இடுகைகள்

 சிலர் எவ்வளவுதான் காயப்படுத்தினாலும் அவர்களை வெறுக்க முடிவதில்லை.... சிலவேளைகளில் எவ்வளவுதான் அழுது தீர்த்தாலும் வலிகள் ஆறுவதில்லை உறவுகள் நிலைக்க வேண்டுமென்றால் செய்யாத தவறை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது அந்த உறவு தொடர வேண்டுமென்றால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க வேண்டி இருக்கிறது கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்களுக்கு வார்த்தைகளால் கொலை செய்ய தெரிகிறது மௌனத்தை உணர்ந்து கொள்ள தெரியாதவர்களுக்கு வீண்பழி சுமத்த முடிகிறது புரிந்து கொண்டால் கோபத்திற்கான நியாயம் தெரியும் புரியவில்லை என்றால் அன்பின் ஆழம் கூட தெரியாது காயங்களை மற்றவர்களுக்கு காட்டிகொள்ளாமல் உள்ளுக்குள் தன்னைத்தானே வருத்திக்கொண்டு புன்னகையோடு கடந்து செல்லும் மனிதர்களில் நானும் ஒருவன்

சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு

  விழித்துக்கொள் மனிதனே.. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்..! ஆம்...! மனிதமில்லா உலகில் சொத்துக்களுக்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின் சோகங்களுக்கு இருப்பதில்லை..! காசு பணத்திற்கு இருக்கும்  மதிப்பு கூட  மனிதனின்  கண்ணீர்  துளிகளுக்கு இருப்பதில்லை..! அடாவடி  மனிதர்களுக்கு  இருக்கும்  மதிப்பு கூட  அன்பானவர்களுக்கு இருப்பதில்லை..! விழித்துக்கொள் மனிதனே..! சோகங்கள் ஒன்றும் சொத்துக்கள் அல்ல சேர்த்து வைப்பதற்கு அதை அன்றன்றே செலவு செய்துவிடு..! கண்ணீர் துளிகள் ஒன்றும் விலைமதிப்பற்றவையல்ல யாருக்கு வேண்டுமானாலும்  சிந்தி கொண்டிருக்க..! அன்பு ஒன்றும் அனாதையல்ல தகுதியற்றவரிடத்திலும்  காட்டி ஏமாந்து விட..! விழித்துக்கொள் மனிதனே..! இயந்திர  உலகிற்கு ஏற்ப இசைந்து வாழ  கற்றுக் கொள்..! மனிதாபிமானமற்ற உலகில் மனிதத்தை தேடி காலத்தை கடத்தாதே..! கடத்தினால்...! காலவிரயத்தோடு தொலைவதென்னவோ உன் வாழ்வியலே...!!

வாழ்க்கை

  வாழ்க்கை எப்போது அழகாகிறது உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா? மகிழ்ச்சியாக இருப்பதா? பணம் புகழைத்தேடி தலை தெறிக்க ஓடுவதா? தோல்விகளில் கற்றுக் கொள்வதா? வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா? தன்னலமற்ற அர்ப்பணிப்பா? தத்துவங்களின் அணிவகுப்பா?  இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது. இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம். தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை....

மறக்காதீர்கள்

 வாழ்க்கையில நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். ஆனா சில நேரங்களில் அதை நம்மால் புரிஞ்சிக்க முடியாமப் போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ, யாரைப் பத்தியும் எந்த ஒரு தவறான முடிவுக்கும் வந்துடக் கூடாது *நாம சாப்பிட ரெஸ்டாரெண்ட் போகும் போது, நம்மில் ஒருத்தர் முந்திக் கொண்டு காசு கொடுக்க முன் வந்தா, காரணம் அவருக்குப் பணக்காரர் என்ற திமிர் என்று அர்த்தமில்லை, பணத்தை விட நம்ம நட்பை அவர் அதிகமா மதிக்கிறார்னு அர்த்தம்*. *ஒரு தவறுக்கு, ஒருவர் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேக்கிறார்னா அவர் தான் தப்பு பண்ணிருக்கார்ன்னு அர்த்தமில்லை, ஈகோ(Ego) பெரிசில்ல; உறவு தான் பெரிசுன்னு அவர்  மதிக்கிறார்னு அர்த்தம்* *நம்ம கண்டுக்காம விட்டாலும் நமக்கு ஒருவர் ஃபோன் / மெஸேஜ் பண்றார்னா அவர் வேலை வெட்டி இல்லாதவர்னு அர்த்தமில்லை, நாம் அவர் மனசில எப்பவும் இருக்கோம்னு அர்த்தம்*. *பின்னொரு காலத்தில் நம்ம புள்ளைங்க நம்ம கிட்ட கேட்கும் : யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கள்லாம்னு*. *ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்ல நேரலாம் : அவங்க கூடத் தான் சில நல்ல...

சோகம்

  எம்மில் ஏராளமானோர் ஏதோவோர் சோகத்தில் தான் வாழ்வை கடத்திக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் அதற்கான காரணம் என்ன என்று எம்மிடமே கேட்டுக் கொண்டால் எதுவுமே இல்லை என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வாழ்வை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில், எந்தவொரு விடயத்தையும் நாம் பார்க்கும் விதத்தில் தான் சோகமோ சந்தோசமோ இருக்கின்றதே தவிர எதுவுமே எம்மைத் தாக்கும் காரணியாக இருந்து விடாது. “கயிறை பாம்பாகப் பார்த்தால் பாம்பாகவும், வெறும் கயிறாகப் பார்த்தால் கயிறாகவும் தெரியும்” என்று ஒரு கதை சொல்வார்களே அப்படித்தான். கண்முன்னே தெரியும் ஒரு விடயத்தை அப்படியே பார்க்காமல் “இது இப்படி இருக்குமோ, இல்லை அப்படி இருக்குமோ” என்று பல்வேறு காரணிகளை நாமே கேட்டுக் கொண்டு உண்மைகளை பார்க்க மறுத்து பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டு இருக்கின்றோம். உண்மையில் எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எந்தவொரு விடயமும் நாம் எதிர்பார்ப்பது போலவே நடந்து விட்டால் அதில் மகிழ்ச்சி இல்லையென்றால் புலம்பல். காரணம் எதனையும் எதிர்பார்ப்புகளோடு பிணைத்து வாழ்ந்து பழகிவிட்டபின்னர் உண்மைகளை எப்படி புரிந்து கொள்வது. இதற்கு தான் சொல்வார்கள் ...

அவமானம்

  *சாதிக்க விருப்பமா?* *அவமானப்படுங்கள்!* *என்னை* *நானே, யார் என்று புரிய எனக்குத் தேவைப்படும்* *ஓர் ஆயுதம் தான் அவமானம்.* **இது உண்மை என்பது போல்,* *அனைவரின் வாழ்விலும்* *ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.* *நம் மீது குப்பையையும் சாணத்தையும் கொட்டுகின்றனரே  என்று,* *செடி ஒரு நாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை.* *அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.* *அந்தக் குப்பையை தனக்கான உயிர் சத்தாக எடுத்துக் கொண்டு,* *பூக்களை, காய், கனிகளைத் தருவது இல்லையா!* *நாம் அச்செடிப் போல இருக்க வேண்டாமா?* *மற்றவர்களின் ஏளனங்களையும் அவமானங்களையும் உரமாக ஏற்று,

கவலை

 கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.     கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.     கவலையற்ற மனிதர் உலகில் உண்டா? எல்லாருக்கும் கவலைகள் உண்டு. எதற்காக கவலை …? எப்படிப்பட்ட கவலை? என்பது மட்டும் மனிதருக்குள் மாறுப்படும். ஒரு நேரத்த...