26 நவம்பர் 2020

குரங்கும் மனித வாழ்வும்

 



குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.*


*காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.*


*அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.*


*அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.*


*இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.* 


*ஆனால்,*


*மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?*


*மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?*


*மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.*


*இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.* 


*இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.*


*தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.*


*தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.*


*'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.*


*இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.* 


*அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,* 


*“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,*


*“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும்,*


*“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன், சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.* 


*மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...*


*"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;*


*“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.*


*“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.*


*“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.*


*“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.*


*"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.*


*"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.*


*"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.* 


*“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.*


*“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.*


*"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.* 


*“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.*


*“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.*


*"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "*


*என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.*


*இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.*


*தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..*


*தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, வேதாத்திரி  மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.*


*நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*   

                       *#அன்பான_இனிய_நற்காலைப்பொழுது_வணக்கம்_நட்பே.*


 *#வாழ்க_வளமுடன்.*

23 நவம்பர் 2020

நாம் தனியாக இல்லை

 *வானத்தைப்பாருங்கள் நாம் தனித்து இல்லை . இந்த பிரபஞ்சம் முழவதும் நம்மிடம் நட்பாக உள்ளது . கனவு காண்பவர்களுக்கும் , உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.*
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு
*அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்தி பயணித்தால் ....*
*அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம் மனிதனை கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது நிதர்சனம்..!!!!*
*உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்....*
*எடுத்த எடுப்பிலேயே என்னால் இது முடியுமா என்று எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்...*
*தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது....*
*போட்டியில் தோற்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானாவன்.*
*முயன்றால் உங்களால் முடியும்...*
*அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல...*
*விடா முயற்சியினால் தான்...!!!!*
 
*#வாழ்க_வளமுடன்.*

20 நவம்பர் 2020

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்* 

*சில இழப்புகள்.*


*வெளிப்படுத்த* 

*முடியாமல் சில*

*உண்மைகள்.*


*நம்ப முடியாமல்* 

*சில துன்பங்கள்.* 


*அனுபவிக்க* 

*முடியாமல் சில* 

*சந்தோஷங்கள்.*


*இவை அனைத்தும்* 

*நிறைந்ததுதான்* 

*வாழ்க்கை...*


*வாழ்க்கை* 

*எல்லோருக்கும் சீராக*

*சென்று விடுவதில்லை..*


*ஏற்ற இறக்கம்* 

*யாராலும் தவிர்க்க* 

*முடியாது..*


*தவறி விழும் நிலையிலும்* 

*உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..*


*ஏனெனில்,*


*உங்கள் வேதனையை* 

*கொண்டாட.. இங்கு* 

*ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!*


*உங்களை* 

*நீங்களே செதுக்கி* 

*கொண்டே இருங்கள்..*


*வெற்றி பெற்றால்*

*சிலை..!*

*தோல்வி அடைந்தால்* 

*சிற்பி..!!*


*கடனாக இருந்தாலும் சரி..*

*அன்பாக இருந்தாலும் சரி..*

*திருப்பி செலுத்தினால்* 

*தான் மதிப்பு..!!*


*குறைகளை தன்னிடம்* 

*தேடுபவன் தெளிவடைகிறான்..!*


*குறைகளை பிறரிடம்* 

*தேடுபவன் களங்கப்படுகிறான்..!!*


*ஒருவர் எந்த காரியம்* 

*செய்தாலும் அதில்* 

*வெற்றி பெற முடியாமல்* 

*போவதற்கு ஊக்கமின்மை* 

*ஒரு பெரிய காரணமாக* *கருதப்படுகின்றது.* 


*ஊக்கம் இல்லாமல்* 

*செய்யும் எந்த காரியமாக* 

*இருந்தாலும்,* 

*அது முழுமையும்*

*பெறுவதில்லை,* 


*வெற்றியும்* 

*பெறுவதில்லை.* 


*நீங்கள்* 

*சிறியதோ, பெரியதோ,*

*நிச்சயம் ஊக்கத்தோடு* 

*ஒரு காரியத்தை செய்ய* 

*முயலும் போது,*


*அதில் வெற்றியும்,* 

*மகிழ்ச்சியும் உங்களைத்*

*தேடி வரும் என்பதில்*

*சந்தேகம் இல்லை.*


17 நவம்பர் 2020

மனமும் தன்னுணர்வும்



*மனம் ஒரு பிளவுபட்ட* 

*கண்ணாடியைப் போன்றது ..!*


*உணர்வுகள் பிளவுபட்டு* 

*விடும்போது அவை* 

*மனமாக மாறி விடுகிறது ..!*


*நீங்கள் உள்ளே* 

*பிளவு பட்டிருப்பதால்*

*அவை வெளியே* 

*வேறுபட்டு தெரிகின்றன ..!*


*எதிர் நிலை இல்லாமல்* 

*மனம் ஒரு பொருளைப்* 

*புரிந்து கொள்வதில்லை ..!*


*வேறுபாட்டின்*

*வாயிலாகத்தான் எதையும்* 

*மனம் பார்க்க பழகியுள்ளது ..*


*இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்* 

*புரிந்து கொள்ளமுடியாது ..!*


*கவலையே இல்லையென்றால்* 

*நம்மால் சந்தோஷத்தை* 

*புரிந்து கொள்ள முடியாது ..!*


*மனதிற்கு எதிர்மறை* 

*தென்படும் போதுதான்* 

*எதையும் புரிந்து கொள்ளும் ..!*


*இருப்பு நிலைக்கு*

*எதிர்மறை* 

*எதுவும் கிடையாது ..!*


*மனம் எதிர்மறையின்* 

*வாயிலாகத்தான்* 

*இயங்கும் ..!*


*ஆனால் இருப்புநிலை* 

*ஒன்றையே சார்ந்தது ..!*


*மனம் இரட்டை நிலை* 

*கொண்டது ...

11 நவம்பர் 2020

வலிகள் தான்.வாழ்க்கை



*வாழ்க்கையில்*

*ஆயிரம் வலிகளும்,*

*வேதனைகளும்,*

*துன்பங்களும்*

*இருக்கத் தான் செய்யும்.*


*வாழ்க்கையை*

*ரசித்து வாழ வேண்டும்*  

*எல்லாம் கடந்தால் தான்*

*சிகரங்களை அடைய முடியும்.*


*வலிகளை*

*ஏற்றுக் கொள்ளாத* 

*வரையில்* 

*வாழ்க்கையில்*

*வளங்களைக்* 

*காண முடியாது.*


*பெரும்பாலான* 

*வெற்றியாளர்களின்* 

*சாதனைகளை* 

*உரம் போட்டு வளர்ப்பதே*

*அவர்களின்* 

*பெருந்தோல்விகளும்*, 

*பொறுக்க முடியாத*

*வலிகளும் தான்.*


*வலி வந்த போது*

*தான் நாம் இந்த* 

*பூமிக்கு வருகிறோம்.*


*வலியோடு தான்*

*நம் தாய் நம்மைப்*

*பிரசவிக்கிறாள்.*


*வலிகளால்*

*நிரப்பப்பட்டது தான்*

*இந்த வாழ்க்கை.*


*உடற்பயிற்சி செய்யும்*

*போது ஏற்படும்*

*வலிகளை பொறுத்து*

*கொண்டு மீண்டும் மீண்டும்*

*பயிற்சி செய்யும் போது தான்* 

*அழகான உடற்கட்டை*  

*பெற முடிகிறது.*


*இப்படித் தான்* 

*இந்த வாழ்க்கையிலும்* 

*வலிகளை ஏற்றுக் கொள்ளும்* 

*போது தான் வளமான* 

*வாழ்க்கை வாழ முடியும்.*


10 நவம்பர் 2020

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

 





''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது!


உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம்.


*''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''*


''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.


துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''


*''முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?''*


''உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''


*''எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?''*


''எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!''


*''முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?''*


''அப்படி இல்லை. 'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது. அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்!''


*''எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?''*


''நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!''



28 அக்டோபர் 2020

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை....


சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை


உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது


அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது


கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது


மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது


புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும்


புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது


காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு


புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்

25 அக்டோபர் 2020

சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு

 


விழித்துக்கொள் மனிதனே..


கால சூழ்நிலைக்கு

ஏற்றவாறு உன்னை

மாற்றிக்கொள்..!


ஆம்...!

மனிதமில்லா உலகில்

சொத்துக்களுக்கு

இருக்கும் 

மதிப்பு கூட 


மனிதனின்

சோகங்களுக்கு

இருப்பதில்லை..!


காசு பணத்திற்கு

இருக்கும் 

மதிப்பு கூட 


மனிதனின் 

கண்ணீர் 

துளிகளுக்கு

இருப்பதில்லை..!


அடாவடி 

மனிதர்களுக்கு 

இருக்கும் 

மதிப்பு கூட 


அன்பானவர்களுக்கு

இருப்பதில்லை..!


விழித்துக்கொள்

மனிதனே..!


சோகங்கள் ஒன்றும்

சொத்துக்கள் அல்ல

சேர்த்து வைப்பதற்கு

அதை அன்றன்றே

செலவு செய்துவிடு..!


கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல

யாருக்கு வேண்டுமானாலும் 

சிந்தி கொண்டிருக்க..!


அன்பு ஒன்றும்

அனாதையல்ல

தகுதியற்றவரிடத்திலும் 

காட்டி ஏமாந்து விட..!


விழித்துக்கொள்

மனிதனே..!


இயந்திர 

உலகிற்கு ஏற்ப

இசைந்து வாழ 

கற்றுக் கொள்..!


மனிதாபிமானமற்ற

உலகில் மனிதத்தை

தேடி காலத்தை

கடத்தாதே..!


கடத்தினால்...!

காலவிரயத்தோடு

தொலைவதென்னவோ

உன் வாழ்வியலே...!!


23 அக்டோபர் 2020

வாழ்க்கை

 





வாழ்க்கை எப்போது அழகாகிறது


உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?


உயிரோடு இருப்பதா?


மகிழ்ச்சியாக இருப்பதா?


பணம் புகழைத்தேடி தலை தெறிக்க ஓடுவதா?


தோல்விகளில் கற்றுக் கொள்வதா?


வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?


தன்னலமற்ற அர்ப்பணிப்பா?


தத்துவங்களின் அணிவகுப்பா?


 இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.


இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.


தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.


மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கிறான் மனிதன்,


நம்மைவிட உடலில் பலசாலி யானை


நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை


நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.


இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.


நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.


பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை .


தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்… 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…

                       

 




21 அக்டோபர் 2020

மறக்காதீர்கள்

 வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது


*நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்*.


*ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர்  மதிக்கிறார்னு அர்த்தம்*


*நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்*.


*பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு*.


*ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல தருணங்களை நாம செலவிட்டோம்னு*.


 :


*வாழ்க்கை குறுகியது ஆனால் அழகியது* !


அன்பை மட்டுமே விதைப்போம்!


அன்பை மட்டுமே அறுவடை செய்து ஆனந்தமாக வாழ்வோம்!


20 அக்டோபர் 2020

சோகம்

 



எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம்.


வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான்.


கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது.


இதற்கு தான் சொல்வார்கள் கண்ணைத் திறந்து பாருங்கள் என்று. மனிதர்களில் இவர் நல்லவர் கெட்டவர் என்று வகைப்படுத்திக் கொள்கின்றோம். நிதர்சனம் யாதெனின் மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்று எவருமில்லை. இது செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. அதிலும் இது நல்லது இது கெட்டது என்று செயல்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாது. செயல் எமக்குச் சாதகமாக அமைந்து விட்டால் அது நல்லது இல்லையென்றால் அது கெட்டது இப்படித்தானே எடுத்துக் கொள்கின்றோம்.


பொய் என்கின்றோம், உண்மை என்கின்றோம் அதனை எப்படி வகைப்படுத்துகின்றோம்? ஒரு பக்கத்தில் பொய்யாக பார்க்கப்படுவது மறுபக்கத்தில் உண்மைக்குள் தொற்றியிருக்கும், இப்படித்தான் எதுவுமே அதனால்தான் அனைத்தையும் அதன் போக்கிலேயே அப்படியே பார்த்து விட்டோமானால் பிரச்சினைகள் ஏதுமில்லை.


வாழ்வில் கடந்தகாலம், அல்லது எதிர்காலம் இந்த இரண்டில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோமே தவிர இப்போது என்ன கிடைத்தது என்பதை சிந்திக்கவும் தவறிவிடுகின்றோம். உண்மையில் கடந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் (Illusion) வெறும் மாயை. அடடா நேற்று இப்படி இருந்தோமே அந்த சந்தோசம் இன்று இல்லையே என்று வாழ்வை புலம்புகின்றவர்களே அதிகம் தவிர, அந்த புலம்பல்களால், வேதனைகளால் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றோம்.


அதேபோல எதிர்காலம், இது இப்படி நடந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு, அச்சத்தில் உளன்றுகொண்டு இல்லாத ஒன்றை கற்பனைக்குள் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு பயத்தில் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கின்றோம்.


ஒரு விருந்து ஒன்றுக்காக ஆயிரங்களை செலவழித்து சென்ற ஒருவர், புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் “மெழுகுவர்த்தியுடன் இரவுணவை” ஆரம்பிக்கின்றார். (candle light dinner). அப்போது அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. ஆனால் இதனையே மின்சாரம் அற்ற இரவுப்பொழுது ஒன்றில், தன்னுடைய வீட்டிலேயே செய்துவிட மறுப்பார். அவ்வாறான மின்சாரமற்ற பொழுதில் இருளை திட்டிக் கொண்டு, இல்லாதவற்றைப் புலம்பிக்கொண்டு இருப்பாரே தவிர அதன் பொழுதை ரசித்துவிட மாட்டார். இப்படித்தான் இதில் இதில் மட்டும் தான் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நமக்கு நாமே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிக் கொண்டு இருப்பதை தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.


எம்மில் எத்தனை பேர் வாழ்வில் சோகங்களையும், கிடைக்காத எதிர்பார்ப்புகளையும் மட்டுமே நினைத்து வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம் எனப்பார்த்தால் ஏராளமானவர்கள் அப்படித்தான். என்றாலும் எதுவெல்லாம் கிடைத்துள்ளது அதனால் எத்தனை மகிழ்ச்சி கிடைத்தது என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை அடைந்து விடுவதேயில்லை காரணம் நாம் பார்க்கும் விதம் அப்படி இருக்கின்றது.


எதிர்காலத்தில் இப்படி இருக்கவேண்டும் எனச் சிந்திப்பது தவறான விடயமல்ல. ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று கடந்தகாலத்தோடு அதனை ஒப்பிட்டு அச்சப்படுவதில் வாழ்வு தொலைந்து போகுமே தவிற வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. இதனால்தான் இந்த நொடி ஆனந்தமே என்று வாழப்பழகிக்கொண்டால் அதில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும்.


எமக்கு தேவையான மகிழ்ச்சியும், வாழ்வும் எம்மிடம் மட்டுமே உள்ளது ஆனால் அதனை எற்று எங்கோ தேடி எதை எதையோ கற்பனைக்குள் புகுத்தி வாழ்வை புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து நம்மையும் தொலைத்து நமக்கு நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்பதே உண்மை.


நீண்ட நாள் போதைக்கு அடிமையான ஒருவன் அதில் இருந்து மீண்டு வருகின்றான். காரணம் அவன் மனத்திடம். இதனை நாம் அறிவுரையாக ஏராளமானோருக்கு கூறுகின்றோம். அதே போலத்தான் வாழ்வு நமக்காக கொடுத்த சந்தோசத்தை ஒதுக்கிவிட்டு இல்லாதவற்றை மனத்திற்கு கொடுத்து வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்.


இந்த காரணிகளில் முக்கியமானது காதல் என்றும் கூறலாம். ஒரு நேசம், காதல் அனைத்து மகிழ்வையும் தருகின்றது என்றால், அந்த காதல் தன்னையும் தன் சுற்றையும் உள்ள அனைத்திற்கும் மகிழ்வை, வாழ்வை தருகின்றது என்றால் அதுவே காதல் அதுவே நேசிப்பு. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மாயையிடம் சிக்கிக் கொள்கின்றோம்.


தேவையற்ற எதனையும் காலமோ வாழ்க்கையோ நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது இல்லை. பிடித்தலுக்கான எண்ணற்ற காரணங்கள் இருந்த போதும் வெறுத்தலுக்கான ஏதோ ஒரு சில காரணம் மட்டுமே மனதை ஆட்கொள்ளும். அது யாதார்த்தம்.


இங்கு எவருமே நூறு வீதம் மிகச் சரியானவர்கள் இல்லை. அடுத்த நிமிடமே வாழ்வை புதுப்பித்துக் கொள்ள முடியும் உத்தமம் அதுவே. சில சமயம் வாழ்வில் ஏராளமான முடிவுகளை எடுத்து இருக்கலாம் அது எமக்கும் எம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் வலிகளைக் கொடுத்திருக்கலாம். ஏன் எமக்கும் கூட. அது கடப்பு என்றும் கூற முடியும். இதுவரை நடந்தது போக இப்போதே வாழ்வை புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்துவிட முடியும்.


எப்போதுமே வாழ்வு தேங்கி விடுவதில்லை. நாம் செய்தது சரியா? பிழைகளைச் செய்து விட்டோமே என்று ஏராளமான கற்பனைகளை நமக்கு நாமே போட்டுக்கொண்டு எண்ணங்கள் சொல்வதைக் கேட்டு ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகிக் கொண்டு அதனை உண்மையென நம்பிக் கொண்டு வாழ்வில் இருந்து மீண்டுக் கொள்ளாமல் அதனையே தொற்றிக் கொண்டு வாழ்வையும் நமக்கான தருணங்களையும் வீணடித்துக் கொண்டு இருக்கின்றோம்.


இப்போதே மீண்டு விடலாம். சரிகளையும் தவறுகளையும் கோர்த்து இது இப்படி அது அப்படி என குழப்பத்திற்கு உள்ளாகி வாழ்வை தொலைக்கப் பார்க்கின்றோம். உண்மையில் இக்கணமே வாழ்வை வாழப்போகின்றேன் எனக்கானதையும் என் சார்ந்த அனைத்திற்கும் எது மகிழ்வோ அதனைச் செய்யப்போகின்றேன். இதுவரை என்பதையும் அந்த எண்ணங்களையும் தூரவிரட்டி புதிதுக்கு வாய்ப்பளித்து வாழ்வை வாழப்போகின்றேன் என வாழும்போது வாழ்வு பிறக்கின்றது.


உண்மையில் அதற்கான எமக்கான இடத்தை நாம் கொடுக்காமல் பிடிவாதமாக பொய்யாக வலிகளை சேர்த்துக் கொண்டு வசந்தத்தை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கின்றோம். இதில் முக்கியம் சரியானதையும் நமக்கானதையும் தேர்வு செய்துக் கொள்வது மாத்திரமே. அதனை விடுத்து எது எதனையோ கற்பனை செய்து இருக்கும் அனைத்தையும் இழந்து வாழ்வையும் உள்ள அனைத்து சந்தோசங்களையும் தொலைத்துக் கொள்வதும் ஒருவித கோழைத்தனமே.


எப்படி என்றாலும் இருக்கும் அனைத்தையும் அப்படியே கண்திறந்து பார்ப்போமானால் வாழ்வில் எப்போதுமே துன்பங்கள் ஏற்படுவதில்லை. கால்கள் இல்லாத ஒருவரை பார்க்கும் போது எமக்கு இருக்கின்றதே என்ற திருப்தி ஏற்படுமே, அப்படித்தான் இங்கு அனைத்துமே நம்மிடமே உள்ளது அதனை எடுத்துக் கொள்ளாமல் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதைத்தான் பலர் செய்கின்றார்கள்

ஏன் நாமும்தான்



அவமானம்

 


*சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!*


*என்னை*

*நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்*

*ஓர் ஆயுதம் தான் அவமானம்.*


**இது உண்மை என்பது போல்,*


*அனைவரின் வாழ்விலும்*

*ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.*


*நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,*

*செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.*


*அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.*


*அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,*


*பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!*


*நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?*


*மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,

19 அக்டோபர் 2020

கவலை

 கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.


    கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.


    கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்தில் மனிதனை ஆர்வத்தோடு இயங்க வைத்துக் கொண்டிருக்கும். சில நேரங்களில் விரக்தியில் படுகுழியில் தள்ளிவிடும்.


     கவலையில் வீழ்ந்து விடாமல் வீழ்கிற போதெல்லாமல் நம்பிக்கையுடனும், உற்சாகமாய் எழுந்துவிடுங்கள் பீனிக்ஸ் பறவையைப் போல். கவலையில் துன்பப்படும் எல்லோரும் உணர்ச்சி கொந்தளிப்பில் மூழ்கி விடுவது உண்டு. நன்றாக மூடப்பட்ட பாட்டிலில் காற்றைத் திணிப்பதைப் போன்று நமது உள்ளமாகிய பாட்டிலில் கவலைகளை அடைத்துத் திணித்துப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் உள்ளத்தில் இருக்கும் கவலைகளின் காரணமாகச் சோர்வு, தோல்வி மனப்பான்மை, வாழக்கையின் மேல் விரக்தி முதலியவைகள் உண்டாகும். உங்களுடைய கவலைகளை உங்களுடைய நண்பர்கள், மனைவி, பெற்றோர்கள் மற்றும் உங்களை விரும்பும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் கவலைகளின் சுமை குறையும்.


   கவலைப்படும்படி ஏதாவது நேர்ந்துவிட்டால் நம் கவலையிலிருந்து தப்பிச் செல்ல முயலவேண்டும். நண்பர்களுடைய வீட்டிற்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் அல்லது சினிமாவிற்கு செல்லாம். உல்லாசப் பயணம் போகலாம். இதுபோன்ற எண்ணற்ற வழிகளில் நாம் சிறிது நேரம் செலவிட்டு கவலையை மறக்க முயற்சி செய்ய வேண்டும். அந்த நிலையில் உள்ளத்திற்கு ஓய்வு கிடைக்கிறது. கவலையை எதிர்த்து போராட மனதில் உற்சாகம் பீறிடும்.


    அனைவருடைய உள்ளங்களிலும் எப்போதும் ஏதோ கவலைகள் குடிகொண்டிருக்கின்றன. கவலைப்படும் சமயங்களில் நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். அதாவது நான் எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இது தேவைதானா….? இப்படி கேட்டு பார்த்தால் கவலைப்படும் விஷயங்கள் பெரும்பாலானவை கவலைப்படத் தேவையற்ற சில அர்த்தமற்ற விசயங்களாக தென்படும். கவலைகள் மலையாக உருவெடுத்து, தன் மேல் அமர்ந்திருப்பதைப் போன்ற மனநிலையை வளர்த்தல் கூடாது. கவலைகளுடன் போராடி அவைகளை எப்படியும் வெல்ல முயற்சி செய்வது சாலச்சிறந்தது.


     எதற்கும் உற்சாகமிழந்து விடாதீர்கள். உலகம் இருக்கிறது.நாட்கள் இருக்கின்றன. எதை இழந்தாலும் எதிர்காலம் இருக்கிறது. வாழக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கின்றது. நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணத்தில் எதிர்படுகின்ற தடைகளும், போராட்டங்களும் தான் வாழ்க்கை. கவலைகளை வளர விடாதீர்கள்.


  ஒரு நாளும், ஒரு வாரமும், ஒரு மாதமும், ஒரு வருஷமும் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் இது நம்மால் முடியும், நிச்சயம் முடியும் என்கிற அழுத்தமான மனக்கட்டளையிடுங்கள். முதலில் பூ… பூக்கும் பிறகு காயாகி அதன்பின் தானே கனியாகும். எனவே எப்போதும் எதிலும் வெற்றியை குறி வைத்து செயல்படுங்கள். நிச்சயம் கனி கிடைக்கும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்.