இடுகைகள்

அமைதியான மனம் பெற

                                        1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்.. பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2.மறக்கவும்... மன்னிக்கவும்... இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. பாராட்டு...

குரங்கும் மனித வாழ்வும்

  குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும் முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.* *காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை. ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.* *அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.* *அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.* *இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.*  *ஆனால்,* *மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?* *மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?* *மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல… என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.* *இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.*  *இதில் புரிந்து கொள்வ...

நாம் தனியாக இல்லை

 *வானத்தைப்பாருங்கள் நாம் தனித்து இல்லை . இந்த பிரபஞ்சம் முழவதும் நம்மிடம் நட்பாக உள்ளது . கனவு காண்பவர்களுக்கும் , உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.* ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு *அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்தி பயணித்தால் ....* *அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம் மனிதனை கொண்டு போய்ச் சேர்க்கும் என்பது நிதர்சனம்..!!!!* *உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்....* *எடுத்த எடுப்பிலேயே என்னால் இது முடியுமா என்று எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்...* *தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது....* *போட்டியில் தோற்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானாவன்.* *முயன்றால் உங்களால் முடியும்...* *அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல...* *விடா முயற்சியினால் தான்...!!!!*   *#வாழ்க_வளமுடன்.*

உண்மைகள்

 தவிர்க்க முடியாமல்*  *சில இழப்புகள்.* *வெளிப்படுத்த*  *முடியாமல் சில* *உண்மைகள்.* *நம்ப முடியாமல்*  *சில துன்பங்கள்.*  *அனுபவிக்க*  *முடியாமல் சில*  *சந்தோஷங்கள்.* *இவை அனைத்தும்*  *நிறைந்ததுதான்*  *வாழ்க்கை...* *வாழ்க்கை*  *எல்லோருக்கும் சீராக* *சென்று விடுவதில்லை..* *ஏற்ற இறக்கம்*  *யாராலும் தவிர்க்க*  *முடியாது..* *தவறி விழும் நிலையிலும்*  *உங்கள் வேதனையை* *வெளிகாட்டாதீர்கள்..* *ஏனெனில்,* *உங்கள் வேதனையை*  *கொண்டாட.. இங்கு*  *ஒரு கூட்டமே காத்திருக்கிறது..!!* *உங்களை*  *நீங்களே செதுக்கி*  *கொண்டே இருங்கள்..* *வெற்றி பெற்றால்* *சிலை..!* *தோல்வி அடைந்தால்*  *சிற்பி..!!* *கடனாக இருந்தாலும் சரி..* *அன்பாக இருந்தாலும் சரி..* *திருப்பி செலுத்தினால்*  *தான் மதிப்பு..!!* *குறைகளை தன்னிடம்*  *தேடுபவன் தெளிவடைகிறான்..!* *குறைகளை பிறரிடம்*  *தேடுபவன் களங்கப்படுகிறான்..!!* *ஒருவர் எந்த காரியம்*  *செய்தாலும் அதில்*  *வெற்றி பெற முடியாமல்*  *போவதற்கு ஊக்கமின்மை*  *ஒரு பெரிய ...

மனமும் தன்னுணர்வும்

*மனம் ஒரு பிளவுபட்ட*  *கண்ணாடியைப் போன்றது ..!* *உணர்வுகள் பிளவுபட்டு*  *விடும்போது அவை*  *மனமாக மாறி விடுகிறது ..!* *நீங்கள் உள்ளே*  *பிளவு பட்டிருப்பதால்* *அவை வெளியே*  *வேறுபட்டு தெரிகின்றன ..!* *எதிர் நிலை இல்லாமல்*  *மனம் ஒரு பொருளைப்*  *புரிந்து கொள்வதில்லை ..!* *வேறுபாட்டின்* *வாயிலாகத்தான் எதையும்*  *மனம் பார்க்க பழகியுள்ளது ..* *இறப்பே இல்லையென்றால்* *வாழ்க்கையை நம்மால்*  *புரிந்து கொள்ளமுடியாது ..!* *கவலையே இல்லையென்றால்*  *நம்மால் சந்தோஷத்தை*  *புரிந்து கொள்ள முடியாது ..!* *மனதிற்கு எதிர்மறை*  *தென்படும் போதுதான்*  *எதையும் புரிந்து கொள்ளும் ..!* *இருப்பு நிலைக்கு* *எதிர்மறை*  *எதுவும் கிடையாது ..!* *மனம் எதிர்மறையின்*  *வாயிலாகத்தான்*  *இயங்கும் ..!* *ஆனால் இருப்புநிலை*  *ஒன்றையே சார்ந்தது ..!* *மனம் இரட்டை நிலை*  *கொண்டது ...

வலிகள் தான்.வாழ்க்கை

*வாழ்க்கையில்* *ஆயிரம் வலிகளும்,* *வேதனைகளும்,* *துன்பங்களும்* *இருக்கத் தான் செய்யும்.* *வாழ்க்கையை* *ரசித்து வாழ வேண்டும்*   *எல்லாம் கடந்தால் தான்* *சிகரங்களை அடைய முடியும்.* *வலிகளை* *ஏற்றுக் கொள்ளாத*  *வரையில்*  *வாழ்க்கையில்* *வளங்களைக்*  *காண முடியாது.* *பெரும்பாலான*  *வெற்றியாளர்களின்*  *சாதனைகளை*  *உரம் போட்டு வளர்ப்பதே* *அவர்களின்*  *பெருந்தோல்விகளும்*,  *பொறுக்க முடியாத* *வலிகளும் தான்.* *வலி வந்த போது* *தான் நாம் இந்த*  *பூமிக்கு வருகிறோம்.* *வலியோடு தான்* *நம் தாய் நம்மைப்* *பிரசவிக்கிறாள்.* *வலிகளால்* *நிரப்பப்பட்டது தான்* *இந்த வாழ்க்கை.* *உடற்பயிற்சி செய்யும்* *போது ஏற்படும்* *வலிகளை பொறுத்து* *கொண்டு மீண்டும் மீண்டும்* *பயிற்சி செய்யும் போது தான்*  *அழகான உடற்கட்டை*   *பெற முடிகிறது.* *இப்படித் தான்*  *இந்த வாழ்க்கையிலும்*  *வலிகளை ஏற்றுக் கொள்ளும்*  *போது தான் வளமான*  *வாழ்க்கை வாழ முடியும்.*

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?*

  ''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது! உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம். *''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''* ''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது. துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலு...