றப்படவில்லை,மாறாக கோட்டா கோகம கிராமம் காலி முகத்திடலில் இருந்து வெளியேறியது. தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளால் அரகலய பெருமளவுக்கு செயலிழந்து விட்டது.இதுவரை எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பது போராடும் தரப்புக்கே தெளிவில்லாமல் இருக்கிறது.ஒரு மையத்திலிருந்து தகவல்க...