12 மே 2022

முட்டாள்களின் தீவு

 


இந்தக் கேள்விதான் நாடு முழுக்க இப்போது பேசுபொருள். பிரதமர் தெரிவில், உள்ளூர் அரசியல் காய்நகர்த்தல்கள் மட்டுமல்ல, வெளிச் சக்திகளின் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலும் (Geopolitical Agenda) உள்ளது.


புதிய பிரதமர் தெரிவும் புதிய அமைச்சரவை நியமனமும், ஒரு வார காலத்திற்குள் நடந்தேறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.


நேற்றிரவே முன்னாள் பிரதமர் ரணிலோடு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அரசியல் அரங்கில் பிரதமர் பதவிக்காக அடிபட்ட, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது.


பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக ஹரீன் பெர்னாண்டோ நேற்றிரவு அறிவித்திருக்கிறார். மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் ஹரீனுடன் அணி சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் பிளவு அரசியல் வட்டாரங்களில் முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். புதிய ஜனாதிபதியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை (கவனிக்க: சஜித்தை அல்ல), ஹரீன் பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்ததையும், அப்போதே லக்ஷ்மன் கிரியெல்ல அதை மறுத்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். மேதினத்தில் ஹரீனுக்கும் பொன்சேகாவுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.


ராஜபக்சக்களுக்கு மிகவும் தோதான ஒரு தெரிவு ரணில்தான். அத்தோடு பிராந்திய - சர்வதேச கூட்டணிக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ரணில் மிகவும் ஏற்புடையவர்.


இவ்வாறான அரசியல் அணிச் சேர்க்கைகள், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபட்டிருப்பதை ஊகிப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.


ஐந்து முறை பிரதமராக இருந்த ரணிலுக்கு, இந்த நெருக்கடி நிலமையைக் 'கையாளக் கூடிய' (கவனிக்க: 'தீர்க்கக் கூடிய' என்று சொல்லவில்லை) திறமையும் நீண்ட அனுபவமும் உள்ளது என்தில் சந்தேகம் இல்லை.


ஆனால், இந்த மக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை திசைதிருப்பும் 'டீல்' அரசியலில், அவரது வகிபாகம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிந்ததுதான். இன்னும் சில வாரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிந்து விடும். ராஜபக்சக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வெளிச்செல்லும் உத்தியை (Exit Strategy) அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


இந்தியா மற்றும் மேற்கு முகாமினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் நிதியுதவியை வென்றெடுப்பதில் ரணில் வெற்றிபெறுவார் என்பதிலும் சந்தேகமில்லை. 


ஒரு வகையில் ரணில் அவசியமானவர். இன்னொரு வகையில் ஆபத்தானவர். இதன் பரிமாணம் பற்றிய  ஒவ்வொருவரின் புரிதல் அளவும் வேறுபட்டது. இந்த 'ஆபத்தான அவசியத்தை' இடைக்காலத் தீர்வாகக் கையாளலாம் என்று ராஜபக்சக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் எண்ணுகின்றன. 


இந்த அரசியல் சுழியில் அடிபட்டுப் போகப் போவது சஜித்தான். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத தடுமாற்றமும், நெருக்கடி காலகட்டத்திற்கு தலைமை வழங்க முடியாத அவரது இயலாமையும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.


செயல்வேகம் குன்றிய, உயர் பதவிக்கு அவசியமான அறிவாளுமைப் போதாமையுடைய அவரை, பிரேமதாஸவின் மகன் என்பதற்காக மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அநேகமாக, அடுத்த தேர்தலில் சஜித் மிகவும் பலவீனப்பட்டு நிற்பார். ஐக்கிய மக்கள் சக்தியும் பலவீனமடைந்து விடும்.


இது ஒரு புறம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும். மறுபுறம், ஆட்டம் கண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியை, சுதந்திரக் கட்சி குறி வைத்து இயங்கும். இது அதிகார சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.


இந்தப் புதிய அரசியல் நகர்வுகளால், தற்போது நலிவடைந்து பின்தள்ளப்பட்டிருக்கும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பீட்டளவில் முன்னரங்குக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் சந்திரிக்கா தரப்பும் களமாடுகிறது.


இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் அவரது 43 ஆவது படையணியும் சஜித் அணியிலிருந்து ஒதுங்கி, தற்போது அடிபட்டு நிற்கும் சிங்களத் தேசியவாதத்தின் மீட்பராக தம்மை முன்னிறுத்தி இயங்குகின்றனர். அடுத்த பிரதமருக்கான போட்டிக் களத்தில் சம்பிக்கவும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது நாட்டுக்கு மிக ஆபத்தான முன்னெடுப்பு.


இது இவ்வாறிருக்க, பிரதான கட்சிகள் மீதான அதிருப்தி அலையொன்று நாட்டில் பலமாக உருவெடுத்திருக்கிறது. சீரியஸான மாற்றத்தையே இது வேண்டி நிற்கிறது. இதன் பலனை அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்யும் வாய்ப்புகளே அதிகம். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வு இன்னும் விரிவும் வீரியமும் பெற வேண்டும். 


எது எப்படிப் போனாலும்,திசைகாட்டி முன்னெப்போதை விடவும் பெருமளவு ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், புதிய பாராளுமன்றத்தில் அதுவும் ஒரு தீர்மானகரமான சக்தியாக இருக்கும். 


எது எப்படியோ, அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னர், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் சாத்தியம் மிக அதிகளவில் உள்ளது. இப்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மையில் இருந்து வெளியேற அதுவே பொருத்தமான தீர்வாகும்.


புதிய பிரதமர் தெரிவு, அடுத்த தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு நகர்வு என்பதை, அரசியல் நடப்புகளை நன்கு ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.


அதனால்தான் புதிய பிரதமராவதற்குத் தயார் என்று ஏகப்பட்ட ஆட்கள் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


பலமுனைகளில் துண்டு துண்டாக உடைந்து நிற்கும் அரசியல் தரப்புகளை, தேர்தலின் பின்னர் அணி சேர்க்கும் வேலையை பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சக்திகள் செய்யும்.


இலங்கை விவகாரத்தில் ஒப்பீட்டளவில் சீனாவின் செல்வாக்கு குறைந்து, இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது என்பது பகிரங்க ரகசியம். தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்குக் கிடைத்த பொன்முட்டையாக ஆகியிருக்கிறது.


இந்த நகர்வுகள் இடைக்காலத் தீர்வாகவே வருகின்றன. அதேவேளை, இவை இறுதித் தீர்வில் தாக்கம் செலுத்த வல்லன.


மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், தமக்கு வாய்ப்பாக வளைத்தெடுக்கவும் பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளதைக் காண முடிகிறது.  

எந்த சக்தி வந்து எந்த ஆட்டத்தைப் போட்டாவும், நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறக் கூடாது.


இந்த நாட்டுக்கு ஒரு தீர்க்கமான மாற்றம் தேவை. அது அடிப்படையான முறைமை மாற்றம் (System Change) என்பதில் மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் படிக்கத் தயாரென்றால்தான், நமது தலைவிதியை மாற்ற முடியும். இல்லாவிட்டால் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான் தொடரும்.


தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு நகரப் போகிறோமா? அல்லது நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?


28 ஏப்ரல் 2022

அபி பரிப்பு கேவா



2019 ஆம் ஆண்டு நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச ஈட்டிய அமோக வெற்றி சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மூன்றாவது சிங்கள பௌத்த எழுச்சி என்றும், முன்னெப்பொழுதும் இருந்திராத பேரெழுச்சி என்றும் வர்ணிக்கப்பட்டது (முதலாவது, இரண்டாவது எழுச்சிகள் முறையே 1956 இலும், 2010 இலும் இடம்பெற்றிருந்தன). இலங்கை இன்று எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிக்கான விதைகள் அந்த வெற்றியை அடுத்தே ஊன்றப்பட்டன. குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள இனவாதிகள், அத்துரலியே ரத்ன தேரர் போன்றவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் காவி உடைத் துறவிகளின் ஒரு குழுவினர், வியத்மக அறிஞர் குழாம் மற்றும் சிங்கள செய்தி ஊடகங்கள் ஆகிய நான்கு தரப்புக்கள் கட்டமைத்த போலித் தேசியவாத பெருமிதவுணர்வுடன் இணைந்த விதத்தில் முன்னெடுக்கப்பட்ட இனவெறி மற்றும் மதவெறிப் பிரச்சாரங்களின் மறைமுக மற்றும் நேரடி விளைவொன்றாகவே இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கின்றது.


சிங்கள - பௌத்த மக்களின் நலன்களை பேணுவது எப்படி என்ற  விடயத்தை இந்தத் தரப்பினர் முற்றிலும் பிழையாக புரிந்து கொண்டதே இங்குள்ள பிரச்சினை. சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலமும், அவர்களுடைய மத உணர்வுகளை புண்படுத்துவதன் மூலமும், பல ஆண்டு காலம் அச்சமூகங்;கள் அனுபவித்து வந்திருக்கும் தனித்துவமான கலாசார உரிமைகளை மறுப்பதன் மூலமும், பௌத்த மக்கள் எவரும் வாழாத முல்லைத்தீவு மற்றும் பாலமுனை போன்ற இடங்களில் புத்தர் சிலைகளைக் கொண்டு போய் வைப்பதன் மூலமும், கிழக்குக்கான தொல்லியல் செயலணி என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அடாவடித்தனமாக அபகரிப்பதன் மூலமும் சிங்கள மக்களின் நலன்களை நிறைவேற்றி வைக்க முடியும் என இவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். அதற்கு ஊடாக அவர்கள் இலங்கைச் சமூகத்தை பெரும்பான்மை – சிறுபான்மை என இரு பிரிவுகளாக பிளவுபடுத்தினார்கள். 


இந்த இனவாதக் கோ~ங்களின் பேரோசையும், சிங்கள பௌத்த பெரஹராவின் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் சாதாரண சிங்கள மக்களின் காதுகளையும், கண்களையும் அடைக்கச் செய்திருந்தன. இந்தக் களேபரத்தில் இலங்கைத் தீவு சர்வதேச ரீதியில் படிப்படியாக தனிமைப்படுத்தப்பட்டு வருவதனையும், அது மிக வேகமாக தனது நண்பர்களை இழந்து வருவதனையும் எவராலும் பார்க்க முடியவில்லை. 


இந்த வெற்றுக் கூச்சல்கள் இதுவரையில் தமக்கு அழிவைத் தவிர வேறு எதனையும் பெற்றுத் தரவில்லை என்பதனை சிங்கள மக்கள் சற்றுத் தாமதமாக இப்பொழுது புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் புரிதலை பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் செலுத்தியிருக்கும் விலை தான் இன்றைய இலங்கையின் நெருக்கடி. 


சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றில் முதல் தடவையாக இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரிக்கும் விதத்திலான ஒரு சிந்தனை மாற்றம் பரந்த சிங்கள சமூகத்தில் மெதுவாக, ஆனால் உறுதியாக நிகழ்ந்து வரும்; ஒரு பின்புலத்தில், இலங்கையின் இன்றைய நெருக்கடியை அலசுகிறது இக்கட்டுரை.


ஏப்ரல் மாதம் சிங்கள மக்களை பொறுத்தவரையில் குதூகலமும், கொண்டாட்டங்களும் நிறைந்த ஒரு மாதம். நெல் அறுவடைக்கு பின்னர் சாதாரண மக்களின் கைகளில் காசு புழங்கும் காலம். தமது பாரம்பரிய புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவதற்கு அவர்கள் வித விதமான உணவுப் பண்டங்களையும், உடு துணிகளையும், பரிசுப் பொருட்களையும், வீட்டுக்குத் தேவையான தளபாடச் சாமான்களையும் வாங்குவது வருடாந்த வழமை. அந்தக் கொள்முதல்களுக்கென தமது ஆண்டு வருமானத்தில் சுமார் கால்வாசிப் பகுதியை இந்த மாதத்தில் அவர்கள் செலவிடுவார்கள்.


ஆனால், இந்தத் தடவை எல்லாமே தலைகீழ். கொண்டாட்டங்களின் பூமியாக மாற வேண்டிய சிங்களப் பெருநிலம் கொந்தளிப்புக்களின் பூமியாக மாறியிருக்கின்றது. விலைவாசிகளில் பன்மடங்காக ஏற்பட்டிருக்கும் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்த விதத்தில் பதுக்கல் வியாபாரம் மற்றும் கறுப்புச் சந்தை என்பன நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளன. 1970 களின் பின்னர் பிறந்த தலைமுறையினர் தமது வாழ்நாளில் முதல் தடவையாக இத்தகையதொரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.


இந்த நிலையில் மக்களின் ஆவேசமும், விரக்தியும் தன்னியல்பாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக சிங்கள பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் இரு சொற்களை அவர்கள் அதிகம் அதிகம் இப்பொழுது உச்சரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. ஒன்று ‘பரிப்புவக் கேவா’ என்பது (‘பருப்பு கணவா’ என்ற சிங்களச் சொலவடை ‘நம்பி மோசம் போனோம்’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘நாங்களாகவே தேடிக் கொண்ட கேடு’ என்றும் சொல்லலாம்). அதே நேரத்தில், ராஜபக்~ அரசாங்கத்தை வசைபாடுவதற்கு மட்டுமன்றி முன்சொன்ன நான்கு தரப்புக்களை சபிப்பதற்கும் அவர்கள் ‘காலகண்ணி’ என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள் (‘காலகண்ணி’ என்ற சொல்லுக்கு தமிழில் ‘படு பாவிகள்’ என்ற விதத்தில் பொருள் கொள்ளலாம்). 


இங்குள்ள விசே~ம் தமிழர்களும், முஸ்லிம்களும் ஏற்கனவே ‘தின்றிருக்கும் பருப்பை’ இப்பொழுது சிங்கள மக்கள் தின்றிருக்கிறார்கள் என்பதுதான். அதாவது, தேர்தல்களில் வாக்குகளை அள்ளிக் கொள்வதற்காக இனவாதத்தை தூண்டி, மக்களை உசுப்பேற்றி முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் இறுதியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அழிவை மட்டுமே எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை ஏற்கனவே தமிழர்களும், முஸ்லிம்களும் படித்திருக்கின்றார்கள். இப்பொழுது சிங்களவர்களின் முறை வந்திருக்கின்றது. 


இன்று நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சிறப்பம்சம் அவை முழுக்க முழுக்க சிங்கள மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகும். இனவாதிகளும், சிங்கள ஊடகங்களும் உருவாக்கிய சமூகப் பிளவின் (Ehtnic Polaristion)  ஒரு பிரதிபலிப்பாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி இன மத பேதமில்லாமல் எல்லோரையும் மிகவும் மோசமான விதத்தில் பாதித்திருந்த போதிலும்,  தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலோ அல்லது பெருந்தோட்டப் பிரதேசங்களிலோ குறிப்பிடத்தக்க அளவிலான அரச எதிர்ப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.


‘இது அவர்கள் வலிந்து தேடிக்கொண்ட ஒரு நெருக்கடி. அதனால் அவர்களே இதனை தீர்த்துக் கொள்ளட்டும்’ என்ற விதத்திலான ஒரு அலட்சிய மனப்பாங்கு சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் நிலவி வருவது போல் தெரிகிறது. 


‘இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது அரச எதிர்ப்பு செயற்பாடுகளிலோ பங்கேற்பதை முஸ்லிம்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற விதத்தில் ஒரு சில முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்திருக்கும் வேண்டுகோள் மற்றொரு சுவாரசியம். அத்தகைய ஒரு வேண்டுகோள் தேசிய நீரோட்டத்திலிருந்து தம்மை அன்னியப்படுத்தக்கூடியதாக இருந்து வந்த போதிலும், இந்த அரச எதிர்ப்பு அலைகள் எந்த ஒரு நேரத்திலும் தமக்கு எதிராக திருப்பி விடப்பட முடியும் என்ற அச்சம் காரணமாக முஸ்லிம்கள் அப்படியான ஒரு அணுகுமுறையை எடுத்திருக்க முடியும். 


சிங்கள மக்களின் எழுச்சி இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் எதிரியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் முதலாவது சிங்கள – பௌத்த எழுச்சி 1956 இல் ஏற்பட்டது. தமிழர்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்களுக்கு ஊடாக அந்த எழுச்சி ‘தமிழர்களுக்கு எதிரானது’ என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள் சிங்கள இனவாதிகள். யாழ்ப்பாணத்தில் 1958 இல் வாகன இலக்கத் தகடுகளில் தமிழ் ‘ஸ்ரீ’ எழுத்து பொறிக்கப்பட்ட பொழுது மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி 1956 இன் அரசியல் மாற்றம் சிங்கள மொழியின் எழுச்சியின் ஒரு குறியீடு என்பதையும், அங்கு தமிழ்மொழிக்கு இடமில்லை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். 


2010 இல் போர் முடிவை அடுத்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றியை சிங்கள – பௌத்த மக்களின் இரண்டாவது எழுச்சி என்று சொன்னார்கள் அவர்கள். அந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் நேரடி எதிரியாகவும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த தமிழ்ச் சமூகம் மறைமுக எதிரியாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டது. 


2019 ஜனாதிபதித் தேர்தல் இந்தப் போக்கின் உச்ச கட்டமாக இருந்தது. கோத்தாபய ராஜபக்ச தரப்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களில் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ சிங்கள மக்களின் நேரடி எதிரியாகவும், இலங்கை முஸ்லிம் சமூகம் மறைமுக எதிரியாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.


‘சிங்கள மக்களின் நலன்கள்’ என்ற தலைப்பு இலங்கையில் 2010 இன் பின்னரேயே பகிரங்க உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. எதனை பொது வெளியில் பேசுவது, எதனை தனிப்பட்ட உரையாடல்களின் போது பேசுவது என்ற சூட்சுமத்தை அறிந்திராத ஒரு சில சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த ‘இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு இல்லாமல் எவரும் அரச தலைவராக வர முடியாது; யாரும் அரசாங்கம் அமைக்க முடியாது’ என்ற வாதம் இறுதியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கே வினையாக வந்து முடிந்தது. 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அந்த வாதத்தை பொய்யாக்கின. 


அந்த திருப்புமுனை நிகழ்வு 2010 இன் பின்னர் இலங்கை அரசியலில் பெரும்பான்மை – சிறுபான்மை இயங்கியலை வடிவமைப்பதில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது. மகிந்த ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை சித்தாந்த ரீதியில் வடிவமைத்துக் கொடுத்த நளின் டி சில்வா, குணதாச அமரசேகர, கெவிந்து குமாரதுங்க போன்ற  தேசியவாதிகள் சிங்கள மக்களின் இந்த எழுச்சித் தருணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தொடர்ந்தும் பரப்புரை செய்து வந்தார்கள். ‘சிறுபான்மை கட்சிகள் இனிமேலும் சிங்கள மக்களை பணயக் கைதிகளாக எடுத்து, காரியம் சாதித்துக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் விதத்தில் நளின் டி சில்வா தொடர்ந்து எழுதி வந்தார். அரசியல் மேடைகளை பயன்படுத்தி அந்தக் கருத்தை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் போன்ற தரப்பினர். அந்த எண்ணத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் கணிசமான ஒரு பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பதனை இங்கு ஒரு மேலதிக தகவலாக குறிப்பிட வேண்டும்.


2010 – 2015 மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஊழல்களும், முறைகேடுகளும் மலிந்த ஒரு அரசாங்கமாக இருந்து வந்த போதிலும், அதை சிங்கள தேசியவாதிகள் கண்டும் காணாமலும் இருந்தார்கள். அதற்கு அவர்கள் வெளியில் சொல்லாத காரணம் ‘அப்படியான கடுமையான ஒரு விமர்சனம் சிங்கள – பௌத்த அரசியல் செயல்திட்டத்தை பலவீனப்படுத்த முடியும்’ என்பது. 


‘ஒரு மாபெரும் நீரோட்டம் சேற்றையும், சகதியையும் அள்ளிச் செல்வது சகஜம்’ என்று சொல்லி, அதனை எளிதில் கடந்து சென்றார் நளின் டி சில்வா. ஆனால், இன்றைய நெருக்கடியை அப்படிக் கடந்து செல்ல முடியாது என்பதனை அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.


சிங்கள மக்களின் ஆவேசத்தைப் பார்த்து இனவாதிகளும், தேசிய வாதிகளும் கதி கலங்கி நிற்கிறார்கள். தமது குற்ற உணர்ச்சியை மறைத்துக் கொள்வதற்காக எதிர்க் கட்சியுடன் சேர்ந்து இவர்களும் ராஜபக்சகளை வசை பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்றைய இலங்கையின் நெருக்கடியை தீவிரப்படுத்திய பல பிழையான முடிவுகளை எடுப்பதற்கு ஜனாதிபதியை தூண்டியவர்கள், அவர் மீது அழுத்தம் பிரயோகித்தவர்கள் இதே ஆட்கள் தான்.   


கோத்தாபய ராஜபக்சவின் சிங்கள – பௌத்த அரசு எந்ததெந்தக் காரியங்களை செய்யக்கூடாது என்றும், ஒரு போதும் செய்ய மாட்டாது என்றும் இவர்கள் உரத்துச் சொல்லி வந்தார்களோ, இப்பொழுது அந்தக் காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு பலவீனமடைந்திருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மண்டியிட வேண்டிய துர்ப்பாக்கியம்;; சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் மன்றாடி, உதவிகளை யாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம்;; சிங்கள மக்களின் பொதுப் புத்தியில் ‘பிச்சைக்கார நாடு’ என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் பங்களாதே~pன் கதவுகளைத் தட்டி, கடன் கேட்டு நிற்கும் சிறுமை;; மத்திய கிழக்கு நாடுகளுடனான நட்புறவுகளை புதுப்பித்து, பலப்படுத்திக் கொள்வதற்கென ராஜதந்திர ரீதியிலான இரகசிய நகர்வுகள்;; ‘ஏகாதிபத்தியவாதத்தின் அடிவருடி’ என இவர்களால் வர்ணிக்கப்பட்டு வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெற்றிலை வைத்து அழைத்து, பொருளாதாரத்தை மீட்டெழுப்பதற்கு யோசனை கேட்க வேண்டிய அளவுக்கு வாசல் வரையில் வந்திருக்கும் வெள்ளம்.


நாட்டை இந்த நிலைக்கு தள்ளி விடுவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்த வீரவன்ச – கம்மன்பில சோடியையும் உள்ளடக்கிய பலர் இப்பொழுது திடீரென நேரெதிர் திசையில் நின்று, ‘ராஜபக்சகளை ஒழித்துக் கட்டுவோம்’ என தொண்டை கிழியக் கத்துவது தான் வரலாற்றின் மாபெரும் முரண்நகை. 


சிங்கள செய்தி ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். சரிந்து வரும் ‘Ratings’ களை உயர்த்திக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக ‘தெரண’ மற்றும் ‘ஹிரு’ போன்ற ஊடகங்கள் ஒரு போலி அரச எதிர்;ப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றன. 


1987 ஏப்ரல் - மே காலப் பிரிவில் ஜே ஆர் ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசு எந்த அளவுக்கு பலவீனமடைந்திருந்ததோ அதே அளவுக்கு இப்பொழுதும் பலவீனமடைந்திருக்கிறது. இதற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையும் ஒரு காரணம். 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதியாக முடி சூடிக்கொண்ட ஜே ஆர் ஜயவர்தன, ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதை தவிர, தன்னால் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியுமென ஆணவத்துடன் சொன்னார். 

1983 கலவரங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும் வரையில், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் சூறையாடி அழிக்கப்படும் வரையில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அவர். யூலை 24 ஆந் திகதி மாலை பொரல்லையில் தோன்றிய கலவரம், அதன் உச்ச கட்டத்தை அடைந்திருந்த நிலையில் 28 ஆந் திகதி அரச தொலைக்காட்சியில் தோன்றி எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாத தொனியில் இனவாதிகளுக்கு மேலும் தூபமிடும் விதத்தில் அவர் நிகழ்த்திய உரை, இலங்கை ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு பெரும் கறை. அந்த ஆணவமே அடுத்து வந்த சில ஆண்டுகளில் இலங்கை ஆசியாவின் மிகப் பெரும் கொலைக் களமாக மாறுவதற்கு வழிகோலியிருந்தது. 


1983 கலவரத்தை அடுத்து ஜே ஆர் தூரநோக்கற்ற விதத்தில் ஜே வி பி இயக்கத்தை தடை செய்வதுடன் இணைந்த விதத்தில், அக்கட்சியின் தலைவர்கள் மீண்டும் ஒரு முறை தலைமறைவாகின்றார்கள். அதனையடுத்து 1987 – 1989 கால கட்டத்தில் நாட்டில் ஓடிய இரத்த ஆறு வரலாற்றின் மற்றொரு ஆறாத வடு. அதற்கு வழிகோலியவர் அதிகார மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்த ஜே ஆர் ஜயவர்தன. 


இலங்கை அரசு பலவீனமாக இருந்த அந்தத் தருணத்தை பயன்படுத்திய ராஜீவ் காந்தி ஜே ஆரை மிரட்டி, அடிபணிய வைத்தார். 1987 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து விமானங்கள் இலங்கையின் வான் பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து, யாழ் தீபகற்பத்தில் 25 தொன் உணவுப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வான்வழியாக வீசி எறிந்து, இலங்கையின் இறைமையை அவமதித்த பொழுது சர்வ வல்லமை பொருந்திய ஜே. ஆர். ஜயவர்தன அதனை வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்தார்.


இன்றைய இலங்கை மீண்டும் ஒரு தடவை 35 ஆண்டுகள் பின்நோக்கி 1987 க்கு சென்றிருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடங்களை படிக்காதவர்களை வரலாறு மீண்டும் மீண்டும் தண்டித்துக் கொண்டே இருக்கும் என்ற கூற்றின் பிரகாரம், இலங்கையை இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்தியா அடிபணிய வைத்திருக்கின்றது. அண்மையில் அது இலங்கைக்கு வழங்கிய டொலர் கடன் தொகை மற்றும் வெளியில் சொல்லப்படாத அது குறித்த நிபந்தனைகள் அனைத்தும் அதனைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டும் சான்றுகள்.


சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை வரலாற்றில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இத்தகைய காரியங்களுக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ‘தமிழர்களின் விடுதலை’ என்றால் என்ன என்பதனை விடுதலைப் புலிகள் இயக்கமும் இதே விதத்தில் தப்பாக புரிந்து கொண்டிருந்தது. முஸ்லிம் மக்கள் பல நூறாண்டு காலம் வாழ்ந்து வந்த பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அவர்களை துரத்தியடிப்பதன் மூலமும், பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதன் மூலமும், தென்னிலங்கையில் கெப்பித்திகொல்லாவையிலும், புத்தளையிலும் வறிய சிங்கள  மக்களை இலக்கு வைத்து பேருந்துகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலமும், இத்தகைய கொடூரங்களை துணிவுடன் தட்டிக் கேட்க முன்வந்த தமது இனத்தையே சேர்ந்த புத்திஜீவிகளையும், மிதவாத அரசியல் தலைவர்களையும் ‘போட்டுத் தள்ளுவதன்’ மூலமும்; தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியுமென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை இறுதியில் எந்த மாதிரியான அழிவுகளை எடுத்து வந்திருந்தது என்பதனை நாங்கள் பார்த்தோம்.  தமிழ் அரசியலையும், தமிழ் சமூகத்தையும் 50 ஆண்டுகள் பின்னால் கொண்டு சென்று வைத்து விட்டு 2009 இல் களத்திலிருந்து வெளியேறினார்கள் அவர்கள். 


ஓர் அரச தலைவர் காழ்ப்புணர்ச்சியுடனும், வக்கிர புத்தியுடனும் செயல்பட்டால், தனது அதிகாரங்களை து~;பிரயோகம் செய்தால் அது எத்தகைய விளைவுகளை எடுத்து வர முடியும் என்ற கசப்பான பாடத்தை கோட்டாபய ராஜபக்ச, ஜே ஆர் ஜயவர்தனவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கண்ணியமாக வெளியேறிச் செல்லக் கூடிய வாய்ப்பு (Diginified Exit) ஜே ஆருக்கு கிடைக்கவில்லை. இரத்த ஆறு ஓடும் ஒரு நாட்டை, பார்க்கும் இடங்களிலெல்லாம் பிணக் குவியல்கள் தென்படும் ஒரு நாட்டை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ‘Legacy’ யாக அவர் விட்டுச் சென்றார். 


இந்த நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி முதலாவதாக செய்ய வேண்டிய காரியம் இந்த நெருக்கடியை திடசங்கற்பத்துடன் எதிர்கொண்டு, கடந்து செல்வதற்கு மக்களை தயார்படுத்தும் பொருட்டு சிங்கள - தமிழ் - முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்ற முறையில் ஓரணியில் திரள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதாகும். ஆனால், அவருக்கு உரைகளை எழுதிக் கொடுக்கும் ஆலோசகர்கள் தேசிய ஒற்றுமை, இன ஐக்கியம், இலங்கை ஒரு பல்லின, பல் கலாசார நாடு போன்ற சொற்களை இதுவரையில் வேண்டுமென்றே தவிர்த்து வந்துள்ளார்கள். 


இரண்டாவதாக, அரசாங்கத்தின் ஒரு சில தரப்புக்கள் மற்றும் அரச ஆதரவு செய்தி ஊடகங்கள் என்பன கடந்த இரண்டரை ஆண்டுகளில் முன்வைத்து வந்திருக்கும் பகுத்தறிவுக்கும், யதார்த்தத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாத பரப்புரைச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை காலமும் மிக மோசமான இனவாத / மதவாத பிரச்சாரங்களை கட்டற்ற விதத்தில் முன்னெடுத்து வந்திருக்கும் புத்த பிக்குகளையும் உள்ளடக்கிய அனைத்துப் தரப்புக்களுக்கும் ஒரு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்து வந்தாலும் சரி ‘சட்டம் அவர்கள் மீது பாயும்’ என்ற செய்தி தெளிவாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆட்களை எவ்வாறு கையாள வேண்டுமோ அவ்வாறு கையாள்வதற்கு உசிதமான ஒரு சூழல் நாட்டில் இப்பொழுது தோன்றியுள்ளது என்ற விடயம் இதற்கான ஒரு கூடுதல் அனுகூலம்.


சுதந்திரத்திற்கு பின்னர் முதல் தடவையாக சிங்கள இனவாதிகளின் கொடி மட்டுமல்லாமல் தமிழ் இனவாதிகளின் கொடியும், முஸ்லிம் இனவாதிகளின் கொடியும் ஒரே நேரத்தில் மிக மிக தாழ்ந்து பறக்கும் ஒரு யுக சந்தியில் நாங்கள் நின்றிருக்கிறோம். அந்தக் கொடிகள் அவ்வண்ணம் மிக மிக தாழ்ந்து பறக்க வேண்டுமென்பதே எம் அனைவரினதும் பிரார்த்தனை. ராஜபக்சகளின்; கைகளிலிருந்து நழுவிச் செல்லும் சிங்கள இனவாதத்தின் கொடியை ஏந்திப் பிடிப்பதற்கு விமல் வீரவன்ச தரப்பையும் உள்ளிட்ட எவருக்கும் சிங்கள மக்கள் இனிமேலும் ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. 


ஒட்டுமொத்த இலங்கை மக்களும் இனவாதத்தையும், மதவாதத்தையும் நிராகரித்து, ஒரே குரலில் பேசும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கு உசிதமான ஒரு சூழலை நாட்டில் உருவாக்குவது இன்றைய நிலையில் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டிய முதல் முன்னுரிமையாக உள்ளது. அந்த நிலையிலேயே ஓர் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பி, எமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நிம்மதியாக, சந்தோசமாக வாழக்கூடிய ஒரு நாட்டை எம்மால் அவர்களுக்கு விட்டுச் செல்ல முடியும்.


அந்த மாற்றத்திற்கான பயணத்தை சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து முன்னெடுப்பதற்கான வரலாற்றுத் தருணம் இப்பொழுது வந்திருக்கிறது என்பதன் குறியீடே இன்றைய மக்கள் எழுச்சி.


15 ஆகஸ்ட் 2021

ஒரு கணிணியின் BOOT தொழிற்பாடு

                                                              BOOT 

Boot setting


                    Boot device priority                                                                                                                                        ஆனது  ஒரு கணிணியின்  BOOTதொழிற்பாட்டை 

                இயக்கக்கூடியது  இவற்றில் 

              Hard Device /CD Rom/USB Device/DVD/Pen ஆகியவை உள்ளடங்கும்

              இவற்றில் 

           1st Boot

            2nd Boot

             3rd Boot

             என்ற அமைப்பில் எமக்குத்  தேவையான வாறு  Boot Device                                களை தேற்வு    செய்யலாம்.

      குறிப்பு; ஒன்றுக்கு மேற்பட்ட  Hard drive ,CD rom கள் இறுப்பின் அவற்றையும்

                 1,2,என்றவாறு தெரிவு செய்யலாம்.


security;

                            Security ஆனது  BIO இற்கான    password  இனையும்  Hard drive                         இற்கான  super password         இனையும்   இவற்றின்    மூலம்    கொடுத்துக்கொள்ளலாம்,        தேவை ஏற்படின்  அவற்றை அழித்துக்கொள்ளவும் முடியும்.


Exit option;

Load  optimal Difault;

இதானது ஒரு BIOS
இன்  சகல நிலையையும்  ஆரம்ப நிலைக்கு கொண்டு வரக்கூடியது.


Discard Change;

இதானது  BIOS இல் நாம் செய்த ஒரு மாற்றத்தை  நாம் விரும்பாத போது அல்லது BIOS 

இற்க்கு உகந்தது அல்ல என்று கருதும்போது  எமக்கு Discard change மூலம் அதனை இரத்துச் 

செய்து கொள்ளவும் முடியும் பல கணிணிகளில்  Dis card Change  இற்கு  F9 key இனை 

உபயோகிக்கலாம்.

SAVE CHANGE AND EXIT;


இதில் Bios இல் நாம் செய்யும் மாற்றங்களை save  செய்து   BIOS இல் இருந்து வெளியேருவதற்கான ஒரு செயன்முறை ஆகும் இத்ற்க்கு  பல கணிணிகளில்

F10 key இனை உபயோகிக்கலாம்.


    

05 ஆகஸ்ட் 2021

RANDOM ACCESS MEMORY


 

RAM இன் பயன்பாடும்,தொழிற்பாடும்

ஒரு கணிணி அல்லது மொபைல் போண் பெருமதி மிக்கதாக அமைவது

RAM இன் கொள்லளவைக் கொண்டுதான். ஒரு கணிணியின் அதிவேகமான

இயக்கத்துக்கு RAM இன் கொள்லளவுதான் காரணமாகிரது (1GB 2GB.........)

RAM என்பதன் ஆங்கில விளக்கம் Random Access Memory.                                               RAM என்பது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு. பொதுவாக Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும். RAM என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல, கணினி அல்லது மொபைல் OFF  செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். ஆகையால் தான் RAM Volatile Storage என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஒரு கணினி அல்லது மொபைல் இயங்கும் போது அதற்க்கு தேவைப்படுகின்ற தரவுகளை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரியை கணிணியால் எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.  ஒரு கோப்பின் அளவு அதிகமாக

அதாவது (RAM இன் அளவைவிட) இருக்கும்போது கணிணி ஒழுங்காக

இயங்காது அதையே நாம் SLOW, HANG என்று கூருவோம்.

                 மறுபக்கம   Non Volatile Storage என அழைக்கப்படுகிறது. இதில் இதில் சேமித்துவைக்கப்படும் சிறிய கோப்புகள் கணிணி ஓஃப்

செய்யப்பட்டாலும் அழிவதில்லை                                                                RAM இரண்டுவகைப்படு

1.SRAM---StaticRam

2.DRAM---DynamicRam                

Static RAM (SRAM) – இதுவும் Volatile Storage தான். பொதுவாக இவை Cache அல்லது registers போன்றவற்றில் பயன்படும். இவை Dynamic RAM (DRAM) விட அதிவேகமாக செயல்படக்கூடியவை. மேலும் இவை Dynamic RAM (DRAM)  போன்று refresh ஆவது இல்லை.

 

Dynamic RAM (DRAM) – குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தன்னிடம் இருக்கின்ற தகவலை refresh செய்துகொண்டே இருக்கும்.

27 ஜூலை 2021

கணிணி வன் பொருள் மென்பொருள்


                                           

                                         கணிணி வன் பொருள் மென்பொருள்                 

Bios (Basic input &output system)

Bios ஆனது ஒரு கணிணியின்  device  களின்  தொழிற்பாட்டினை  முழுமையாக   இயக்குகின்ற 

செயன்முறை      மெண்பொருளாகும்.


Advance

Cpu configuration,                                                                                                                                                                      CPU   (central prosessering unit)

இது ஒரு கணிணியின் தொழில்பாட்டு மையமான  Cpu இன் தொழிற்படுகின்ற சகல அமைப்பினையும் இது கொண்டிருக்கிறது.

Chipset Configuration,

                                              இதானது video card, Audio card, video  cip or audio chip, Ram card  ஏனைய அணைத்து Cip களையும் அவைகளின் அணைத்து  செட்டின்ஸ்களையும்    இச்  cip  Set Configuration கொண்டுள்ளது.


IDe Configuration

                                      இதானது ஒரு கணிணியின்  Hard drive,CD rom ஆகியவற்றின்  தொழில் பாட்டினை   கண்பிக்கக்கூடியது, இவை   IDE/SATA  ஆகிய இரு தொழிற்பாட்டினை உள்ளடக்கி இருக்கும்  இதில் எமக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொள்ல முடியும்.


Configure Super IO  Chipset.

                                                     இதனது ஒரு       mother bord இன்    சகல  PORT களின்      power supply யுடன் ஏனைய அமைப்புகளை கொண்டிருக்கிறது.


USB  Configuration

                                  இதானது USB Divaice களின் தொழிற்பாட்டினை காட்டக் கூடியது   இவற்றில்  எமக்குத் தேவையானவறு      settings change களை ஏற்படுத்திக் கொள்ல முடியும்.


Hardware health event monitoring

                                         கணிணியின்     mother board இன் உஷ்ன அளவையும்  அதனை ஒரு நிலையில் பேணக்கூடிய  கணிணி  ஃபேன்,வேகம் ஆகியவற்றிணையும்  mother bord  

இன்  மின்சார   தொழிற்பாட்டினையும்  காட்டக்கூடியது.




23 ஜூலை 2021

கவிக்கோ வரிகள்


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’ ? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு ?


கவிக்கோ வரிகள்

22 ஜூலை 2021

மு; மேத்தா


 



                               கண்ணீர்ப் பூக்கள்  

எந்த தேவதையாலும் அவன் 

ஆசிர்வதிக்கப்படவில்லை 

ஆனால் 

எல்லாச் சாத்தான்களாலும் 

இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கிறான்!


எந்தப் பூங்காற்றும் அவனை வருடியதில்லை 

ஆனால் 

எல்லாப் புயல்களோடும் அவன் 

போராடியிருக்கிறான்!


மகிழ்ச்சி மலர்களை அவனால் 

பறிக்க முடியவில்லை 

அவன் தோட்டத்தில் மலர்வதெல்லாம் 

கண்ணீர்ப் பூக்களாகவே காட்சியளிக்கின்றன.


என்றாலும் அவன் பயணம் பழுதுபடவில்லை 


சோகச் சிலுவைகளை நெஞ்சில் 

சுமந்து கொண்டு 

அவன் நடக்கிறான் 

அழுகைக்குப் பிறகும் ஓர் 

அணிவகுப்பு நடத்துகிறான்!


சோதர மானுட வேதனைகளுக்காக - அவனது 

கவிப்பயணம் காலசைக்கிறது 

துயரச் சுவடுகள் நெஞ்சில் குவிகின்றன!

பாதச் சுவடுகள் பூமியில் பதிகின்றன !


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழமுடியா வீழ்ச்சிகள்!


மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!


ஆடுகின்ற பேய்மனதில் 

ஆயிரமாம் ஆசைகள் 

ஆயிரமாம் ஆசைகட்கு

அனுதினமும் பூசைகள் !


சூடுகின்ற மாலைகளோ 

தோள்வலிக்கும் தோல்விகள் 

தோள்வலிக்கும் தோல்விகள் நான் 

தொடங்கிவைத்த வேள்விகள்!


காலமெனும் தாளிலொரு 

கதையெழுத வந்தவன் 

கதையெழுத வந்ததனால் 

கனவுகளில் வெந்தவன்!


ஓலமிடும் சிந்தனையால் 

உறங்குவதை விட்டவன் 

உறங்குவதை விட்டதனால் 

உடல் சிதைந்து கெட்டவன்!


மன்னவரின் சபைகள்தமை 

மயங்க வைத்த பாவலன் 

மயங்கவைத்த வேளையிலும் 

மயங்கிவைத்த கோவலன்!


மின்னும் விழிப் பொற்குளத்தில் 

மீன்பிடிக்கப் போனவன் 

மீன்பிடிக்கப் போனதனால் 

வேதனைக்குள் ளானவன் !


ஈரவிழிக் காவியங்கள் 

எழுதி வெளி யிட்டவன் 

எழுதி வெளி யிட்டதனால்  

இதயங்களைத் தொட்டவன்!


ஓரவிழிப் பார்வைகளின் 

ஊர்வலத்தில் சென்றவன் 

ஊர்வலங்கள் சென்றபோது 

ஒதுங்கிவந்து நின்றவன்!


பாயும் நதி மீதிலொரு 

படகினை நான் ஓட்டினேன் 

படகை நன்கு ஓட்டியதால் 

பரிசுகளை ஈட்டினேன்!


ஆய பல சுமைப் பரிசை 

அப்படகில் ஏற்றினேன் 

அப்படகு கவிழ்ந்ததனால் 

அலைநடுவே மாட்டினேன்!



வரங்கொடுக்கும் தேவதைகள் 

வந்தபோது தூங்கினேன் 

வந்தபோது தூங்கிவிட்டு 

வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்!


கரங் கொடுக்கும் வாய்ப்புகளைக் 

கைகழுவி வீசினேன் 

கைகழுவி வீசிவிட்டுக் 

காலமெல்லாம் பேசினேன்!


புல்லர்களின் மனக்குகையில் 

புனித விதை விதைத்தவன் 

புனித விதை விதைத்தபோது 

புதை மணலை மிதித்தவன்!


செல்லரித்த மானுடத்தைச் 

சீர்திருத்தப் பாடினேன் 

சீர்திருத்தப் பாடியதால் 

பேரெதிர்ப்பைத் தேடினேன்!



அற்பர்களின் சந்தையிலே 

அன்பு மலர் விற்றவன் 

அன்பு மலர் விற்றதற்குத் 

துன்ப விலை பெற்றவன்!


முட்புதரில் நட்பு மலர் 

முளைக்குமென்று நம்பினேன் 

முளைத்து வந்த பாம்புகளே 

வளைத்த போது  வெம்பினேன்!


நெஞ்சுவக்கும் மலர் பறிக்க 

நெருப்பினில் கை விட்டவன் 

நெருப்பினில் கை விட்டதனால் 

நினைவுகளைச் சுட்டவன்!


வஞ்சி மலர் ஊமை மன 

மாளிகையின் அதிபதி!

மாளிகையின் அதிபதிக்கு 

மனதில் இல்லை நிம்மதி!



சோலைவழி வீதிகளில் 

சுகமளிக்கும் பார்வைகள் 

சுகமளிக்கும் பார்வைகள் என் 

சுதந்திரத்தின் போர்வைகள்!


பாலைவன மணல் வெளியில் 

பாடகனின் யாத்திரை 

பாடகனின் யாத்திரையே 

பசித்தவர்க்கு மாத்திரை!


என் வாழ்க்கை நாடகத்தில் 

எத்தனையோ காட்சிகள் 

எத்தனையோ காட்சிகளில் 

எழ முடியா வீழ்ச்சிகள்!

மண் வாழ்க்கை மேடையில் நான் 

மாபெரிய காவியம் 

மாபெரிய காவியத்தின் 

மனம் சிதைந்த ஓவியம்!

                   

18 ஜூலை 2021

மொஹிதீன் பெக்


                                                                 

மொஹிதீன் பெக் என்ற பெயர் கேட்டால்  எமது காதுகளில் ஒலிப்பது ;புத்தங்சரணங் கச்சாமி:

என்ற சிங்கள மொழிப் பாடல்  அவர் ஒரு இஸ்லாமியர்  இப்படியான பௌத்த   மத பாடல்கள்

பாடுவது முஸ்லிம்களில் சிலருக்கு மனதளவில் விருப்பம் இல்லாவிடினும் அவர்தம் பாடல்கள்

காதுகளில் கேட்க்கும்போது தம்மையும் மறந்து அந்த குரலில்    லயித்து விடுவதுண்டு,

இலங்கையை பொருத்தவரை சிங்கள மக்கள்  அவரை தமது மனதில் உயரிய இடத்தில் இன்னும்

வைத்திருப்பதற்கு காரணம்   அந்த கம்பீரமான குரலும்  தமக்கே உரித்தான உச்சஸ்தாயில் பாடும்

திறனும்தான்.  ;செமவிட பவசனு முவின்  ஒபே  புத்தங்  சரணங் கச்சாமீ; என்ற பாடல் பதிவுக்காக

பெக் அவர்களை தேர்வு செய்ததில் ஒரு சுவாரசியமான  கதை உண்டு ( இந்தப்பாடல் ஒரு பிரபலமான ஹிந்திப்பாடலின் மெட்டில் அமைந்தது என்பது  வேரு கதை,)  இப் பாடலை பாட

முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  பெக்  பின்பு இது புத்தரின் மகிமைபறறிய பாடல் என்பதால்

ஒரு முஸ்லிம்  பாடுவதில் குழுவில்  சிலருக்கு  பிடிக்காததால்  வேரு பாடகர் இந்தியாவிற்கு

அழைத்து செல்லப்பட்டுள்ளார் (அப்போது ஒலிப்பதிவு கூடங்கள் இலங்கையில் இல்லாத காலம்)

பாடலுக்கு அந்தப்பாடகரின்  குரல் பொருந்தாத காரணத்தால் மீண்டும் மொகிதீன் பெக்

இலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு  பாட வைக்கப்பட்டுள்லார். அந்தப்பாடலே

இன்ரும் என்ரும்  மொகிதீன் பெக்  என்ற பெயர் நிலைக்க காரணமானது, அது மட்டுமல்ல

அவரின்  அதிகமான பாடல்கள்    இன்னும் தலைமுறை தாண்டியும் ரசிக்கப்படுகிறது   உதாரணமாக    ;கோடுகேலி சொயாலா, படுகன்னை விகுனன்னை பொலடை யன்னே:

போன்ற  நூற்றுக்கணக்கான பாடல்களைச்சொல்லலாம்,மொகிதீன் பெக்  தமிழ் இஸ்லாமியப் படல்கலும்,உருதுப்பாடல்கலும் பாடியுள்லார்.

                                                                   கொலம்பியா இசைதட்டில் இவர் பாடிய  முதற்பாடல்

;கருணா முகுதே; 1936, சிங்கள   மொழியில் வெளியாகிய  இரண்டாம் திரைப்படமன  ;அசோகமாலா; இப்படத்தில்  நாங்கு  பாடல்கள்  பாடியதுடன் ,ஒரு  பாடல் காட்ச்சியில் இவரே நடித்துமுள்ளார்,1947.   பின்பு 1950 கலிள்  பிரபலமான சிங்களத் திரைப்பட

பின்னனிப் பாடகராகத்திகழ்ந்தார் 1953  ஆம் ஆண்டில் சுஜாதா திரைப்படத்தில் ஜமுனாராணியுடன் இணைந்து  பாடினார்,1955 ஆம் ஆண்டு; செட சுலங்க; படத்தில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார், இலங்கை வானொலியில் நாங்கு மொழிப் பாடகராக

இவர்  திகழ்ந்ததாகவும் அறியக் கிடைக்கிறது, இன்னும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட

ஓரிரு தமிழ் திரைப்படங்களிலும் பின்னனிபாடியுல்ளார்,

                                                                        இலங்கையின் முதலாவது சுதந்திர தின வைபவம்,1974 பொதுநலவாய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு பாடியுள்ளார், இவரது  முக்கியத்துவம் காரணமாக 1956 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர்  எஸ்.டப்லிவ்,ஆர்.டீ,பண்டாரநாயக  இலங்கை குடியுரிமை வழங்கி கவுரவித்தார்.

50 வருடங்கலுக்கும் மேற்பட்ட அவரது இசை பயணத்தில்  அதிகமான இஸ்லாமிய பாடல்க்லும்

பாடியுள்ளார் அவற்றில் ;தீனெனும் இஸ்லாம் நெறிதனை தாங்கி;/ ; இறையோணின் சுடரான நபி

நாதரே; போன்ற இன்னும் அதிகமான பாடல்கலும் பாடியுள்ளார், அரை நூற்றாண்டுகால இசை வாழ்வில்  450 சிங்கள மொழிப் படங்களிலும் 9500க்கும் மேற்பட்ட பாடல்களூம் பாடியுள்ளார்

அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களுக்கு இலங்கை அரசு அதன் உயரிய விருதான   ; கலா சூரி;

என்ற விருதையும் தந்து கௌரவித்தது 1983,1987.

                                                                    இவ்வளவு திறமைகளையும் பெருமைகளையும் கொண்ட அல் ஹாஜ் மொகிதீன் பெக் அவர்களின் பெற்றோர்,இந்தியாவில்  உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட, காவல் துறையில் அதிகாரியாக  பணிபுறிந்த கரீம் பெக்,பீஜான் பீவி, இவருடைய உடன் பிறப்புக்கள் 13பேர்  இவரது சகோதரர் அப்துல் அஜீஸ் ஒரு விபத்தில் கொழும்பில் மரணமான போது 

தம் பெற்றொருடன்  இலங்கை வந்த இவர்  இங்கே தங்கிவிடுகிறார்  தனது 18 வது வயதில் இலங்கை இராணுவத்திலும் சேர்ந்து தொழில் புறிந்த இவரை  பிரபல இசை கலைஞர் 

கௌஸ் மாஸ்ட்டர்  அவர்கள் இனம் கண்டு உற்சாகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார்,

இவரது மனைவியின் பெயர் சகீனா பெக்  இவருக்கு 3 பிள்ளைகள் அவர்களும் பிரபலமான பாடகர்கள்.

                                                தனது 13 வது வயதில் பாடத் தொடங்கியவர் தனது72வது வயதில்       1991 நவம்பர் 4ம் திகதி  மரணமடைந்தார்.

அவருடைய வசனங்கள்;

         [  ;நான் புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வந்தவன் நான் புத்தர் பற்றிய பாடல்களை பாடுவதையே

             விரும்புகிறேன், எந்த மதமானாலும் நாமெல்லோரும் சகோதரர்கள், இந்த நாட்டு        மக்களிடமிருந்து பெற்ற அன்பை நான் என் வாழ்க்கையின் மாபெரும் வெற்றியாக   

கருதுகிறேன்;]

                 இந்த நாடு அவருக்கு என்ன செய்தது ஒரு தபால் தலை வெளியீட்டை தவிற

              


17 மே 2021

கோவிட் மக்கள் தொகை குறைப்பா?

 


உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு காலம் பல அறிஞர்கள் கொண்ட குழு ஆய்வுசெய்து கண்டறிந்ததுதான் கொரோனா வைரஸ் என்றும் அதனைத்  தொடர்ந்து வருகிற தடுப்பூசி என்றும் உலக அரசியல் அறிந்த அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இது குறித்த கட்டுரை ஆங்கில நாளேடான சவரன் இன்டிபென்டன்ட் (Soverign Independent) எனும் நாளிதழில் ஏற்கெனவே வெளிவந்துள்ளதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். இது நம்பும்படியாக உள்ளதா என்று கேட்டால் உலகில் காணும் இன்றைய நிலையைப் பார்த்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை என்றே சொல்லலாம். 


மனித எதிரிகள் கண்டறிந்த செயற்கையான வைரஸ்தான் இது என்பதற்கு மனிதநேயமுள்ள மருத்துவர்கள் கூறும் சான்று என்னவெனில், இயற்கையான தொற்றுநோய் என்பது குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் அல்லது நாட்டில் தோன்றி அந்த நாட்டோடு முடிந்துவிடும். மற்ற நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குளிர்ப்பிரதேசங்களில் தோன்றினால் வெப்ப மண்டலப் பிரதேசங்களில்  அது அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கு முதலில் தோன்றியதோ அங்கிருந்து பரவி அண்டை நாடுகளுக்குப் பரவி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. இப்படி ஒரு  நாட்டில் உருவாகி உலகு முழுவதும் பரவுவது என்பது இதுவரை நாம் கண்டிராதது. எனவே இது செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்கள். 


மனித எதிரிகள் இந்த வைரஸைத் தோற்றுவித்த காரணம், மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து, அதன்மூலம் மக்கள்தொகை குறைய வேண்டும் என்பதுதான். அது இன்று கண்கூடாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்தோடு இந்த கொரோனா வைரஸ் என்பதைக் காரணம் காட்டி, தடுப்பூசி என்ற பெயரில் மக்களை மலடாக்கும் வேலையைச் செய்ய வேண்டும். அதன்மூலம்  இனி குழந்தைப் பிறப்பையே தடுத்து நிறுத்திவிட வேண்டும். இதனால் மக்கள் தொகை வளர்ச்சி தடைபட்டு நின்றுவிடும் என்பது அந்தச் சதிகாரர்களின் திட்டம் என்று உலக அரசியல் அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  


 

அந்தத் தடுப்பூசி சிலருக்குத் துரித மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலருக்குத் தாமதமாக மரணத்தை ஏற்படுத்தலாம்; வேறு சிலர் மலடாகலாம். மலட்டுத்தன்மை என்பது இரு பாலருக்கும் உண்டு. ஆண்களின் உயிரணுக்களின் வீரியம் குறைந்து, பெண்ணின் கருப்பையை அடைய முடியாமல் செயலிழந்துவிடும். அல்லது ஆணின் உயிரணுவை ஏற்றுக்கொள்கிற வகையில் பெண்ணின் சினைப்பை செயல்படாமல் போகலாம். அந்தக் குறைபாடு இன்று இந்தியாவிலுள்ள பத்து சதவிகிதத்திற்கு மேலான ஆண்-பெண்களுக்கு இருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தம்பதியருக்கு இந்தக் குறைபாடு உள்ளது. எதிர்காலத்தில் இது இன்னும் பரவலாகலாம். இதனால் பல்வேறு தம்பதியரின் குழந்தைப்பேறு கனவாகவே முடிந்துவிடும். 


அதையும் மீறிக் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் அதற்கு நிறையப் பணம் செலவாகும். ஆம். செயற்கைக் கருவளர்ச்சி மையத்தைத்தான் தம்பதியர் நாட வேண்டும். அங்கு சென்றால் பல இலட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தையேனும் பெற்றுக்கொள்ளலாம். இதுவெல்லாம் மனித எதிரிகளான சதிகாரர்களின் சதித்திட்டம் என்பதை மனிதநேயமுள்ள மருத்துவர்கள் விவரிக்கிறார்கள்.


 

கொரோனா என்பதைச் சாதாரணமாகப் பார்த்தால் அது ஒரு சளிநோய்; அதை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். பாதிக்கப்பட்ட பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதைப் பயத்தோடும் பயங்கரமாகவும் பார்த்தால் இது ஓர் உயிர்க்கொல்லி நோய். முதலில் காய்ச்சல் வரும்; பிறகு மூச்சுத் திணறல் வரும்; அதன் பிறகு மரணம். சாதாரண சளி நோயைப் பூதாகரமாக ஆக்குவது ஏன்? 


கொரோனாவுக்குப் பல்வேறு மருந்துகள், ஊசிகள் என வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்  உண்மையிலேயே சரியான மருந்து எது, சரியான தடுப்பூசி எது என்று இதுவரை மருத்துவர்கள் உறுதியாகக் கூறவில்லை. தடுப்பூசி போட்ட பிறகு மீண்டும் கொரோனா வராதா என்ற கேள்விக்கு உறுதியான பதிலில்லை.  அதேநேரத்தில் மீண்டும் மற்றொரு தடுப்பூசி போட வேண்டும் என்கிறார்கள். இந்த ஊசி போட்ட பிறகு எதிர்விளைவுகளோ பக்கவிளைவுகளோ ஏற்பட்டால் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) உண்டா என்றால், அதெல்லாம் கொடுக்க முடியாது என்கிறார்கள்.


கொரோனாவை உண்மையிலேயே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ளவர்கள் சென்ற ஆண்டு செயல்படுத்திய சிகிச்சை முறையை மேற்கொண்டு மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாமே? அதாவது சென்ற ஆண்டு மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவை (குருதிநீர்) எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்தினால் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்கள். அதனடிப்படையில் நிறையப் பேர் வரிசையில் நின்று பிளாஸ்மா வழங்கினார்கள். ஆனால் இந்த ஆண்டு அது பற்றிய பேச்சே இல்லையே ஏன்? 


 

கொரோனாவை வியாபாரமாகப் பார்ப்பவர்கள் மக்களைப் பயமுறுத்திச் சம்பாதிக்கிறார்கள்; இதை  ஒரு சாதாரண நோயாகப் பார்ப்பவர்கள் எளிய சிகிச்சை முறைகளை வெளியிடுகின்றார்கள்; அச்சப்பட வேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள். அவற்றுள் மிக முக்கியமான ஆலோசனை நீராவி சிகிச்சையாகும். அதாவது நாம் நீரைச் சூடுபடுத்தி அதிலிருந்து ஆவி பிடித்தால் நம் மூக்கினுள் நுழைந்துள்ள கிருமிகள் இறந்துவிடும். இது ஓர் எளிய சிகிச்சை முறை. இதை ஒரு வாரம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இது எல்லோரும் பின்பற்றத்தக்க ஓர் எளிய சிகிச்சையாகும்.


மிக எளிய முறையில் குணமாகிவிடும் ஒரு சளி நோய்க்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் ஏன்? ஊடகங்கள் ஏன் மக்களை இந்த அளவிற்கு அச்சுறுத்துகின்றன? ஏன் மக்களின் வியாபாரத் தலங்களெல்லாம் முடக்கப்படுகின்றன? ஏன் வழிபாட்டுத் தலங்களெல்லாம் பூட்டப்படுகின்றன? இதன் பின்னணி என்ன? இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் செய்யப்பட்டு அவர்கள் மக்கள் உடல்களில் திணிக்க முயல்வது எதை? தடுப்பூசியைத்தானே? பணத்திற்கோ இலவசமாகவோ அதைச் செலுத்தத் துடிக்கின்றார்கள்; கட்டாயப்படுத்துகிறார்கள். அதைச் செலுத்தவில்லையானால் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முடியாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இதுவெல்லாம் மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதா? இதையெல்லாம் குறித்து மருத்துவ அறிஞர்களே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.


இந்தக் கொரோனா பூதாகரமாக்கப்பட்டுள்ளது என்று மனிதநேயமிக்க மருத்துவர்களே சொல்கிறார்கள். ஆம்! கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோர் என்று கணக்குக் காட்டப்பட்டுள்ள ஏராளமானோர் ஆஸ்துமா, நீரிழிவு, கேன்சர், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகி இருந்தவர்கள். அவர்கள்தாம் இந்த வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இறந்துபோகிறார்கள். மேலும் இந்த நோய் குறித்த பயத்தாலும் பலர் இறந்துபோகின்றார்கள். இது தவிர, கொரோனாவால் இறப்போர் மிக மிகக் குறைவே என்று கூறுகின்றார்கள். அதற்கு ஆதாரமாக, கொரோனா இல்லாத காலங்களில் இறந்தோரின் எண்ணிக்கையையும் கொரோனா வந்தபின் இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்வளவு பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை என்கிறார்கள். இருப்பினும் இது ஊடகங்களால் பூதாகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. 


   

இந்த கொரோனா வைரஸின் முக்கிய வேலை நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள ஈரப்பதத்தைச் சளியாக மாற்றிவிடுவதால் மூச்சுவிட முடியாமல் மனிதன் திணறுகிறான். அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மனிதன் இறக்க நேரிடுகிறது. இதனால் ஆக்ஸிஜன் வாயு உருளை பொருத்தப்பட்டுச் செயற்கையாகச் சுவாசிக்கச் செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையென்றே வைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்ஸிஜன் வாயு உருளை குறித்த பேச்சு சென்ற ஆண்டு எழவில்லையே ஏன்? ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பேச்சு சென்ற ஆண்டு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எழவில்லை. இந்த ஆண்டு மட்டும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற பேச்சு பரவலாகக் காணப்படுவதேன்?


நாடு முழுவதும் ஆக்ஸிஜன் வாயு உருளை பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் செய்து, 14 உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதைத் திறக்க அரசாங்கமே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, பெருமுதலாளிகள் இலாபம் சம்பாதிக்க முயல்கிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை.


     

இதையே மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். ஆக்ஸிஜன் வாயு உருளையைப் போதிய அளவு நம் நாட்டிலேயே தயாரிக்க முடியும். ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும்  அரசு மேற்கொள்ளவே இல்லை. கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் மாண்டு கொண்டிருக்கிறார்கள். மக்களின் உயிர்கள்மீது அக்கறை உள்ள அரசு அதற்கான முன்னேற்பாட்டையல்லவா செய்திருக்க வேண்டும் இத்தகைய கல்நெஞ்சினர் ஒருவர்தாம் நமக்குத் தேவை என்று முடிவெடுத்த மனித எதிரிகளின் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டவர்தாம் இந்த (_____)அதனால் அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பாரே தவிர மக்கள் சாகின்றார்களே என்று அழுதுகொண்டிருக்க மாட்டார். 


மக்கள்மீது எந்த அக்கறையும் இல்லாத அரசு, கொத்துக் கொத்தாக மக்கள் இறந்தபோனதைக்  குறித்துக் கவலைப்படாத அரசு, திடீரென மக்கள்மீது அக்கறை ஏற்பட்டு, அனைவரையும் தடுப்பூசி செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஏன்? இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? 

ஆனால் அவர்களெல்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது மனித எதிரிகள் எதிர்பார்த்த மரண எண்ணிக்கை இதைவிட அதிகமாகும். அந்த இலக்கு எண்ணிக்கையை அடைகின்ற வரை இந்த கொரோனா அலை மக்களை விட்டு அகலாது. இரண்டாம் அலை, மூன்றாம் அலை, நான்காம் அலை என்று தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். இன்னும் நிறைய உயிர்ப்பலிகள் ஏற்படவே செய்யும். ஆக கொரோனா எனும் வைரஸுக்குள் பல்வேறு சூழ்ச்சிகளும் மர்மங்களும் மறைந்துள்ளன. அவை ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.  


அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: மனிதக் கரங்கள் தேடிக் கொண்டதன் விளைவாகத் தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது. அவர்கள் செய்த சில வினைக(ளின் விளைவுக)ளை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய்ய வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.... (30: 41)

---------------------


15 மே 2021

இஸ்ரேல் பலஸ்தீன்




 



இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை?

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்

1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்துக்காகப் போராடிவருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்துக்காகப் போராடிவருவது பாலஸ்தீனம்.

இஸ்ரேல். யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மத்திய கிழக்கு நாடு. இங்கு 70 சதவிகிதத்துக்கும் அதிகமான யூதர்கள் வாழ்ந்துவருகின்றனர். சுமார் 20 சதவிகித இஸ்லாமியர்களும், 10 சதவிகிதத்துக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் வாழ்ந்துவருகின்றனர்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் `அப்சர்வர் ஸ்டேட்' என்கிற அந்தஸ்தைப் பெற்றது. இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை, காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளன.

இஸ்ரேல் - இஸ்லாமிய நாடுகள் பிரச்னை!

இஸ்ரேலில், கணிசமான அளவில் வாழ்ந்துவரும் அரேபியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. அரேபியர்கள் வாழ்கிற பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை ஏற்படுத்திவருகிறது. யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேலை மாற்றும் முயற்சியில் அங்குள்ள ஆட்சியாளர்கள் சில சட்டங்களையும் அமல்படுத்திவந்தனர். பாலஸ்தீன நில அபகரிப்பு, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்துவந்தன.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணைபோவதாகவும், இஸ்லாமிய நாடுகள் குற்றம்சாட்டிவந்தன. இதன் காரணமாக இஸ்லாமிய நாடுகள், போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார உறவுகள் என எந்த உறவும் இஸ்ரேலுடன் வைத்துக்கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டன.


ஜெருசலம் பிரச்னை!

1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்தது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறிவருகின்றனர்.

கிழக்கு ஜெருசலேமின் பழைமையான பகுதியில் அமைந்திருக்கிறது அல் அக்‌ஷா மசூதி. இதுதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரை `டெம்பிள் மவுண்ட்' என்று அழைக்கிறார்கள் யூதர்கள். இததைத் தங்களது புனிதத் தலமாகக் கருதுகிறார்கள் அவர்கள். எனவே, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஜெருசலேமை புனித நகராகக் கருதிவருகின்றன.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்தநிலையில், 2017-ம் ஆண்டு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் மேலும் வலுப்பெறத் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கிவருகிறது ஹமாஸ் போராளிகள் அமைப்பு. இஸ்ரேலை எதிர்த்துப் போராடிவருகிறது இந்த அமைப்பு. இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்துப் பலமுறை போர் செய்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு. `ஹமாஸ் படை ஒரு தீவிரவாத அமைப்பு' என நெடுங்காலமாகக் குற்றஞ்சாட்டிவருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு

இப்போது என்ன பிரச்னை?

நெடும்காலமாகவே கிழக்கு ஜெருசலேமில், அதிக அளவில் வாழும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி மதப் பிரச்னைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும். குறிப்பாக ரமலான் நெருங்கும் நேரத்தில் அங்கு வன்முறை வெடிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள். இந்த அணிவகுப்பின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் உண்டாகும். இந்த ஆண்டு அணிவகுப்பு நடப்பதற்கு முன்பாகவே மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரச்னை தொடங்கியது எப்போது?

ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமிலுள்ள Damascus Gate Plaza எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இஸ்லாமியர்கள் அங்கு கூடுவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்தது இஸ்ரேல் காவல்துறை. இதையடுத்து ஏப்ரல் 16-ம் தேதியன்று அல் அக்‌ஷா மசூதியில் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல். இதையடுத்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் சிலரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மே 7-ம் தேதியன்று இஸ்ரேல் காவல்துறையினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் அல் அக்‌ஷா மசூதியில் மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து கடந்த திங்களன்று (மே 10) பாலஸ்தீனர்கள் அல் அக்‌ஷா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது மசூதிக்குள் நுழைந்து சோதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். `யூதர்கள் நடத்தவிருக்கும் பேரணியில் கற்கள் வீசுவதற்கு இஸ்லாமியர்கள் திட்டமிட்டிருப்பதாக' கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையின்போது இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்த பாலஸ்தீனர்களைத் தாக்கியதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

அல் அக்‌ஷா மசூதி

அல் அக்‌ஷாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 30-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசி தரைமட்டமாக்கியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தத் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதால் ஜெருசலேமில் போர்ச்சூழல் நிலவிவருகிறது.

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்தியாவுக்கான ஐ.நா சபையின் நிரந்தரத் தூதர் திருமூர்த்தி, ``இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் இந்தியா ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது. காஸாவிலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டதற்கு கண்டனங்களைப் பதிவுசெய்கிறோம். இரு தரப்புக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னையில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ``பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வை நிறுவ வேண்டும். பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் சுதந்திரம், பாதுகாப்பு, செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் சமமாகப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று தெரிவித்திருக்கிறது.

ஐ.நா

இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டு, அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், ``பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதோடு அவர்களுடைய மதத்தைக் கடைபிடிப்பதற்கான உரிமையையும் வழங்க வேண்டும். அல் அக்‌ஷா மசூதியின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக்கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரும், ``ஜெருசலேமில் அமைதி திரும்ப வேண்டும்'' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்வு ஏற்பட்டு, அங்கு அமைதி திரும்பும் என நம்புவோம்

06 மார்ச் 2021

என் சின்ன மகனின் பிறந்த நாள்


 காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற  என் அழகிய மகனுக்கு பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற 

எல்லாம் வல்ல இறைவனை

போற்றி

 என் சின்னவனே கண்மணியே

உனக்கு கல்வி செல்வம் ஆரோக்கியம்  என்றும் உண்னுடன் கூடிவாழும் 

இணைபிரியா உடன் பிற்ப்புகள்

எல்லாம் கிடைத்து 

வல்லவன் அல்லாஹ் காட்டிய

வழியில் வாழ்ந்திட இரு கரம்

ஏந்தி பி ரா ர் த் தி க்கும்

அன்பு DADA

22 டிசம்பர் 2020

நேர்மை

 நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசு..! எல்லா மனிதர்களிடமிருந்தும்அதை எதிர்பார்க்க வேண்டாம்..!!*


*பணக்காரன் ஆக வேண்டுமா..??அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை..!தேவைகளைக்குறைத்துக் கொள்ளுங்கள்..!!*


*புதிதாக பலரை காணும் போது.. பலருக்கு பழைய முகங்கள் தெரியாமல் போய் விடுகிறது..!!*


*சில குற்றங்களை மன்னிப்பதாலும்.. பல குறைகளை மறப்பதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன..!!*


*உங்கள் வெற்றிகளை எண்ணி பார்க்காதீர்கள்..உங்கள் தோல்விகளை மட்டும் எண்ணிப்பாருங்கள்..!வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..!!*


*உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு  செய்கிறது..!!*


*எளிதாக கிடைத்துவிடும் எந்த பொருட்களும்.. இனிதான நினைவுகளை தருவதில்லை..!!*


*நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு..!உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு..!!*


*சத்தியங்களை நிலை நாட்ட துணிந்து விட்டால் சில , சாகசங்களை செய்து தான் தீரவேண்டும்..*


*சிகரத்தை நீங்கள் தீண்ட வேண்டுமானால் , சீரும் துணிவை பெற்றிருக்கவேண்டும்.*


*சுழன்று வந்த ஐவர்களின் வாழ்வும் இந்த , சூதாட்டத்தில் முழ்கி போயின நினைவிருக்கட்டும்.*


*செம்மல்கள் எத்தனை தோன்றினாலும் இவனது , சேர்க்கைகள் மட்டும் குலைந்தே போகிறது.

 

*சோர்வு ,சோகம் ,சோம்பல் ,இவைகளை தள்ளி வையுங்கள்